108 ஆம்புலன்ஸ் சேவையில் ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கு ஆள் சேர்ப்பு அறிவிக்கை வெளியாகியுள்ளது
கொரோனா காலத்தில் 108 ஆம்புலன்ஸ்களின் சேவை மிக மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. தேவைகள் அதிகரிக்கும் நிலையில் ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கையையும் அரசு உயர்த்த உள்ளது. இதனால், ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணிகளுக்கு புதிதாக ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
ஓட்டுநராக விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு தேர்ச்சி, இலகுரக வாகன உரிமம் எடுத்து 3 ஆண்டுகள் மற்றும், பேட்ஜ் வாகன உரிமம் எடுத்து ஒரு ஆண்டு ஆகியிருக்க வேண்டும். 24 முதல் 34 வயதானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
B.Sc நர்சிங் அல்லது டிப்ளமோ நர்சிங் முடித்த 19 முதல் 30 வயதினர் மருத்துவ உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பணிகள் வழங்கப்படும். தொலைபேசி வாயிலாக தேர்வுகள் நடைபெறும்.
ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 9384010215, 7397724763, 7397724807, 7397724809, 7397724812, 7397724810, 8754435247 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
மருத்துவ உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 7397724812, 7397724810, 7397724807, 7397724809, 8754435247 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இந்த வார இறுதி வரை இந்த பணிகளுக்கு தொலைபேசி மூலம் விண்ணப்பிக்கலாம்.
சென்னையில் தற்போது 80 ஆம்புலன்ஸ்களும் பிற மாவட்டங்களில் சுமார் 80 ஆம்புலன்ஸ்களும் கொரோனா பணிக்காக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு ஊராட்சித் துறையில் அலுவலக உதவியாளர், எழுத்தர், ஓட்டுநர் வேலை; ரூ.71,900 வரை சம்பளம் - முழு விவரம்தமிழில் படிக்க… Read More
ஏழை, எளிய விவசாய கூலிகளாகவே இருப்பவர்களை ’நன்னிலம் திட்டம்’ மூலம் அவர்களை நில உடைமைதாரர்களாக மாற்றும் மாபெரும் சமூக நீதி… Read More
Tamil Nadu Uniformed Service Recruitment Board (TNUSRB) has announced a total of 3644 vacancies for… Read More
Gold Rate Today in Tamil Nadu (14 August 2025) – 22K & 24K Price Updates… Read More
Gold Appraisal Read More
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை; 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்அரசு வழக்கு துறையின் தமிழ்நாடு அரசு தலைமை… Read More