தமிழகத்தில் குடும்பத்தின் தலைவர் இயற்கையாகவே உயிரிழந்தால் 2 லட்சம் காப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் மிக விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதுமட்டுமன்றிதமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவிக்காலம் மே 24ம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் இன்று செய்யப்பட்டது. அதனை துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்தார்.
பட்ஜெட்டை தாக்கல் செய்து பன்னீர்செல்வம் பேசுகையில், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.
அதனால் திமுக அங்கிருந்து வெளிநடப்பு செய்தது. இதனையடுத்து தமிழகத்தின் கடன் ரூ.5.70 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. பயிர்க் கடன் தள்ளுபடி காக இடைக்கால வரவு மற்றும் செலவு திட்ட மதிப்பீட்டில் 5 ஆயிரம் கோடி ஒதுக்கீடு. 2000 மின்சார பேருந்துகள் உட்பட 12 ஆயிரம் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். மாநிலத்தின் மொத்த வரி வருவாய் ரூ.1,35,641 கோடியாக இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து மின்சாரத் துறைக்கு ரூ.7, 217 கோடி நிதி ஒதுக்கீடு. உயர் கல்வித் துறைக்கு ரூ.5, 470 கோடி நிதி ஒதுக்கீடு. தமிழக சுகாதாரத் துறைக்கு ரூ.19,420 கோடி நிதி ஒதுக்கீடு. கோவை மெட்ரோ திட்டத்திற்கு ரூ.6,683 கோடி ஒதுக்கீடு. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களின் தலைவர் இயற்கையாகவே உயிரிழந்தால் 2 லட்சம் காப்பீடு தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருவதால் விவசாயிகள் தங்களின் விளை நிலங்களில், பண்ணைக்குட்டைகள் (Farm Pond) அமைத்து மழை… Read More
சென்னை: மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க, வரும் 21ம் தேதி வரை… Read More
Child Protection Scheme | இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்தினருக்கு ரூ.50,000 கொடுக்கும் தமிழ்நாடு அரசின் திட்டத்.. தமிழ்நாடு… Read More
கிரெடிட் கார்டுகள் மூலம் MSME-களுக்கு கடன்கள்; யாருக்கு, எவ்வளவு கிடைக்கும்?நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2025 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில்,… Read More
ஆதார் கார்டு இருந்தாலே போதும்.. ரூ. 10 லட்சம் கடன் கிடைக்கும்.. உங்களுக்கும் வேண்டுமா?உங்களுடைய ஆதார் கார்டு இருந்தால் போதும்..… Read More
கல்லூரி படிப்பை முடித்து வேலைவாய்ப்புகள் பெறும் வகையில், மத்திய அரசு பிரதமர் பயிற்சி திட்டத்தை தொடங்கியது. இதன் மூலம் இந்தியாவின்… Read More