தமிழக அரசு துறைகளில் உள்ள கால் சென்டரில் வேலைவாய்ப்பு தமிழக அரசு துறைகளில் 10000 க்கும் மேற்பட்ட பிபிஓ வேலைவாய்ப்பு 2020 to 2021
இந்திய பிபிஓ முன்னேற்ற திட்டம் துவக்கம் : தமிழகத்திற்கு 10000 இடங்கள் வேண்டும் என்று மத்திய அமைச்சருக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கடிதம்
சென்னை- இந்திய பிபிஓ (bpo) முன்னேற்ற திட்டத்தை தொடங்கி வைத்துள்ளதற்காக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மத்திய எலக்ட்ரானிக் மற்றும் தகவல் தொழில் நுட்பம், தகவல் தொடர்பு, சட்டம் மற்றும் நீதி துறையின் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், இந்திய பிபிஓ முன்னேற்ற திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இதையடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது
நாட்டில் உள்ள இரண்டாம் பிரிவு மற்றும் மூன்றாம் பிரிவு நகரங்களில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையிலும், பிபிஓ மற்றும் தொழிற்சாலைகளில் தகவல் தொழில் நுட்ப சேவைகளை செயல்படுத்தவும் கூடிய இந்திய பிபிஓ திட்டத்தை தொடங்கி வைத்துள்ளதற்காக நான் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். இந்த திட்டத்தின் மூலம், 48 ஆயிரத்து 300 இடங்களை நிரப்புவதற்கான நீடித்த மற்றும் நிலையான நிதியாக ரூ.493 கோடி நாட்டுக்கு கிடைக்கும்.
இந்தியாவை பொருத்தவரையில் சென்னை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்திய மென்பொருள் பூங்காக்கள் திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு வருவதை நீங்கள் அறிவீர்கள். இதன் மூலம் 7 ஆயிரத்து 705 இடங்கள் பிபிஓக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் 7 ஆயிரத்து 605 இடங்கள் தமிழ்நாட்டுக்காகவும், 100 இடங்கள் யூனியன் பிரதேசங்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் 8 ஆயிரத்து 387 நேரடி வேலை வாய்ப்புகளையும், 16 ஆயிரத்து 774 மறைமுக வேலைவாய்ப்புகளையும் பொதுமக்கள் பெற்றுள்ளனர். இந்த திட்டத்தின் வெற்றி சதவீதம் என்று பார்த்தால் 93 சதவீத வெற்றியை பெற்றுள்ளோம்.
இந்த திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 51 பிபிஓக்கள் 13 இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழக அரசு இந்த திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் ஏக காலத்தில் ஊரகப் பகுதிகளில் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும். தமிழகத்தில் இந்த திட்டம் வெற்றி பெற்றதை அடுத்து தமிழகத்துக்கு 10 ஆயிரம் இடங்களை இந்திய பிபிஓ மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஒதுக்க வேண்டும் என்று தமிழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வேலைவாய்ப்பு கூடிய சீக்கிரமே அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
The Staff Selection Commission (SSC) has officially uploaded the SSC Combined Graduate Level Notification 2025… Read More
இந்திய விமான நிலைய ஆணையத்தின் கார்கோ லாஜிஸ்டிக்ஸ் & அலைடு சர்வீசஸ் கம்பெனி லிமிடெட்டில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. (AAICLAS)என்ன… Read More
தமிழ்நாட்டின் போராட்டம் வெற்றி.. நகை அடகு விதிகளை.. நிறுத்தி வைக்க ஆர்பிஐக்கு மத்திய அரசு பரிந்துரை சென்னை: நகைக் கடனுக்கான… Read More
சென்னை: தமிழ்நாடு முழுவதும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை… Read More
1. அடமானம் வைக்கும் தங்கம் நகையின் மதிப்பில் 75 சதவிகிதம் மட்டும் தான் கடனாக வழங்கப்படும். அதாவது ரூ.1,000 மதிப்புள்ள… Read More
மே 24, 2025 இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய சுழுக்கணி அறிவிப்பு (மூத்த ஆட்கள்) இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள்… Read More