Advertisement
Service

Post Office Grama Suraksha Yojana Offers Rs 35 Lakh Returns Check Here Details

ரூ. 35 லட்சம் வருமானம் தரும் சூப்பரான திட்டம்.. ரூ. 1500 முதலீடு செய்தால் போதும்!

இந்திய அஞ்சல் துறை அனைவருக்கு ஏற்ற பல்வேறு விதமான சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் கிராமப்புற மக்களுக்காக பிரபலமானதாக கிராம சுரக்ஷா யோஜனா உள்ளது. இந்த திட்டத்தில் முதலீடு செய்வது மற்றும் பலன்கள் பற்றி தற்போது விரிவாக பார்க்கலாம்.

தபால் அலுவகலம் சேமிக்க விரும்புகிறவர்களுக்கு பலவிதமான சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சிறியவர்கள், பெரியவர்கள், பெண்கள் மற்றும் மூத்த குடிமக்கள் என அனைவருக்கு ஏற்ற விதமான திட்டங்கள் போஸ்ட் ஆபீஸில் உள்ளது. இதில் சரியான திட்டங்களை தேர்ந்தெடுத்து டெபாசிட் செய்யும் போது, முதலீட்டாளர்கள் நல்ல லாபத்தை பெறலாம்.

இன்றைய காலக்கட்டத்தில் அனைவரும் சேமிக்க விரும்பும் நிலையில், போஸ்ட் ஆபீஸில் நல்ல முதலீட்டு திட்டங்கள் உள்ளன. பாதுகாப்பான டெபாசிட், நல்ல வருமானம் தபால் அலுவலக திட்டங்களில் கிடைக்கும். அத்துடன் கூடுதல் சிறப்பாக போஸ்ட் ஆபீஸ் திட்டங்களில் ரிஸ்க் கிடையாது. அஞ்சல் அலுவலத்தில் கிராப்புற மக்களுக்காக கிராம சுரக்ஷா யோஜனா திட்டம் உள்ளது.

போஸ்ட் ஆபீஸில் கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டமாக கிராம சுரக்ஷா யோஜனா செயல்படுத்தப்பட்டு வருகிறது. பிரத்யேகமாக கிராப்புற மக்களுக்காக இந்த திட்டம் உள்ளது. தினந்தோறும் 50 ரூபாய் டெபாசிட் செய்வதன் மூலமாக, மெச்சூரிட்டியாக ரூ. 35,00,000 தொகையை முதலீட்டாளர் பெறலாம்.

19 வயது முதல் 55 வயதான யாராக இருந்தாலும் கிராம் சுரக்ஷா யோஜனா திட்டத்தில் டெபாசிட் செய்யலாம். குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகையாக பத்தாயிரம் ரூபாயும், அதிகபட்சமாக ரூ. 10 லட்சமும் இந்த திட்டத்திற்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கிராம சுரக்ஷா யோஜனாவில் பிரீமியத்தை மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டு அடிப்படையில் முதலீடு செய்யலாம்.

இந்த திட்டத்தில் தினமும் ஐம்பது ரூபாய் வீதம் மாதந்தோறும் ரூ.1,500 ஒருவர் டெபாசிட் செய்யும் போது ரூ. 35 லட்சம் வரை ரிட்டனாக பெறலாம். 55 ஆண்டுகளுக்கு என்றால் மாதம் ரூ.1,515 தொகையும், 58 ஆண்டுகளுக்கு 1,463 ரூபாய் மாதந்தோறும் முதலீட்டாளர் டெபாசிட் செய்யலாம். 60 ஆண்டுகளுக்கு ஒருவர் 1,411 ரூபாய் பிரீமியம் செலுத்த வேண்டும்.

கிராம் சுரக்ஷா யோஜனாவில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கடன் பெரும் வசதியும் இந்த திட்டத்தில் உள்ளது. பாலிசி துவங்கிய நாளில் இருந்து 3 ஆண்டுகளுக்கு பிறகு சரண்டர் செய்யலாம். 5 வருடங்களுக்கு பிறகு போனஸ் தொகையும் இந்த திட்டத்தில் பெறலாம். கிராம் சுரக்ஷா யோஜனா திட்டத்தில் முதலீட்டாளர் 80 வயதை நிறைவு செய்யும் போது, மொத்த பாலிசி தொகையும் சரண்டர் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

admin

Share
Published by
admin

Recent Posts

SBI-ல் கணக்கு இருக்கா? ATM கார்டும் உங்ககிட்ட இருக்கா? ரூ. 450 வரை பிடிப்பு.. உடனே பேலன்ஸ் செக் பண்ணுங்க..

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State Bank of India) வங்கியில் உங்களுக்கு கணக்கு இருக்கிறதா? குறிப்பாக சேவிங்ஸ் அக்கௌன்ட்… Read More

33 minutes ago

மத்திய பட்ஜெட் சிறப்பு அம்சம் 2025: தெருவோர கடை வைத்திருப்பவர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவும் வகையில், ரூபாய் 30,000 வரை கடன்

தெருவோர கடை வைத்திருப்பவர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவும் வகையில், ரூபாய் 30,000 வரை கடன் பெறும் வகையிலான கடன் அட்டை… Read More

2 days ago

நீங்கள் UPI மூலம் பணம் செலுத்துபவரா?.. பிப். 1ம் தேதி முதல் பணம் செலுத்த முடியாது.. RBI முக்கிய முடிவு!

UPI Payments | நீங்கள் UPI மூலம் பணம் செலுத்துகிறீர்களா?.. ஆனால், பிப்ரவரி 1ஆம் தேதி முதல் உங்கள் பேமெண்ட்… Read More

3 days ago

மாதம் ரூ.210 கட்டினால்.. ரூ.10000 விடாமல் வரும்.. அருமையான பென்ஷன் திட்டம்.. சூப்பர் ஸ்பெஷாலிட்டீஸ

சென்னை: ஓய்வு காலத்துக்கு பிறகும், நிதி பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய பென்ஷன் திட்டமான அடல் பென்ஷன் யோஜனா (Atal Pension… Read More

5 days ago

வெறும் ரூ.2000 முதலீடு செய்யுங்க.. ரூ.11,16,815 ரிட்டன்ஸ்! செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் செம வசதி…

சென்னை: மத்திய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டம் நாடு முழுக்க பிரபலமாக இருக்கும் திட்டங்களில் ஒன்றாகும். இந்த திட்டத்தின் கீழ்… Read More

1 week ago

RBI புதிய விதி 2025: ஜனவரி 1 முதல் இந்த 3 வகையான வங்கிக் கணக்குகள் மூடப்படும்!

Reserve Bank of India Latest News: வரும் 2025 புத்தாண்டு (ஜனவரி 1) முதல் மூன்று வகையான வங்கிக்… Read More

1 week ago