Advertisement
Categories: Service

Govt Is Giving 10 Lakh Rupees Easy Loan To Youth Under This Scheme Aadhaar Card Needed

ஆதார் கார்டு இருந்தாலே போதும்.. ரூ. 10 லட்சம் கடன் கிடைக்கும்.. உங்களுக்கும் வேண்டுமா?
உங்களுடைய ஆதார் கார்டு இருந்தால் போதும்.. உடனே கடன் வாங்கலாம்.

மத்திய அரசின் இந்தத் திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு ரூ. 10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.

ஆதார் கார்டு இருந்தாலே போதும்.. ரூ. 10 லட்சம் கடன் கிடைக்கும்.. உங்களுக்கும் வேண்டுமா?

கடன் உதவியுடன், அனைத்து இளம் தொழில்முனைவோருக்கும் வங்கியின் உதவி எளிதாக வழங்கப்படுகிறது. நீங்களும் உங்கள் சொந்த தொழிலைத் தொடங்க விரும்பினால், இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். குறைந்த வட்டி விகிதம் மற்றும் அரசு மானியத்துடன், இத்திட்டம் வேலையில்லாத இளைஞர்களுக்கு சுயதொழில் செய்வதற்கான நல்ல வாய்ப்பாகும். இந்தக் கடனைப் பெறுவதன் மூலம் நீங்கள் தன்னிறைவு பெறுவது மட்டுமின்றி மற்றவர்களுக்கு வேலைவாய்ப்பையும் வழங்க முடியும்.

இளைஞர்களுக்கான திட்டம்!

இந்தியாவில் நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டங்களில் மிக முக்கியமான ஒன்றுதான் பிரதான் மந்திரி வேலை உருவாக்கத் திட்டம் (PMEGP) ஆகும். இத்திட்டத்தின் கீழ் இளைஞர்கள் தங்கள் சொந்தத் தொழிலைத் தொடங்க கடன் வழங்கப்படுகிறது. இந்தக் கடனுக்கு அரசிடமிருந்து மானியமும் கிடைப்பதால் திருப்பிச் செலுத்துவது எளிதாகிறது.

மானிய உதவி!

இளைஞர்களை அதிகாரம் பெற்றவர்களாகவும், தன்னம்பிக்கை கொண்டவர்களாகவும் மாற்றும் நோக்கத்தில்தான் பிரதான் மந்திரி வேலை உருவாக்கத் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கு 2 லட்சம் ரூபாய் முதல், 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், கிராமப்புறப் பயனாளிகளுக்கு இந்தக் கடனில் 35% மானியமும், நகர்ப்புறப் பயனாளிகளுக்கு 25% வரையிலும் மானியம் வழங்கப்படுகிறது.

மிகப் பெரிய உதவி!

கடன் உதவியுடன், அனைத்து இளம் தொழில்முனைவோருக்கும் வங்கியின் உதவி எளிதாக வழங்கப்படுகிறது. நீங்களும் உங்கள் சொந்த தொழிலைத் தொடங்க விரும்பினால், இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். குறைந்த வட்டி விகிதம் மற்றும் அரசு மானியத்துடன், இத்திட்டம் வேலையில்லாத இளைஞர்களுக்கு சுயதொழில் செய்வதற்கான நல்ல வாய்ப்பாகும். இந்தக் கடனைப் பெறுவதன் மூலம் நீங்கள் தன்னிறைவு பெறுவது மட்டுமின்றி மற்றவர்களுக்கு வேலைவாய்ப்பையும் வழங்க முடியும்.

யாருக்கெல்லாம் கிடைக்கும்?

இந்தத் திட்டத்தின் பலன்களைப் பெற, நீங்கள் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். இந்த கடன் நாட்டின் சிறு, நடுத்தர அல்லது உள்நாட்டு உற்பத்தி வர்த்தகர்களுக்கு வழங்கப்படும். அரசாங்கத்தால் வழங்கப்படும் கடன் திட்டத்தின் செலவைப் பொறுத்தது. அதே நேரத்தில் மானிய விகிதங்கள் பகுதி, வகை மற்றும் திட்டத்தின் செலவு ஆகியவற்றைப் பொறுத்து இருக்கும்.

தேவையான ஆவணங்கள்!

ஆதார் அட்டை
பான் கார்டு
வங்கி கணக்கு ரிப்போர்ட்
வணிகம் தொடர்பான ஆவணங்கள்
ஜிஎஸ்டி மற்றும் நில ஆவணங்கள்
பதிவு எண்

விண்ணப்பிப்பது எப்படி?

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பினால், ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு முதலில் நீங்கள் PMEGP அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிட வேண்டும். விண்ணப்பிக்கும் முன் புதிய கணக்கை உருவாக்க வேண்டும். அதில் உங்கள் பெயர், முகவரி, மின்னஞ்சல் ஐடி, மொபைல் எண் மற்றும் தேவையான பிற தகவல்களை உள்ளிட வேண்டும். போர்ட்டலில் பதிவுசெய்த பிறகு, விண்ணப்பப் படிவம் உங்கள் முன் திறக்கும். இதில் நீங்கள் வணிகத்தின் பெயர், வகை, முகவரி போன்ற தகவல்களை உள்ளிட வேண்டும். இதற்குப் பிறகு, தேவையான ஆவணங்களைப் பதிவேற்றவும்.
தேவையான அனைத்து தகவல்களையும் ஆவணங்களையும் பதிவேற்றம் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

admin

Recent Posts

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி இனி சாத்தியமில்லை? ₹25,000 கோடி புள்ளிவிவரம் சொல்லும் உண்மை

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் என்றாலே மக்களின் முதல் எதிர்பார்ப்பு என்ன?👉 “5 சவரனுக்குக் கீழ் நகைக்கடன் தள்ளுபடி வருமா?” நகைக்கடன்… Read More

21 hours ago

Indian Post Office Recruitment 2025

Indian Post Office invites Online applications for the recruitment of 28740 Gramin Dak Sevaks (GDS)… Read More

3 weeks ago

PM SVANidhi : தெருவோர வியாபாரிகளுக்கு குட்நியூஸ்! பிஎம் ஸ்வாநிதி 2030 வரை நீட்டிப்பு

PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More

2 months ago

தங்கம் 7,500 முதல் 13,400 வரை: 2025-ல் தங்கம் எவ்வாறு கிட்டத்தட்ட 80 சதவீத வருமானத்தை வழங்கியது

சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More

2 months ago