Advertisement
GOVT JOBS

தேசிய தகவல் மையத்தில் புதிய வேலைவாய்ப்பு

இத்திய அரசின் தகவல் மையத்தில் நிரந்தரமான அரசு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 495 க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிப்பவர்கள் எந்தவித அனுபவம் பெற்றிருக்க தேவையில்லை. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த வேலைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைவாய்ப்பை நீங்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி தற்போது மாற்றப்பட்டுள்ளது. நீங்கள் இந்த வேலைவாய்ப்பிற்கு ஏப்ரல்30 வரை விண்ணப்பிக்கலாம். முறையான கல்வித் தகுதியும் வயது வரம்பும் உடையவர்கள் இந்த வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்.


வேலைவாய்ப்பு விவரம்:-
அமைப்பு:- தகவல் மையம்/Informtion Centre

வகை:- மத்திய அரசு

விண்ணப்பிக்க கடைசி நாள்:-30.04.2020

விண்ணப்பிக்கும் முறை:- ஆன்லைன்

தேர்ந்தெடுக்கும் முறை:-
இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் OMR தாளில் வைக்கக்கூடிய எழுத்துத்தேர்வு முறையாக தேர்வு செய்யப்படுவார்கள். பிறகு Documents Verification செய்யப்பட்டு இந்த வேலையில் பணி அமர்த்தப்படுவார்கள்.

பணியிடம்:-

இது ஒரு மத்திய அரசு பணி என்பதால் தேர்வு செய்யப்படுபவர்கள் இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் பணியமர்த்த படலாம்.

விண்ணப்ப கட்டணம்/ கல்வித் தகுதி/ வயது வரம்பு/ விண்ணப்பிக்கும் முறை மேலும் சில தகவல்களை கீழே காணலாம்.

பணிகளும் அதன் விபரங்களும்:-
இதில் இரண்டு வகையான பணிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த இரண்டு வகையான பணிகளுக்கும் தனித்தனியான காலிப்பணியிடங்கள் இட ஒதுக்கீடு வாரியாக (Communal Rotation) கொடுக்கப்பட்டுள்ளது.

1.Scientist-B- இதில் மொத்தமாக 288 காலி பணியிடங்கள் உள்ளன.

2.Scientific Technical Assistant- இதில் மொத்தமாக 207 காலி பணியிடங்கள் உள்ளது.

மேற்கண்ட இரண்டு பணிகளுக்கும் இடஒதுக்கீடு மூலமாக தனித்தனியாக காலிப்பணியிடங்கள் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதனை தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்ட அறிவிப்பை பார்க்கவும்.

கல்வித் தகுதி:-
மத்திய அரசு வேலைதான் வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் நமது அரசு கொடுக்கப்பட்ட முறையான கல்வித் தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்.

இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க போகிறவர்கள் Degree சம்மந்தப்பட்ட துறையில் பெற்றிருந்தால் போதுமானது.

எடுத்துக்காட்டாக,

1.A Pass In Engineering

2.A Pass In Msc/MS/MCA/B.E/B.Tech போன்றவற்றை படித்தவர்கள் இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள். மேலும் கூடுதல் தகுதிகளை தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்ட அறிவிப்பை நன்கு படித்து பார்க்கவும்.

வயது வரம்பு:-
இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால் அரசு கொடுக்கப்பட்ட வயது வரம்புகளை பெற்றிருக்கவேண்டும்.மேற்கண்ட பணிகளுக்கு 21 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் கூடுதலாக இதில் சில வகுப்பினருக்கு வயது தளர்வு களும் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்ட அறிவிப்பை பார்க்கவும்.

சம்பள விவரம்:-
இந்த வேலைவாய்ப்பிற்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத சம்பளம் ரூ.35,400/- முதல் ரூ.177,000/- வரை கொடுக்கப்படும் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் சம்பளத்திற்கு படிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்ட அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:-
Step 1: Registration With Email id

Step2: Submission Of Application Details

Step3: Payment Of Application Fee Online(If Applicable,see section 4.3 for details)

அறிவிப்பைப் பார்த்து நன்கு படித்தபிறகு விண்ணப்பிக்கவும்.

தேர்வு செய்யும் முறை:-

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் OMR sheet மூலம் வைக்கக்கூடிய எழுத்துத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். பின்பு சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள்.

தேர்வு நடைபெறும் இடம்:-
இந்த வேலைக்கான எழுத்துத் தேர்வு இந்தியாவில் உள்ள மிகப்பெரிய மாநகரங்களில் நடத்தப்படுகிறது. நமது தமிழ்நாட்டில் மாநகரம் சென்னையில் Examination Center அமைக்கப்படுகிறது. தமிழ்நாட்டிலிருந்து இந்த வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் சென்னையில் எழுத்து தேர்வு எழுதவேண்டும்.

IMPORTANT LINKS

NOTIFICATION : DOWNLOAD

ONLINE LINK : CLICK HERE

admin

Recent Posts

“வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை” – முழுமையான தகவல் (தமிழ்நாடு)

இந்த உதவித் தொகை மத்திய அரசு திட்டம் அல்ல; இது தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையினால் நடத்தப்படும்… Read More

1 week ago

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி இனி சாத்தியமில்லை? ₹25,000 கோடி புள்ளிவிவரம் சொல்லும் உண்மை

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் என்றாலே மக்களின் முதல் எதிர்பார்ப்பு என்ன?👉 “5 சவரனுக்குக் கீழ் நகைக்கடன் தள்ளுபடி வருமா?” நகைக்கடன்… Read More

2 weeks ago

Indian Post Office Recruitment 2025

Indian Post Office invites Online applications for the recruitment of 28740 Gramin Dak Sevaks (GDS)… Read More

1 month ago

PM SVANidhi : தெருவோர வியாபாரிகளுக்கு குட்நியூஸ்! பிஎம் ஸ்வாநிதி 2030 வரை நீட்டிப்பு

PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More

2 months ago