பத்திரிக்கை செய்தி (தினகரன்): தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாட்டிலேயே கொரோனா பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் 3-வது இடத்தில உள்ளது. அனால், போதிய டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் இல்லாததால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை வேகப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, மாநிலம் முழுவதும் காலியாகவுள்ள 2715 சுகாதார ஆய்வாளர்கள் கிரேடு-2 (மருத்துவ பணியாளர்கள்) பணியிடங்களை நிரப்ப சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி அனைத்து மண்டல துணை இயக்குனர்களுக்கு ஏழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பாவது:
கொரோனா தடுப்பு பணிகளை வேகக்கப்படுத்தும் வகையில் பொதுசுகாதாரத்துறை சார்பில் 2715 சுகாதாரத்துறை ஆய்வாளர் பணியிடங்கள் (ஆண்கள்) தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். அதன்படி இந்த பணியிடங்கள் காலியாக உள்ள செங்கல்பட்டு 73, காஞ்சிபுரம் 48, திருவள்ளூர் 80, திருப்பத்தூர் 61, வேலூர் 62, கடலூர் 74, சேலம் 98, மதுரை 79, ஈரோடு-83, கோவை-93, திருப்பூர் 73, விழுப்புர-69, கிருஷ்ணகிரி-50, நெல்லை-63, தூத்துக்குடி-53, கோவில்பட்டி-29, அரியலூர்-39, பெரம்பலூர்-23, கரூர்-43, தஞ்சாவூர்-59, திருச்சி-53 என மொத்தம் 2715 பேர் 3 மாதம் தற்காலிக பணி அமர்த்தப்படுகின்றனர்.
இதற்கு, பிளஸ் 2 வகுப்பில் உயிரியல் மற்றும் தாவரவியல், உயிரியல் பிரிவில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். தமிழ் வழியில் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மருத்துவ பணியாளர் (ஆண்கள்) / சுகாதார ஆய்வாளர் பதவிக்கு தகுதியான பல்கலை மற்றும் அரசின் அனுமதி பெற்ற நிறுவனத்தில் 2 ஆண்டுகள் மருத்துவமனை பணியாளர்களுக்கான பாடப்பிரிவை தேர்வு செய்து படித்து இருக்க வேண்டும். இந்த பணியாளர்களுக்கு ரூ. 20,000/- சம்பளமாக தரலாம். அவுட் சோர்சிங் முறையில் உடனடியாக இந்த பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Application form : Click Here
தமிழ்நாட்டின் போராட்டம் வெற்றி.. நகை அடகு விதிகளை.. நிறுத்தி வைக்க ஆர்பிஐக்கு மத்திய அரசு பரிந்துரை சென்னை: நகைக் கடனுக்கான… Read More
சென்னை: தமிழ்நாடு முழுவதும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை… Read More
1. அடமானம் வைக்கும் தங்கம் நகையின் மதிப்பில் 75 சதவிகிதம் மட்டும் தான் கடனாக வழங்கப்படும். அதாவது ரூ.1,000 மதிப்புள்ள… Read More
மே 24, 2025 இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய சுழுக்கணி அறிவிப்பு (மூத்த ஆட்கள்) இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள்… Read More
ஆண்களுக்கு மாதம் 5000 ரூபாய் உதவித்தொகை - எப்படி பெறுவது? அரசு, பொருளாதார ரீதியாக பின்தங்கிய மற்றும் ஆதரவற்ற நபர்களுக்கு… Read More
பிளஸ் டூ படித்த மாணவர்களுக்குப் பயன்படும் சான்றிதழ்கள் குறித்து மேலும் சில விவரங்கள்: தமிழ்நாட்டைச் சேர்ந்த முதல் தலைமுறை பட்டதாரி… Read More