Social Activity

சேலத்தில் இன்று கொரோனா பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு திருமணம் நடந்தது

சேலம் அருகே இன்று திருமணம் நடைபெற்ற மணப்பெண்ணுக்கு கொரோனா அறிகுறி இருந்த நிலையில் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே 74 கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு, அவருடைய உறவினருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதற்காக சென்னையில் பணியாற்றி வந்த அந்த பெண் உறவினர்களுடன் கடந்த மூன்று நாட்களுக்கு முன் காரில் சொந்த ஊர் சென்று கொண்டிருந்தார். 

அப்போது நத்தகரை சோதனைச்சாவடி மையத்தில் காரை நிறுத்திய அதிகாரிகள், அவருக்கு பரிசோதனை செய்தனர். அப்போது அந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இருப்பினும், நிச்சயித்தபடி அவருக்கு எளிமையான முறையில் இன்று திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்தவுடன் மணப்பெண் தனிமைப்படுத்தப்பட்டார். 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top