Advertisement
Uncategorized

ஆடு, மாடு, கோழிகளுக்கு இழப்பீடு: சட்டப்பேரவையில் அமைச்சர் இ.பெரியசாமி தகவல்

தெரு நாய் கடித்து உயிரிழக்கும் மாடுக்கு ரூ.37,500, ஆடுக்கு ரூ.6 ஆயிரம், கோழிக்கு ரூ.200 இழப்பீடு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளதாக, சட்டப்பேரவையில் அமைச்சர் இ.பெரியசாமி தெரிவித்தார்.

தெருநாய்களால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க வேண்டிய நடவடிக்கைகள், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து உறுப்பின கே.சி.கருப்பணன் (அதிமுக) பேசினார். இதே பொருள் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானத்த்தை ஈ.ஆர்.ஈஸ்வரன் (கொமதேக), வானதி சீனிவாசன் (பாஜக) பேசினர். உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசும் போது, “தமிழகம் முழுவதுமே தெருநாய், வெறிநாய் தொந்தரவுகள் உள்ளன. விவசாயிகளுக்கு மட்டுமல்ல, காலையில் நடைப்பயிற்சி செல்பாவ்ர்கள் கூட தெருநாய்களால் பாதிக்கப்படுகின்றனர்.

மாநகராட்சி பணியாளர்கள் தெருநாய்களை பிடித்து சென்று கருத்தடை செய்து, அதே பகுதியில் மீண்டும் கொண்டு வந்து விடுகின்றனர். ஆனால், நிறைய இடங்களில் என்ன பிரச்சினை என்றால், கருத்தடை சிகிச்சைக்கு அரசு கொடுக்கும் பணம் போதவில்லை. அதனால், நாய்களை பிடித்து சென்று கருத்தடை செய்ய மாட்டோம் என்று மாநகராட்சி பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். அதனால், கருத்தடை சிக்சிசைக்கு அதிக பணம் கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி பேசியதாவது: சமீப காலங்களில், தெரு நாய்கள் கடித்து வெள்ளாடு, செம்மறி ஆடு, பசு, எருமை, கோழி போன்ற கால்நடைகள், வளர்ப்பு பிராணிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அரசின் கவனத்துக்கு வந்துள்ளது. இதையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின், வழிகாட்டுதலின்பேரில், இச்சம்பவம் குறித்த விவரங்கள் மாவட்ட ஆட்சியர்களிடம் இருந்து பெறப்பட்டு கவனமாக ஆய்வு செய்யப்பட்டன.

அதனடிப்படையில், மாநிலத்திலுள்ள கிராமப் பஞ்சாயத்து, பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் வசிக்கும் விவசாய, கால்நடை விவசாயிகளால் வளர்க்கப்படும் கால்நடைகள், வளர்ப்புப் பிராணிகள் நாய்கள் கடித்து உயிரிழக்கும் நிகழ்வுகளில் உரிய இழப்பீடு வழங்க பேரிடர் மேலாண்மை நிதியின்கீழ் வரையறுக்கப்பட்டுள்ள விதிமுறைகளின் அடிப்படையில், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியின்கீழ் இழப்பீடு வழங்கிட முதல்வர் இன்று (நேற்று) காலை ஆணையிட்டுள்ளார். அதன்படி, நாய் கடித்து உயிரிழக்கும் மாடு ஒன்றுக்கு ரூ.37,500, வெள்ளாடு – செம்மறி ஆடு ஒன்றுக்கு ரூ.4,000, கோழி ஒன்றுக்கு ரூ.100 இழப்பீடாக வழங்கப்படும். இதுவரை உயிரிழந்த 1,149 பிராணிகளுக்கு ரூ.42 லட்சத்து 2,600 இழப்பீடாக வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

admin

Recent Posts

Madras High Court Recruitment 2025

Madras High Court has released the recruitment notification No: 72 / 2025 & 73 /… Read More

2 weeks ago

தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வுதமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.

கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை மத்திய அரசு கடந்த 2005-ம் ஆண்டு… Read More

3 weeks ago

1,300 ஊராட்சி செயலா் காலியிடங்கள் 2 மாதங்களில் நிரப்பப்படும்: அமைச்சா்

தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 1,300 ஊராட்சி செயலா் பணியிடங்கள் 2 மாதங்களில் நிரப்பப்படும் என்று ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை… Read More

4 weeks ago

அசல் பத்திரம்.. ஆவணம் தொலைந்தாலும் பத்திரப்பதிவு.. நீதிமன்றத்துக்கு பெயிரா நன்றி.. அரசுக்கு கோரிக்கை

சென்னை: பதிவுத்துறையில் சொத்து சம்பந்தமான அசல் ஆவணங்கள் இன்றி பதிவு செய்ய முடியாமல் பாதிக்கப்பட்ட பொது மக்களால் தொடுக்கப்பட்ட வழக்கில்… Read More

4 weeks ago

ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகள் இருந்தால் ரூ.10,000 அபராதம் – ஆர்பிஐ அதிரடி

Bank Account பல போலி பரிவர்த்தனைகள் நடந்தால் அபராதம் விதிக்கப்படும், ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்திருக்க முடியாது. ரூ.10,000 அபராதம்… Read More

1 month ago

முதல்வரின் வீடுகள் மறுகட்டுமான திட்டம்’ – பயனாளிகள் தேர்வுக்கு வழிகாட்டுதல்கள் என்னென்ன?

சென்னை: பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட படி, கிராமங்களில் அரசு திட்டங்கள் மூலம் கட்டிக் கொடுத்து பழுது பார்க்க இயலாத வீடுகளை மறு… Read More

1 month ago