Advertisement
PRIVATE JOBS

தமிழகத்தில் 4 புதிய தொழில் நிறுவனங்கள் முதலீடு சுமாா் 4 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள்

தமிழகத்தில் நான்கு புதிய தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்யவுள்ளன. இதன்மூலம், சுமாா் 4 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கப்பெறும். தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், நான்கு முக்கிய தொழில் நிறுவனங்கள் தங்களது தொழில்களைத் தொடங்குவதற்கான ஒப்புதல்கள் அளிக்கப்பட்டன.

நான்கு நிறுவனங்களும் மொத்தமாக ரூ.2,500 கோடி அளவுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் முதலீடுகளைச் செய்யவுள்ளன.

எந்தெந்த நிறுவனங்கள்: சென்னையை அடுத்த காஞ்சிபுரம் அருகே டைசெல் காா்ப்பரேஷன் நிறுவனம் ரூ.900 கோடியில் முதலீடுகளைச் செய்கிறது. இதேபோன்று, காகித அட்டை உற்பத்தித் தயாரிப்பில் ஐ.டி.சி., நிறுவனம் ஈடுபடவுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் இதற்கான ஆலை அமைக்கப்படுகிறது. இந்த ஆலையானது ரூ.515 கோடியில் அமையவுள்ளது. இந்த ஆலையின் மூலமாக 330 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

மேலும், மின்சார வாகனங்கள் மற்றும் அதில் பயன்படுத்தக் கூடிய மின்கலன்களுக்கான உற்பத்தித் துறையில் ஏத்தா் எனா்ஜி பிரைவேட் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம் தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் மின்சார வாகனம் மற்றும் மின்கல உற்பத்திக்காக ரூ.600 கோடி முதலீடு செய்யவுள்ளது. இந்த நிறுவனத்தின் முதலீடு காரணமாக, 2 ஆயிரத்து 925 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதேபோன்று, திருவள்ளூா் மாவட்டம் தோவாய்கண்டிகையில் பிலிப்ஸ் நிறுவனத்தின் காா்பன் பிளாக் நிறுவனம் ரூ.600 கோடி முதலீடுகளைச் செய்யவுள்ளது. இந்த முதலீடுகள் காரணமாக சுமாா் 300 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்த நான்கு புதிய நிறுவனங்களின் முதலீடுகளால் தமிழகத்தில் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

admin

Recent Posts

இலவசமாகவே ஓட்டுநர் உரிமம்.! ஒரு ரூபாய் செலவு இல்லை – தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு

தமிழக அரசு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இலவச கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி அளிக்கிறது. 16 மையங்களில் ஆண்,… Read More

3 hours ago

மகளிர் உரிமை தொகை போல் அடுத்த திட்டம்.. பெண்களுக்கு ரூ.5 லட்சம் தரும் அரசு.. விண்ணப்பிப்பது எப்படி?

https://drive.google.com/file/d/1sutlDtmCKJ0g8JMbwe9GAyfBuKTU58gV/view?usp=sharing Website Link 1: https://application.tahdco.com/ Website Link 2 : https://fast.tahdco.com/ website Link 3 : http://tahdco.com/tamil/index.php… Read More

2 days ago

தமிழக அரசு தரும் இலவச பட்டா பெற விண்ணப்பிப்பது எப்படி ? ரூல்ஸ் தெரிந்தால் இப்போது சூப்பர் வாய்ப்பு

சென்னை: பலரும் பல வருடங்களாக சில பகுதிகளில் குடியிருந்து வருவார்கள். ஆனால் அவர்களுக்கு பட்டா கிடைத்திருக்காது. பட்டாவை பொறுத்தவரை மக்கள்… Read More

2 days ago

மழை நீரை விளைநிலங்களிலேயே சேமிக்க பண்ணைக்குட்டைகள்

தமிழகத்தில் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருவதால் விவசாயிகள் தங்களின் விளை நிலங்களில், பண்ணைக்குட்டைகள் (Farm Pond) அமைத்து மழை… Read More

4 days ago

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க விண்ணப்பிக்கலாம்

சென்னை: மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க, வரும் 21ம் தேதி வரை… Read More

4 days ago

இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்….!

Child Protection Scheme | இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்தினருக்கு ரூ.50,000 கொடுக்கும் தமிழ்நாடு அரசின் திட்டத்.. தமிழ்நாடு… Read More

2 weeks ago