அண்ணா பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளர் வேலை!
Anna University Recruitment 2020: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிதாக வேலைவாய்ப்பு அறிவிக்கை வெளியாகியுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் புரொபஷனல் அசிஸ்டெண்ட், கிளார்க் அசிஸ்டெண்ட், பியூன் பதவிகளுக்கு 3 பேர் தேர்வு செய்யப்படுகின்றனர்.
சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைழக்கழகத்தில் தினசரி ஊதியம் அடிப்படையில் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இது தொடர்பாக டிசம்பர் 30 ஆம் தேதியிட்ட அறிவிக்கையின்படி, மொத்தம் 3 காலியிடங்கள் உள்ளது.
புரொபஷனல் அசிஸ்டெண்ட் III CSE/IT இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் CSE/IT பிரிவில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். இதற்கு நாள் ஒன்றுக்கு 627 ரூபாய் சம்பளம் வழங்கப்படும்.
பியூன் 2 காலியிடங்கள் உள்ளது. இதற்கு நாள் ஒன்றுக்கு 379 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. எட்டாம் வகுப்பு தேர்ச்சி, ஐடிஐ படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
மேற்கண்ட பணியில் சேருவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், https://www.annauniv.edu என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று அதனை பூர்த்தி செய்து ஜனவரி 4ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதாரர்கள் தங்களுடைய புகைப்படம், கல்விச்சான்றிதழ் நகல், இருப்பிடச் சான்று, வகுப்பு சான்றிதழ் ஆகியவை இணைத்து அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
The Director, Centre for Entrance Examinations, Anna University,
Chennai – 600 025
இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.
Important link
NOTIFICATION 1 LINK: CLICK HERE
Notification 2 Link : Click Here
Although the full movie leaked online a few days ago, potentially impacting box office earnings,… Read More
NDTV Through the NDTV result checker, students can quickly access their scores with their roll… Read More
தேசிய கால்நடை வளர்ப்பு இயக்கத்தின் (NLM)கீழ் , இந்திய அரசு தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் (NLM-EDP)மூலம் கழுதை வளர்ப்பை ஊக்குவிக்கிறது . இத்திட்டத்தின்… Read More
டெல்லி: தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்க்கட்சிகள், அதிலும் குறிப்பாகத் தென்மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை… Read More
நாகர்கோவில்: தொகுதி மறுவரையறை விஷயத்தில் மொத்த எதிர்க்கட்சிகளும், பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்கு எதிராக திரும்பியிருக்கின்றன. இந்நிலையில் தேர்தல்… Read More
சென்னை: குமரியில் இன்று ரோடு ஷோ சென்ற பிரதமர் மோடிக்கு பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் பூக்கள் தூவி உற்சாக வரவேற்பு… Read More