Advertisement
Categories: Service

கிராமந்தோறும் ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள்: புதிய தொழில் திட்டத்தை துவக்குகிறது அரசு

கிராமந்தோறும் 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள்

சென்னை: தமிழக கிராமங்களில் உள்ள இளைஞர்களின் தொழில் ஐடியாவை, புத்தொழில் நிறுவனமாக உருவாக்க, ‘கிராமந்தோறும் புத்தொழில்’ திட்டத்தை செயல்படுத்தும் பணியில், தமிழக அரசின் ஸ்டார்ட் டி.என்., நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

தமிழகம் உட்பட நாடு முழுதும் உள்ள படித்த இளைஞர்கள், ‘ஸ்டார்ட் அப்’ எனப்படும் புத்தொழில் நிறுவனங்களை துவக்கி வருகின்றனர்.

சிரமம்

தமிழகத்தில் புத்தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவி, சந்தை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு உதவிகளை, தமிழக அரசின் ஸ்டார்ட் அப் டி.என்., நிறுவனம் செய்கிறது. கிராமங்களில் வசிக்கும் இளைஞர்களிடம், தொழில் துவங்குவது தொடர்பான ஐடியா எனப்படும் கருத்துருக்கள் உள்ளன. இருப்பினும், ஏழ்மை நிலை, நிதியுதவி கிடைக்காதது போன்றவற்றால் தொழில் துவங்க சிரமப்படுகின்றனர்.

எனவே, கிராமந்தோறும் இளைஞர்களை சந்தித்து, சிறந்த தொழில் ஐடியா வைத்திருப்பவர்களை கண்டறிந்து, ஸ்டார்ட் அப் நிறுவனம் துவக்குவதை ஊக்குவிக்க, ‘கிராமந்தோறும் புத்தொழில்’ திட்டத்தை, ஸ்டார்ட் அப் டி.என்., நிறுவனம் செயல்படுத்த உள்ளது. இத்திட்டம் முதல் கட்டமாக, 100 கிராமங்களில் விரைவில் செயல்படுத்தப்படும்.

இது குறித்து, சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

நகரங்களை தாண்டி, மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் சென்றடைய வேண்டும் என்பதற்காக, சென்னை, மதுரை, ஈரோடு, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி ஓசூர், சேலம், கடலுார், தஞ்சை மற்றும் திருச்சியில் வட்டார புத்தொழில் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

புத்தொழில்

இவற்றில் உள்ள அதிகாரிகள் கிராமங்களுக்கு சென்று, புத்தொழில் துவங்குவதை ஊக்குவிப்பர். முதல் கட்டமாக, 100 கிராமங்களை தேர்வு செய்து, அங்குள்ள இளைஞர்களிடம் தொழில் ஐடியாக்களை கேட்டு, சிறந்த ஐடியாவை, புத்தொழிலாக துவக்க உதவிகள் செய்யப்படும்.

தற்போது, கிராமங்களை அடையாளம் காணும் பணி நடக்கிறது. விரைவில் கிராமந்தோறும் திட்டத்தில் தேர்வாகும் நபருக்கு, ஆரம்பத்தில் தலா, 1 லட்சம் ரூபாய் வரை நிதியுதவி செய்யப்படும்.

பின், தமிழக புத்தொழில் ஆதார நிதி திட்டத்தில், 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும். பெண்களுக்கு, 15 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும். இத்திட்டத்தால் உள்ளூர் பொருளாதாரம் வளர்வதுடன், வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்

admin

Recent Posts

மகிழ்ச்சி செய்தி! பொங்கல் பரிசு ரூ.2000 – முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

மகிழ்ச்சி செய்தி! பொங்கல் பரிசு ரூ.2000 - முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்த அதிரடி உத்தரவு! தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு… Read More

4 hours ago

12வது படித்திருந்தால் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை! சம்பளம்: Rs.21,000 | தேர்வு கிடையாது

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி… Read More

1 month ago

மாவட்ட நீதிமன்றத்தில் எழுத்தர், பியூன், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது | தகுதி: 10th, Any Degree

வேலை வாய்ப்பு இணையதளம் விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.… Read More

1 month ago

Arulmigu Subramanyaswamy Temple Recruitment 2025

The Arulmigu Subramanyaswamy Temple Recruitment Thiruttani invites applications for Driver posts on Contract basis. Eligible… Read More

1 month ago

தேர்வு கிடையாது..! இந்து சமய அறநிலையத் துறையில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு Tamil Nadu Hindu horticulture recruitment 2025

நிறுவனம்அருள்மிகு பட்டினத்தார் திருக்கோயில்வகைதமிழ்நாடு அரசு வேலைகாலியிடங்கள்04பணியிடம்சென்னை, தமிழ்நாடுஆரம்ப தேதி25.09.2025கடைசி தேதி25.10.2025 தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை, அருள்மிகு… Read More

1 month ago

தமிழ்நாடு ஊராட்சித் துறையில் கிராம ஊராட்சி செயலாளர் வேலை; 1,450 காலிப்பணியிடங்கள், 10-ம் வகுப்பு தகுதி போதும்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்ப இன்று… Read More

1 month ago