விரைவில் நற்செய்தி! பெட்ரோல் விலை லிட்டருக்கு 20 ரூபாய் குறையும்!
முழுவதும் பெட்ரோல் விலை குறைக்கப்படும் என மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி சமீபத்தில் அறிவித்தார். அதாவது கணிசமான அளவில…
மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்திருக்கும் நற்செய்தியால் மக்களை மகிழ்ச்சி கடலில் மிதக்க விட்டிருக்கிறது. அந்த நற்செய்தி என்னவென்றால், பெட்ரோல் விலை ரூ.20 குறையும் என அறிவிக்கப்பட்டு இருப்பது தான். பெட்ரோல் விலை குறைப்பு குறித்த தகவல்களை பார்ப்போம்.
பெட்ரோல் விலை ரூ.20 குறையும் என மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்தது குடிமக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.
பெட்ரோல் விலை குறைப்பு எப்பொழுது அமலுக்கு வரும்?
எப்போதிலிருந்து இந்த பெட்ரோல் விலை குறைப்பு அமுலுக்கு வரும் என்பது குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.
பெட்ரோல் விலை ரூ.20 குறையும்
மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், “எத்தனால் கலந்த பெட்ரோல் நாடு முழுவதும் கிடைக்கும். இது கணிசமான விலை குறைவதற்கு வழிவகுக்கும். இந்த பெட்ரோல் விரைவில் பெட்ரோல் பம்புகளில் கிடைக்கும். இதன் விலை 20 ரூபாய் குறைவாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.
எத்தனாலில் இயங்கும் கார்
டொயோட்டா ஏற்கனவே எத்தனாலில் இயங்கும் காரை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் எரிபொருள் விலை லிட்டருக்கு வெறும் 25 ரூபாய். மேலும் எத்தனால் இயங்கும் வாகனங்கள் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அறிவித்துள்ளார்.
பெட்ரோல் செலவு குறையும்
ஃப்ளெக்ஸ் எரிபொருள் ஒரு மாற்று எரிபொருள். இது பெட்ரோலுடன் எத்தனால் அல்லது மெத்தனால் கலந்து தயாரிக்கப்படுகிறது. இது பெட்ரோல் செலவை பெருமளவு குறைக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் பெட்ரோல் விலை குறையும் என எதிர் பார்க்கப்படுகிறது.
பெட்ரோல்-டீசல் தேவை குறையும்
2030 ஆம் ஆண்டுக்குள் 20% எத்தனாலை பெட்ரோலுடன் கலக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உ’ள்ளது. இது பெட்ரோல் மற்றும் டீசல் தேவையை கணிசமாகக் குறைக்கும்.
சென்னை: பலரும் பல வருடங்களாக சில பகுதிகளில் குடியிருந்து வருவார்கள். ஆனால் அவர்களுக்கு பட்டா கிடைத்திருக்காது. பட்டாவை பொறுத்தவரை மக்கள்… Read More
தமிழகத்தில் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருவதால் விவசாயிகள் தங்களின் விளை நிலங்களில், பண்ணைக்குட்டைகள் (Farm Pond) அமைத்து மழை… Read More
சென்னை: மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க, வரும் 21ம் தேதி வரை… Read More
Child Protection Scheme | இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்தினருக்கு ரூ.50,000 கொடுக்கும் தமிழ்நாடு அரசின் திட்டத்.. தமிழ்நாடு… Read More
கிரெடிட் கார்டுகள் மூலம் MSME-களுக்கு கடன்கள்; யாருக்கு, எவ்வளவு கிடைக்கும்?நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2025 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில்,… Read More
ஆதார் கார்டு இருந்தாலே போதும்.. ரூ. 10 லட்சம் கடன் கிடைக்கும்.. உங்களுக்கும் வேண்டுமா?உங்களுடைய ஆதார் கார்டு இருந்தால் போதும்..… Read More