Advertisement
GOVT JOBS

அரசு பள்ளிகளில் காலி பணியிடம்: விபரங்களை சேகரிக்க உத்தரவு

ஜூன் 1 நிலவரப்படி, அரசு பள்ளிகளில் உள்ள பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்கள் குறித்த விபரங்களை அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில், ஓய்வு பெறுவதால் ஏற்படும் ஆசிரியர் காலிப்பணியிடங்களை, பணிமாறுதல் மற்றும் பதவி உயர்வு மூலம் நிரப்புவது வழக்கம். நடப்பு ஆண்டு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஓய்வு பெறும் வயது 59 ஆக அதிகரிக்கப்பட்டது. இதனால், நடப்பு கல்வியாண்டில் ஓய்வு பெறும் ஆசிரியர்களின் எண்ணிக்கை மிக குறைவாகவே உள்ளது. இருப்பினும், கல்வியாண்டு துவங்க உள்ள நிலையில், அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடம் குறித்த விபரங்களை, அறிக்கையாக சமர்ப்பிக்க, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதில், ஏற்கனவே பள்ளியில் உபரி பணியிடம் இருந்தாலோ, கூடுதல் பணியிடம் தேவைப்பட்டாலோ, அவற்றை காலிப்பணியிடமாக கருதக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில், நிர்வாகம் மற்றும் தோட்ட பராமரிப்பு பணியாளர் காலியிடங்களை நிரப்ப, பள்ளி கல்வி இயக்குனரகத்துக்கு, அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகம் முழுவதும், 37 ஆயிரம் அரசு பள்ளிகள் செயல்படுகின்றன. அவற்றில், 24 ஆயிரம் தொடக்க பள்ளிகள், 7,000 நடுநிலை பள்ளிகள், 3,100 உயர்நிலை மற்றும் 3,050 மேல்நிலை பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில், 2.26 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். பள்ளிகளின் நிர்வாக பணி, வளாக பராமரிப்பாளர், காவலாளி உள்ளிட்ட பதவிகளில், சில பள்ளிகளில் மட்டுமே ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


நிர்வாக பணி, எழுத்தர் போன்ற பணிகளுக்கு, ஆசிரியர்களே பயன்படுத்தப்படுகின்றனர். அதனால், பள்ளிகளில் ஆசிரியர்களின் வகுப்பு எடுப்பது பாதிக்கப்படுகிறது. இதை தடுக்கும் வகையில், அனைத்து பள்ளிகளிலும், நிர்வாக பணியாளர் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு ஆட்களை நியமிக்க, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார்.


இதன்படி, பள்ளிகளில் பதிவு எழுத்தர், அலுவலக உதவியாளர், வளாக பராமரிப்பாளர், தோட்ட பராமரிப்பாளர், காவலாளி உள்ளிட்ட பதவிகளில், புதிய ஆட்களை நியமிக்க, பள்ளி கல்வித்துறைக்கு அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர்.

admin

Recent Posts

மழை நீரை விளைநிலங்களிலேயே சேமிக்க பண்ணைக்குட்டைகள்

தமிழகத்தில் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருவதால் விவசாயிகள் தங்களின் விளை நிலங்களில், பண்ணைக்குட்டைகள் (Farm Pond) அமைத்து மழை… Read More

1 day ago

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க விண்ணப்பிக்கலாம்

சென்னை: மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க, வரும் 21ம் தேதி வரை… Read More

1 day ago

இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்….!

Child Protection Scheme | இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்தினருக்கு ரூ.50,000 கொடுக்கும் தமிழ்நாடு அரசின் திட்டத்.. தமிழ்நாடு… Read More

1 week ago

கிரெடிட் கார்டுகள் மூலம் MSME-களுக்கு கடன்கள்; யாருக்கு, எவ்வளவு கிடைக்கும்?

கிரெடிட் கார்டுகள் மூலம் MSME-களுக்கு கடன்கள்; யாருக்கு, எவ்வளவு கிடைக்கும்?நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2025 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில்,… Read More

1 week ago

Govt Is Giving 10 Lakh Rupees Easy Loan To Youth Under This Scheme Aadhaar Card Needed

ஆதார் கார்டு இருந்தாலே போதும்.. ரூ. 10 லட்சம் கடன் கிடைக்கும்.. உங்களுக்கும் வேண்டுமா?உங்களுடைய ஆதார் கார்டு இருந்தால் போதும்..… Read More

2 weeks ago

பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.5,000 வழங்கும் மத்திய அரசு; PM Internship திட்டத்தின் இரண்டாம் கட்ட விண்ணப்பம் தொடக்கம்!

கல்லூரி படிப்பை முடித்து வேலைவாய்ப்புகள் பெறும் வகையில், மத்திய அரசு பிரதமர் பயிற்சி திட்டத்தை தொடங்கியது. இதன் மூலம் இந்தியாவின்… Read More

2 weeks ago