Social Activity

தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்!!!அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

கொரோனா பாதிப்பு இரண்டாயிரத்துக்கும் கீழே குறைந்து விட்டதால் பாதுகாப்பு வழிமுறைகளை சரிவர கடைபிடித்து பள்ளிகளைத் திறக்கலாம் என ஒரு சாராரும், புயல், பருவமழை என வானிலை மாறியுள்ள நிலையில் பிற தொற்றுகளும் பரவ வாய்ப்புள்ளதால் தை பொங்கலுக்குப் பின் பள்ளிகளைத் திறக்கலாம் என்று மற்றொரு சாராரும் கூறிவருகின்றனர். எனவே இந்த மாத இறுதியில் அடுத்த மாதத்துக்கான ஊரடங்கு தளர்வு, பாதுகாப்பு வழிமுறைகளை அரசு வெளியிடும் போது பொங்கல் பண்டிகைக்குப் பின்னர் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

பள்ளிகள் திறப்பு -அரையாண்டு தேர்வு ரத்து: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

இந்த நிலையில், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு எந்த நேரமும் அரசு தயார் நிலையில் உள்ளதாக பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மாணவர்களும், பெற்றோர்களும் கூறும் கருத்துகளின் அடிப்படையில் பள்ளிகள் திறப்பது பற்றி முதல்வர் முடிவெடுப்பார் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் கல்வி மூலம் அதிக கட்டணம் வசூலித்த 14 கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஸ்சி எஸ்டி, போஸ்டு மெட்ரிக் ஸ்காலர்ஷிப் தற்போது வரை நிறுத்தப்படவில்லை. ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ஆங்காங்கே அதற்கான உதவி தொகையை அரசு வழங்கி வருகிறது எனவும் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top