Advertisement
Categories: Service

Gold Loan: `உரிமையாளருக்கான ஆதாரம், தரச்சான்றிதழ்’ – தங்க நகைக்கடனுக்கு RBI அறிவித்த 9 புதிய விதிகள்

1. அடமானம் வைக்கும் தங்கம் நகையின் மதிப்பில் 75 சதவிகிதம் மட்டும் தான் கடனாக வழங்கப்படும். அதாவது ரூ.1,000 மதிப்புள்ள தங்க நகை அடமானம் வைக்கப்பட்டால், ரூ.750 மட்டுமே கடனாக வழங்கப்படும்.

2. அடமானம் வைக்கும் தங்க நகை தங்களுடையது தான் என்பதற்கான ஆதாரத்தை வாடிக்கையாளர்கள் தங்க நகையை அடமானம் வைக்கும் வங்கி அல்லது நிதி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

3. அடமானம் வைக்கப்படும் தங்க நகை தரம் குறித்தான சான்றிதழ்களை கடன் கொடுக்கும் வங்கி அல்லது நிதி நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும். இதன் ஒரு நகலை அந்த நிறுவனமும் வைத்திருக்க வேண்டும். இந்த சான்றிதழில் கடன் கொடுப்பவர், கடன் வாங்குபவர் என இருவரது கையொப்பமும் இடம்பெற்றிருக்க வேண்டும்.

இந்த சான்றிதழில் நகை சம்மந்தமான அனைத்து தகவல்களும் இடம்பெற்றிருக்க வேண்டும்.

4. இந்திய ரிசர்வ் வங்கியால் குறிப்பிடப்பட்டிருக்கும் தங்க நகை வகைகளுக்கு மட்டுமே கடன் வழங்கப்பட வேண்டும்.

5. இனி வெள்ளி நகைகளுக்கும் அடமானக் கடன் வழங்கப்படும்.

6. தனிநபர் ஒரு கிலோ தங்கம் வரையில் மட்டுமே அடமானம் வைக்க முடியும்.

நகைக்கடன்

7. அடமானமாக பெறப்படும் தங்க நகைகளுக்கு 22 கேரட் தங்கம் அடிப்படையில் தான் கடன் வழங்கப்படும்.

8. கடன் ஒப்பந்தத்தில் கடன் சம்பந்தமான அனைத்து தகவல்களும் கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும்.

9. தங்க நகைக் கடனை திருப்பி செலுத்திய 7 வேலை நாள்களில் வங்கி அல்லது நிதி நிறுவனம் அடகு வைக்கப்பட்ட நகைகளை திருப்பி தந்துவிட வேண்டும். தாமதிக்கும் ஒவ்வொரு நாளுக்கும் ரூ.5,000-த்தை வங்கி அல்லது நிதி நிறுவனம் வாடிக்கையாளருக்கு செலுத்த வேண்டும்

admin

Share
Published by
admin

Recent Posts

“வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை” – முழுமையான தகவல் (தமிழ்நாடு)

இந்த உதவித் தொகை மத்திய அரசு திட்டம் அல்ல; இது தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையினால் நடத்தப்படும்… Read More

1 week ago

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி இனி சாத்தியமில்லை? ₹25,000 கோடி புள்ளிவிவரம் சொல்லும் உண்மை

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் என்றாலே மக்களின் முதல் எதிர்பார்ப்பு என்ன?👉 “5 சவரனுக்குக் கீழ் நகைக்கடன் தள்ளுபடி வருமா?” நகைக்கடன்… Read More

2 weeks ago

Indian Post Office Recruitment 2025

Indian Post Office invites Online applications for the recruitment of 28740 Gramin Dak Sevaks (GDS)… Read More

1 month ago

PM SVANidhi : தெருவோர வியாபாரிகளுக்கு குட்நியூஸ்! பிஎம் ஸ்வாநிதி 2030 வரை நீட்டிப்பு

PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More

2 months ago