Advertisement
Categories: Service

PM SVANidhi : தெருவோர வியாபாரிகளுக்கு குட்நியூஸ்! பிஎம் ஸ்வாநிதி 2030 வரை நீட்டிப்பு

PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள் முதல் அன்றாடத் தேவைகள் வரை அனைத்தையும் பொதுமக்களின் வீட்டு வாசலுக்கே கொண்டு வரும் இவர்களுக்கு, வங்கிக் கடன் வசதி கிடைப்பது நீண்டகாலமாகப் பெரும் சவாலாகவே இருந்து வந்தது. குறிப்பாகக் கொரோனா பெருந்தொற்று காலத்தில் இவர்களது வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இவர்களைக் கைதூக்கி விடும் நோக்கில் 2020-ஆம் ஆண்டு மத்திய அரசால் கொண்டு வரப்பட்டதே ‘பிஎம் ஸ்வாநிதி’ திட்டம்.

தற்போது இத்திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, இத்திட்டத்தை மார்ச் 31, 2030 வரை நீட்டித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. வெறும் கடன் உதவியோடு நில்லாமல், தெருவோர வியாபாரிகளைத் தொழில்முனைவோராக மாற்றும் நோக்கில் இத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

SVANidhi திட்டத்தின் புதிய அப்டேட்

இத்திட்டத்தின் கீழ், வியாபாரிகளுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் முதல் தவணையாக 10,000 ரூபாய் வழங்கப்பட்ட நிலையில், தற்போது அது 15,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், இரண்டாம் தவணைக் கடன் 20,000 ரூபாயிலிருந்து 25,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் தவணையாக 50,000 ரூபாய் வரை கடன் பெற முடியும்.

இதில் மிக முக்கியமான அம்சமாக, இரண்டாவது தவணைக் கடனைச் சரியாகத் திருப்பிச் செலுத்தும் வியாபாரிகளுக்கு ‘யுபிஐ’ (UPI) வசதியுடன் கூடிய ‘ரூபே கிரெடிட் கார்டு’ (RuPay Credit Card) வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் வியாபாரிகள் தங்களின் அவசரத் தேவைகளுக்கும், தொழில் விரிவாக்கத்திற்கும் உடனடிப் பணத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இது தெருவோர வியாபாரிகளை டிஜிட்டல் பொருளாதாரத்தின் ஒரு பகுதியாக மாற்றும் ஒரு புரட்சிகரமான நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு ஊக்கத்தொகை -SVANidhi

இந்தியாவை டிஜிட்டல் மயமாக மாற்றும் முயற்சியில் தெருவோர வியாபாரிகளையும் இணைக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, டிஜிட்டல் முறையில் வியாபாரம் செய்யும் விற்பனையாளர்களுக்குப் பணத்திருப்பலன் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒரு வியாபாரி ஆண்டுக்கு 1,200 ரூபாய் வரை கேஷ்பேக் பெற முடியும். மேலும், மொத்த விலையில் பொருட்களை வாங்கும்போதும் கூடுதல் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

பிஎம் ஸ்வாநிதி திட்டத்துக்கு யாரெல்லாம் விண்ணபிக்கலாம்?

  • வியாபாரம் செய்து வரும் அனைத்து தெருவோர வியாபாரிகளும் விண்ணப்பிக்கலாம்.
  • உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்பட்ட அடையாள அட்டை அல்லது விற்பனைச் சான்றிதழ் வைத்திருப்பவர்கள்.
  • அடையாள அட்டை இல்லாதவர்கள், உள்ளாட்சி அமைப்பால் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் விடுபட்டிருந்தால், அதற்கான பரிந்துரை கடிதத்தைப் (Letter of Recommendation) பெற்று விண்ணப்பிக்கலாம்.
  • தற்போது இத்திட்டம் கிராமப்புறங்களை ஒட்டியுள்ள புறநகர்ப் பகுதிகளுக்கும் (Census Towns) விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

தேவையான ஆவணங்கள்

இத்திட்டத்திற்குப் பிணையில்லாக் கடன் (Collateral-free loan) வழங்கப்படுவதால், பெரிய அளவில் ஆவணங்கள் தேவையில்லை. கீழ்க்கண்டவை மட்டும் போதுமானது:

  • ஆதார் அட்டை.
  • விற்பனைச் சான்றிதழ் அல்லது வியாபாரம் செய்வதற்கான அடையாள அட்டை.
  • வங்கி கணக்கு விவரங்கள் (Passbook நகல்).
  • பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.

பிஎம் ஸ்வாநிதி திட்டத்துக்கு விண்ணப்பிப்பது எப்படி?

நீங்கள் நேரடியாகவோ அல்லது பொதுச் சேவை மையங்கள் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்:

  1. ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தல்:
  • முதலில் பிஎம் ஸ்வாநிதி அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
  • முகப்புப் பக்கத்தில் “Apply for Loan” ஆப்சனில், 10k, 25k அல்லது 50k என்ற ஆப்சனை தேர்ந்தெடுக்கவும்.
  • உங்கள் மொபைல் எண்ணை உள்ளிட்டு OTP மூலம் உறுதிப்படுத்தவும்.
  • அதன்பின் உங்கள் ஆதார் விவரங்களை உள்ளிட வேண்டும்.
  • உங்களிடம் விற்பனைச் சான்றிதழ் (SRN எண்) இருந்தால் அதை உள்ளிடவும். இல்லையெனில், பரிந்துரை கடிதத்திற்கான (LoR) விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யவும்.
  • தேவையான ஆவணங்களைப் பதிவேற்றி, நீங்கள் எந்த வங்கியில் கடன் பெற விரும்புகிறீர்களோ அந்த வங்கியைத் தேர்ந்தெடுக்கவும்.
  1. ஆஃப்லைன் மூலம் விண்ணப்பித்தல்:
  • உங்கள் பகுதியில் உள்ள நகராட்சி அலுவலகம் அல்லது பேரூராட்சி அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.
  • அருகில் உள்ள பொதுச் சேவை மையங்கள் (CSC – Common Service Centres) மூலம் மிக எளிதாக விண்ணப்பிக்க முடியும்.
  • வங்கிக் கிளைகளுக்கு நேரடியாகச் சென்றும் இதற்கான படிவத்தைப் பெற்று சமர்ப்பிக்கலாம்.

கடன் திருப்பிச் செலுத்தும் முறை மற்றும் வட்டி மானியம்

வட்டி மானியம்: நீங்கள் வாங்கிய கடனைச் சரியாகத் திருப்பிச் செலுத்தினால், ஆண்டுக்கு 7% வட்டி மானியம் உங்கள் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

அபராதம் இல்லை: கடனை முன்கூட்டியே திருப்பிச் செலுத்த விரும்பினால், அதற்காக எந்தவிதமான அபராதக் கட்டணமும் (Pre-payment penalty) வசூலிக்கப்பட மாட்டாது.

டிஜிட்டல் ஊக்கத்தொகை: கியூஆர் கோட் (QR Code) மூலம் டிஜிட்டல் முறையில் பணத்தைப் பெற்றால், மாதம் 100 வரை கேஷ்பேக் கிடைக்கும்.

நீங்கள் இத்திட்டத்தின் கீழ் கடன் பெற்றவுடன், உங்கள் குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள் சேகரிக்கப்படும். இதன் மூலம் பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா காப்பீடு, பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா விபத்துக் காப்பீடு, ஜனனி சுரக்ஷா யோஜனா, ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு போன்ற மத்திய அரசின் 8 முக்கியத் திட்டங்களின் பயன்கள் உங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும்.

மேலும் படிக்க | PM SVANidhi திட்டம்:

தெருவோர வியாபாரிகளுக்கு குட் நியூஸ், ரூ.50,000 கடன், ஏகப்பட்ட சலுகைகள்

admin

Recent Posts

தங்கம் 7,500 முதல் 13,400 வரை: 2025-ல் தங்கம் எவ்வாறு கிட்டத்தட்ட 80 சதவீத வருமானத்தை வழங்கியது

சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More

2 weeks ago

சென்னையில் ரூ.6.73 லட்சத்துக்கு 1 BHK வீடு… தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு – யாரெல்லாம் பயன்பெறலாம்? Amazing announcement by the Tamil Nadu government – who can benefit?

சென்னையில் குறைந்த விலையில் வீடுகளை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்குப் பரிசாக தமிழக அரசு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில்… Read More

2 weeks ago