அண்ணா பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளர் வேலை!
Anna University Recruitment 2020: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிதாக வேலைவாய்ப்பு அறிவிக்கை வெளியாகியுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் புரொபஷனல் அசிஸ்டெண்ட், கிளார்க் அசிஸ்டெண்ட், பியூன் பதவிகளுக்கு 3 பேர் தேர்வு செய்யப்படுகின்றனர்.
சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைழக்கழகத்தில் தினசரி ஊதியம் அடிப்படையில் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இது தொடர்பாக டிசம்பர் 30 ஆம் தேதியிட்ட அறிவிக்கையின்படி, மொத்தம் 3 காலியிடங்கள் உள்ளது.
புரொபஷனல் அசிஸ்டெண்ட் III CSE/IT இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் CSE/IT பிரிவில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். இதற்கு நாள் ஒன்றுக்கு 627 ரூபாய் சம்பளம் வழங்கப்படும்.
பியூன் 2 காலியிடங்கள் உள்ளது. இதற்கு நாள் ஒன்றுக்கு 379 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. எட்டாம் வகுப்பு தேர்ச்சி, ஐடிஐ படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
மேற்கண்ட பணியில் சேருவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், https://www.annauniv.edu என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று அதனை பூர்த்தி செய்து ஜனவரி 4ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதாரர்கள் தங்களுடைய புகைப்படம், கல்விச்சான்றிதழ் நகல், இருப்பிடச் சான்று, வகுப்பு சான்றிதழ் ஆகியவை இணைத்து அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
The Director, Centre for Entrance Examinations, Anna University,
Chennai – 600 025
இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.
Important link
NOTIFICATION 1 LINK: CLICK HERE
Notification 2 Link : Click Here
Charity trust near me: Kanchipuram, tamilnadu, Ph :9087808501 CSR, NGO DERPAN, Form 80G Tax Free… Read More
Madras High Court has released the recruitment notification No: 72 / 2025 & 73 /… Read More
கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை மத்திய அரசு கடந்த 2005-ம் ஆண்டு… Read More
தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 1,300 ஊராட்சி செயலா் பணியிடங்கள் 2 மாதங்களில் நிரப்பப்படும் என்று ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை… Read More
சென்னை: பதிவுத்துறையில் சொத்து சம்பந்தமான அசல் ஆவணங்கள் இன்றி பதிவு செய்ய முடியாமல் பாதிக்கப்பட்ட பொது மக்களால் தொடுக்கப்பட்ட வழக்கில்… Read More
Bank Account பல போலி பரிவர்த்தனைகள் நடந்தால் அபராதம் விதிக்கப்படும், ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்திருக்க முடியாது. ரூ.10,000 அபராதம்… Read More