Advertisement

இனி இப்பதிவு தேவை இல்லை. தளர்வுகள் வெளியானது…!

முன்களப்பணியாளர்களுக்கு இ-பதிவு முறை அவசியமில்லை என சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழக அரசு மே-10-ஆம் தேதி முதல் முழு ஊரடங்கை பிறப்பித்துள்ளது. இந்தநிலையில் மே-17-ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கு வெளியே செல்ல, இ- பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, நேர்முகத் தேர்வு/வேலைவாய்ப்பு உள்ளிட்ட காரணங்களை குறிப்பிட்டு, மாவட்டங்களுக்குள்ளும், வெளியேயும் பயணிக்க இ-பதிவில் அப்ளை செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. தற்சமயம் இ-பதிவில் குறிப்பிட்ட தளர்வுளை அறிவித்துள்ளனர் சென்னை காவல் துறையினர்.

முன்களப்பணியாளர்களான மருத்துவர்கள், சுகாதார துறையினர், ஊடகத்துறையினர் அத்தியாவசிய தேவைகளுக்காக செல்லும்போது, அவர்களுக்கு இ-பதிவு தேவையில்லை என காவல் துறையினர் கூறியுள்ளனர். இவர்களைப்போல அரசு ஊழியர்கள், தலைமைச் செயலக அலுவலர்கள், தூதரக அதிகாரிகள், வழக்கறிஞர்கள் பணி காரணமாக வெளியில் செல்லும் போது, தங்களது அடையாள அட்டையை காண்பித்தால் போதுமானது என பெருநகர் காவல் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சென்னையில் நேற்று ஒரு நாளில் மட்டும் ஊரடங்கு விதிமுறைகளை மீறியவர்கள் மற்றும் சமூக இடைவெளிகளை கடைபிடிக்காதவர்கள் என 3000-த்திற்கும் அதிகமான நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலே குறிப்பிட்டவர்களுக்கு பயண வழியில் அனுமதி மறுக்கப்பட்டாலோ, வாகனங்கள் அபகரிக்கப்பட்டாலோ

அவர்கள் சென்னை பெருநகர மக்கள் தொடர்பு உதவி ஆணையாளர் தொலைப்பேசி எண் 23452320 மற்றும் 9498130011 உள்ளிட்ட எண்களுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். அத்தியாவசிய தேவைகளுக்கு பொருட்களை எடுத்துச் செல்பவர்கள் மற்றும் ஆம்புலன்சில் செல்பவர்களுக்கு தனியாக வழி ஏற்பாடு செய்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

admin

Recent Posts

Tn Rural Development job And Panchayat Raj Recruitment 2025 Online Application At Tnrd Tn Govt jobs In 8 10th Pass Can Apply

தமிழ்நாடு ஊராட்சித் துறையில் அலுவலக உதவியாளர், எழுத்தர், ஓட்டுநர் வேலை; ரூ.71,900 வரை சம்பளம் - முழு விவரம்தமிழில் படிக்க… Read More

1 month ago

விவசாய கூலிகளாக இருப்பவர்கள் சொந்த நிலம் வாங்க தாட்கோ நிறுவனத்தில் விண்ணப்பிக்கலாம் || LAND PURCHASE SCHEME

ஏழை, எளிய விவசாய கூலிகளாகவே இருப்பவர்களை ’நன்னிலம் திட்டம்’ மூலம் அவர்களை நில உடைமைதாரர்களாக மாற்றும் மாபெரும் சமூக நீதி… Read More

1 month ago

TNUSRB Police Constable Recruitment 2025 Notification Out, 3644 Vacancies

Tamil Nadu Uniformed Service Recruitment Board (TNUSRB) has announced a total of 3644 vacancies for… Read More

2 months ago

Litigation Department Application Invites For 16 Office Assistant Posts

அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை; 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்அரசு வழக்கு துறையின் தமிழ்நாடு அரசு தலைமை… Read More

2 months ago