இங்கிலாந்தில் தனது சேவைகளை விரிவுபடுத்துவதற்காக அமேசான் நிறுவனம், மேலும் 10,000 பேரை பணியில் அமர்த்துவதற்கு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆன்லைன் வர்த்தகத்தில் முன்னணி நிறுவனமாக இருந்து வரும் அமேசான், உலகளவில் தனது வர்த்தகத்தை அதிகரிக்கும் பொருட்டு, பல நாடுகளில் தனது வர்த்தகத்தை மேம்படுத்தி வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தில் அமேசான் வணிகத்தை விரிவாக்கம் செய்வதற்காக, 10 ஆயிரம் பேரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதன் படி இந்த நடப்பு ஆண்டின் இறுதியில், இங்கிலாந்தில் உள்ள அமேசான் நிறுவனத்தில் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 55 ஆயிரமாக உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கிலாந்தில் லண்டன், மான்செஸ்டர், எடின்பர்க், கேம்பிரிட்ஜ் உள்ளிட்ட இடங்களில் விரிவுபடுத்தப்படும் அமேசான் அலுவலகங்களில் இந்த ஊழியர்கள் பணியமர்த்தப்பட உள்ளார்கள். முன்னதாக கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் சேவைகள் அதிகரிக்கப்படும் என்ற நோக்கத்தில், அமேசான் நிறுவனம் அதிகளவு ஊழியர்களை, பணியில் அமர்த்தி வருகிறது. அந்த வகையில் வட அமெரிக்காவின் லாகிஸ்டிக்ஸ் நடவடிக்கைகளுக்காக 75,000 தொழிலாளர்களை பணியில் அமர்த்துவதாக அந்நிறுவனம் அறிவித்திருந்தது.
இதன் அடிப்படையில் கடந்த ஆண்டு மட்டும் சுமார் 5 லட்சம் புதிய தொழிலாளர்கள் இந்நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தற்போது இந்தியாவிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், ஆன்லைன் சேவைகளும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. எனவே இந்தியாவிலும் அமேசான் நிறுவனத்தின் வர்த்தக விரிவாக்கம் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு, கொரோனா காலத்தில் வேலை இழந்த பல குடும்பங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
Madras High Court has released the recruitment notification No: 72 / 2025 & 73 /… Read More
கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை மத்திய அரசு கடந்த 2005-ம் ஆண்டு… Read More
தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 1,300 ஊராட்சி செயலா் பணியிடங்கள் 2 மாதங்களில் நிரப்பப்படும் என்று ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை… Read More
சென்னை: பதிவுத்துறையில் சொத்து சம்பந்தமான அசல் ஆவணங்கள் இன்றி பதிவு செய்ய முடியாமல் பாதிக்கப்பட்ட பொது மக்களால் தொடுக்கப்பட்ட வழக்கில்… Read More
Bank Account பல போலி பரிவர்த்தனைகள் நடந்தால் அபராதம் விதிக்கப்படும், ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்திருக்க முடியாது. ரூ.10,000 அபராதம்… Read More
சென்னை: பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட படி, கிராமங்களில் அரசு திட்டங்கள் மூலம் கட்டிக் கொடுத்து பழுது பார்க்க இயலாத வீடுகளை மறு… Read More