108 ஆம்புலன்ஸ் சேவையில் ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கு ஆள் சேர்ப்பு அறிவிக்கை வெளியாகியுள்ளது
கொரோனா காலத்தில் 108 ஆம்புலன்ஸ்களின் சேவை மிக மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. தேவைகள் அதிகரிக்கும் நிலையில் ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கையையும் அரசு உயர்த்த உள்ளது. இதனால், ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணிகளுக்கு புதிதாக ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
ஓட்டுநராக விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு தேர்ச்சி, இலகுரக வாகன உரிமம் எடுத்து 3 ஆண்டுகள் மற்றும், பேட்ஜ் வாகன உரிமம் எடுத்து ஒரு ஆண்டு ஆகியிருக்க வேண்டும். 24 முதல் 34 வயதானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
B.Sc நர்சிங் அல்லது டிப்ளமோ நர்சிங் முடித்த 19 முதல் 30 வயதினர் மருத்துவ உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பணிகள் வழங்கப்படும். தொலைபேசி வாயிலாக தேர்வுகள் நடைபெறும்.
ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 9384010215, 7397724763, 7397724807, 7397724809, 7397724812, 7397724810, 8754435247 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
மருத்துவ உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 7397724812, 7397724810, 7397724807, 7397724809, 8754435247 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இந்த வார இறுதி வரை இந்த பணிகளுக்கு தொலைபேசி மூலம் விண்ணப்பிக்கலாம்.
சென்னையில் தற்போது 80 ஆம்புலன்ஸ்களும் பிற மாவட்டங்களில் சுமார் 80 ஆம்புலன்ஸ்களும் கொரோனா பணிக்காக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Charity trust near me: Kanchipuram, tamilnadu, Ph :9087808501 CSR, NGO DERPAN, Form 80G Tax Free… Read More
Madras High Court has released the recruitment notification No: 72 / 2025 & 73 /… Read More
கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை மத்திய அரசு கடந்த 2005-ம் ஆண்டு… Read More
தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 1,300 ஊராட்சி செயலா் பணியிடங்கள் 2 மாதங்களில் நிரப்பப்படும் என்று ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை… Read More
சென்னை: பதிவுத்துறையில் சொத்து சம்பந்தமான அசல் ஆவணங்கள் இன்றி பதிவு செய்ய முடியாமல் பாதிக்கப்பட்ட பொது மக்களால் தொடுக்கப்பட்ட வழக்கில்… Read More
Bank Account பல போலி பரிவர்த்தனைகள் நடந்தால் அபராதம் விதிக்கப்படும், ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்திருக்க முடியாது. ரூ.10,000 அபராதம்… Read More