பிரதமரின் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் உங்களால் ரூ.6000 வரை பணம் பெற முடியுமா என்பதை அறிந்து கொள்வதற்கான வழிமுறைகளை இப்பதிவில் காணலாம்.
நாட்டு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் விவசாயிகள் பயன்பெறும் வகையில் கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி அன்று கிசான் சம்மன் நிதி என்னும் திட்டத்தை அறிமுகம் செய்தார். இந்த திட்டம் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 மூன்று தவணையாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயி குடும்பங்களுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2000 வீதம் ஆண்டுக்கு ரூ.6000 மூன்று தவணையாக பிரித்து வழங்கப்பட்டு வருகிறது.
இந்த தொகையானது விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி கடந்த மே மாதம் 14 ஆம் தேதி அன்று ரூ.2000 விவசாயிகள் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. இதுவரை சுமார் 10 கோடி விவசாயிகளுக்கு சுமார் ரூ.19 ஆயிரம் கோடி வரை இந்த திட்டத்தின் கீழ் நிதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த திட்டத்தின் கீழ் உங்களால் பணம் பெற முடியுமா என்பதை அறிந்து கொள்ள கீழுள்ள வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
பிரதமர் கிசான் சம்மன் நிதி இணையதளமான pmkisan.gov.in என்ற தளத்திற்கு செல்ல வேண்டும்.
அதில் உள்ள Beneficiary Status என்னும் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
அதில் உங்கள் ஆதார் எண் அல்லது வங்கி கணக்கு எண் அல்லது உங்கள் மொபைல் எண் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பதிவு செய்ய வேண்டும்.
பின் Get Data என்னும் ஆப்ஷனை கிளிக் செய்தால் அதற்கான விவரங்களை உங்களால் காண முடியும்.
The Staff Selection Commission (SSC) has officially uploaded the SSC Combined Graduate Level Notification 2025… Read More
இந்திய விமான நிலைய ஆணையத்தின் கார்கோ லாஜிஸ்டிக்ஸ் & அலைடு சர்வீசஸ் கம்பெனி லிமிடெட்டில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. (AAICLAS)என்ன… Read More
தமிழ்நாட்டின் போராட்டம் வெற்றி.. நகை அடகு விதிகளை.. நிறுத்தி வைக்க ஆர்பிஐக்கு மத்திய அரசு பரிந்துரை சென்னை: நகைக் கடனுக்கான… Read More
சென்னை: தமிழ்நாடு முழுவதும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை… Read More
1. அடமானம் வைக்கும் தங்கம் நகையின் மதிப்பில் 75 சதவிகிதம் மட்டும் தான் கடனாக வழங்கப்படும். அதாவது ரூ.1,000 மதிப்புள்ள… Read More
மே 24, 2025 இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய சுழுக்கணி அறிவிப்பு (மூத்த ஆட்கள்) இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள்… Read More