சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோவில் இருந்து விப்ரோவில் பிசிஏ, பிஎஸ்சி படிப்பை முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு சேரும்போதே ஜாயினிங் போனஸாக ரூ.75 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பம் செய்ய செப்டம்பர் 30ம் தேதி கடைசி நாளாகும்.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்று விப்ரோ டெக்னாலஜிஸ் (Wipro Technologies). இந்த நிறுவனத்தில் இருந்து அவ்வப்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது.
அந்த வகையில் தற்போது விப்ரோவில் Wipro’s Work Integrated Learning Program (WILP) 2024 and 2025 என்ற பெயரில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும். பிசிஏ, பிஎஸ்சி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பிஎஸ்சி என்றால் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, கணிதம், ஸ்டேட்டிஸ்டிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இயற்பியல் உள்ளிட்ட படிப்புகளை 2024, 2025ம் ஆண்டுகளில் முடித்திருக்க வேண்டும்.
மேலும் 10ம் வகுப்பு, பிளஸ் 2 படிப்புக்கு பிறகு டிகிரி படிப்பை 60 சதவீத மதிப்பெண் அல்லது 6.0 CGPA என்று முடித்திருக்க வேண்டும். இதுதவிர சில கண்டிஷன்கள் உள்ளன. அதாவது டிகிரி படிப்பை கண்டிப்பாக கல்லூரியில் படித்திருக்க வேண்டும். 10, பிளஸ் 2 படிப்பை வேண்டுமானால் தொலைதூர கல்வி மூலம் படித்திருக்கலாம். ஒரு அரியர் இருந்தாலும் விண்ணப்பம் செய்யலாம். ஆனால் பணிக்கு தேர்வாவதற்குள் அதனை முடித்திருக்க வேண்டும்.
அதேபோல் டிகிரி படிப்பின்போது கண்டிப்பாக ஒரு பாடத்தை Core Mathematics-ஆக படித்திருக்க வேண்டும். Business Maths & Applied Matheatics பாடங்கள் இதில் வராது. பள்ளி படிப்பில் இடைவெளி என்பது இருக்கலாம். ஆனால் கல்லூரி படிப்பில் இடைவெளி என்பது இருக்க கூடாது.
பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஜாயினிங் போனஸாக (Joining Bonus) ஆக ரூ.75 ஆயிரம் வழங்கப்படும். சம்பளம் என்பது Stipend முறையில் வழங்கப்பட உள்ளது. அதன்படி முதல் ஆண்டு Stipend ஆக ரூ.15,488 வழங்கப்படும். 2வது ஆண்டு ரூ.17,553, மூன்றாவது ஆண்டு ரூ.19,618, 4வது ஆண்டு ரூ.23 ஆயிரம் வரை வழங்கப்படும். எம்டெக் படிப்பை படிக்க வாய்ப்பு என்பது வழங்கப்படும்.
இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் பணிக்கு தேர்வாகும் நபர்கள் 60 மாதம் சர்வீஸ் (5 ஆண்டு) அக்ரிமென்ட் செய்து கொள்ள வேண்டும். இதனால் பணியை விட்டு 5 ஆண்டுக்குள் நிற்கும்போது அவர்கள் கட்டாயம் விப்ரோ நிறுவனத்துக்கு Joining Bonus on Pro Rata basis-ல் திரும்ப செலுத்த வேண்டும்.
இது ஒரு PAN India பணியாகும். இதனால்நம் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் பணி நியமனம் செய்யப்படலாம். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விப்ரோவின் இணையதளம் சென்று செப்டம்பர் மாதம் 30ம் தேதி நள்ளிரவு 1.59 மணிக்குள் ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம்.
இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் 3 ரவுண்ட்டுகள் மூலம் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். முதல் ரவுண்ட்டின் பெயர் Online Assessment. இதில் Verbal-ல் 20 கேள்வி, Analytical-ல் 20 கேள்வி, Quantitative-ல் 20 கேள்விகள் கேட்கப்படும். மேலும் Written Communication-ல் 20 நிமிடங்கள் வரை நடைபெறும். ரவுண்ட் 2வில் பிசினஸ் டிஸ்கசன், ரவண்ட் 3ல் எச்ஆர் டிஸ்கஷன் இருக்கும். இந்த 3 ரவுண்ட்டிலும் செலக்ட் ஆவோர் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை; 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்அரசு வழக்கு துறையின் தமிழ்நாடு அரசு தலைமை… Read More
ICMR RECRUITMENT 2025 Read More
பொது தகவல்கள் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் லிமிடெட்bTAMCO LOAN இந்தத் திட்டத்தின் கீழ், தொழில் தொடங்க, தொழில்… Read More
The Combat Vehicles Research and Development Establishment (DRDO CVRDE) has released an official notification for… Read More
தமிழ்நாட்டில் டிராக்டர் வாங்குவதற்கான மானியம் பெற, விவசாயிகள் தமிழ்நாடு அரசின் வேளாண்மை இயந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தில்,… Read More