3 ஆண்டுகளில் லட்சாதிபதி ஆகலாம்! ரூ. 1 லட்சம் பெற மாதம் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?
இந்தத் திட்டத்தின் பெயர் ‘வீடுதோறும் லட்சாதிபதி’. பெயரில் உள்ளதுப்போல, ‘ஒவ்வொரு வீட்டிலும் லட்சாதிபதியை உருவாக்க வேண்டும்’ என்பது இந்தத் திட்டத்தின் நோக்கம். இது ஒரு ரெக்கரிங் டெபாசிட் திட்டம் ஆகும். ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையைக் கட்டி வருவோம்…திட்டட்தின் முடிவில் லட்சங்கள் நம் கையில் இருக்கும். இது தான் இந்தத் திட்டத்தின் கான்செப்ட்.
யார் யார் சேரலாம்?
இந்தத் திட்டத்தில் 10 வயது முதலே சேரலாம்.
எத்தனை ஆண்டுகள்?
3 – 10 ஆண்டுகள். ஆண்டுகளை பொறுத்து மாதா மாதம் செலுத்த வேண்டிய தொகை மாறுபடும்.
வட்டி எவ்வளவு?
60 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 6.75 சதவிகிதம் வட்டி கிடைக்கும்; 60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு 7 சதவிகிதம் வட்டி கிடைக்கும்.
இந்தத் திட்டத்தின் சிறப்பம்சமே ‘கூட்டு வட்டி’. ஒவ்வொரு காலாண்டுகளில் கூட்டு வட்டி கணக்கிடப்படும். உதாரணமாக, மாதம் ரூ.600 கட்டி வருகிறோம் என்று வைத்துக்கொள்வோம். மூன்று மாதங்களில் இந்தத் தொகை ரூ. 1,800 ஆக சேர்ந்திருக்கும். ஆக, மூன்று மாதங்களுக்கு பிறகு, நாம் கட்டும் தொகையான ரூ.600-க்கு வட்டி இல்லாமல், ரூ.1,800-க்கு வட்டி தரப்படும். இது தான் கூட்டு வட்டி.
முன்னதாக பணம் எடுத்தால்…
ஒருவேளை முதிர்வு காலத்திற்கு முன்னரே பணத்தை எடுத்தால் நமக்கு கிடைக்கக்கூடிய பணத்தில் 0.50 – 1 சதவிகிதம் அபராதம் விதிக்கப்படும்.
ரூ.5 லட்சத்திற்குள் நமது திட்ட தொகை இருந்தால் முன்னதாக பணம் எடுக்கும்போது நாம் கட்டிய தொகையில் 0.50 சதவிகிதம் அபராதம் விதிக்கப்படும்.
ரூ.5 லட்சத்திற்கு மேல் இருந்தால் நாம் கட்டிய தொகையில் 1 சதவிகிதம் அபராதம் விதிக்கப்படும்.
இந்தத் திட்டத்தின் முக்கியப் பகுதி இதோ…
ஒருவர் மாதா மாதம்…
10 ஆண்டுகளுக்கு ரூ.593,
9 ஆண்டுகளுக்கு ரூ.682,
8 ஆண்டுகளுக்கு ரூ.795,
7 ஆண்டுகளுக்கு ரூ.940,
6 ஆண்டுகளுக்கு ரூ.1,135,
5 ஆண்டுகளுக்கு ரூ.1,409,
4 ஆண்டுகளுக்கு ரூ.1,812 அல்லது
3 ஆண்டுகளுக்கு ரூ.2,502
கட்டினால் திட்டத்தின் இறுதியில் ரூ.1 லட்சம் கிடைக்கும்.
இந்தக் கட்டணத்தொகையை இன்னும் தெளிவாக தெரிந்துகொள்ள ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள அட்டவணை…
கட்டணத் தொகை…
மேலே உள்ள அட்டவணைப்படி ஒவ்வொரு தொகைக்கும் கிடைக்க உள்ள வட்டி தொகை இதோ…
வட்டி விகிதம்…
மேலே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை ரூ.1 லட்ச திட்டத்திற்கான கணக்கு. ரூ.1 லட்சத்திற்கு மேல் வேண்டுமானால் மாதக் கட்டணத் தொகைகள் அதற்கேற்ப மாறுபடும்.
எப்போது காசு கையில் கிடைக்கும்?
நமது திட்ட காலம் முடிந்த ஒரு மாதத்தில் தொகை கொடுக்கப்படும்.
தாமதமாக கட்டினால்…
மாதா மாதம் கட்ட வேண்டிய தொகையை தாமதமாக கட்டினால் முதல் 5 ஆண்டுகள் அல்லது 5-க்கும் குறைவான ஆண்டுகளில் ஒவ்வொரு ரூ.100-க்கும் ரூ.1.50 அபராதமாக வசூலிக்கப்படும்.
5 ஆண்டுகளுக்கு மேல் ஒவ்வொரு ரூ.100-க்கும் ரூ.2 அபராதமாக விதிக்கப்படும்.
இன்னுமொரு சலுகை…
ஒரே தடவையாக மாதத் தவணையை கட்ட முடியாவிட்டால், பாதி பாதியாக பிரித்து கட்டக்கூடிய சலுகையும் உண்டு.
தமிழகத்தில் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருவதால் விவசாயிகள் தங்களின் விளை நிலங்களில், பண்ணைக்குட்டைகள் (Farm Pond) அமைத்து மழை… Read More
சென்னை: மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க, வரும் 21ம் தேதி வரை… Read More
Child Protection Scheme | இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்தினருக்கு ரூ.50,000 கொடுக்கும் தமிழ்நாடு அரசின் திட்டத்.. தமிழ்நாடு… Read More
கிரெடிட் கார்டுகள் மூலம் MSME-களுக்கு கடன்கள்; யாருக்கு, எவ்வளவு கிடைக்கும்?நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2025 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில்,… Read More
ஆதார் கார்டு இருந்தாலே போதும்.. ரூ. 10 லட்சம் கடன் கிடைக்கும்.. உங்களுக்கும் வேண்டுமா?உங்களுடைய ஆதார் கார்டு இருந்தால் போதும்..… Read More
கல்லூரி படிப்பை முடித்து வேலைவாய்ப்புகள் பெறும் வகையில், மத்திய அரசு பிரதமர் பயிற்சி திட்டத்தை தொடங்கியது. இதன் மூலம் இந்தியாவின்… Read More