Advertisement
Categories: Uncategorized

இனி ஒருவரே பல கடன்களை வாங்க முடியாது!’ – RBI-யின் புதிய செக்… விவரம் என்ன?

தேவைகள் இருக்கிறது…செலவுகள் இருக்கிறது’ என்று ஒருவரே பல தனிநபர் கடன்களை வாங்கும் நிலை அதிகமாக இருந்து வருகிறது. ஆனால், தற்போது இந்திய ரிசர்வ் வங்கி தனது உத்தரவால், இந்த நடைமுறைக்கு செக் வைத்துள்ளது.

இதுவரை வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் தங்களிடம் கடன் வாங்கியிருந்தவர்களின் கடன் அறிக்கையை அதாவது கடன் தொகை, வட்டி, அவர்கள் எப்போது வட்டி கட்டுகிறார்கள்…வட்டி சரியாக கட்டுகிறார்களா போன்ற தகவல்களை மாதத்திற்கு ஒருமுறை அப்டேட் செய்து வந்தது.

இதை மாற்றி, ‘இனி கடன் அறிக்கையை 15 நாட்களுக்கு ஒருமுறை அப்டேட்’ செய்ய வேண்டும் என்று வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

உதாரணமாக, ஒரு நபர் ஒரு தனிநபர் கடனை வாங்கி சரியான தேதியில் வட்டி கட்டாமல் போகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவரது கடன் தகவல்கள் ஒரு மாதத்திற்கு ஒருமுறை தான் அப்டேட் செய்யப்படும் என்கிறபோது அந்த இடைவெளியில் அவர் வேறு சில கடன்களை கூட வாங்கலாம். அவற்றை கட்டாமல் போகவும் அதிக வாய்ப்பு உள்ளது.

ஆனால், கடன் அறிக்கை 15 நாட்களுக்கு ஒருமுறை அப்டேட் செய்யப்படும்போது, அவரது கடன் அறிக்கையை பார்த்து பிற வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் அவருக்கு கடன் கொடுப்பதை தவிர்க்கும். இதனால், கடன்கள் கட்டப்படாமல் போவதை தவிர்க்கலாம்.

இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த 15 நாள் உத்தரவால், ஒருவருக்கே பல தனிநபர் கடன்கள் கிடைப்பது இனி கொஞ்சம் சிக்கல் தான். அவரது கடன் அறிக்கை சரியாக இருந்தால் மட்டுமே, அவரால் பல கடன்களை வாங்க முடியும்.

admin

Recent Posts

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை – ஓய்வூதியதாரர்களுக்கு அரசின் டிசம்பர் பரிசு

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் ஓய்வூதியதாரர்களுக்கு அரசு கொடுக்கப்போகும் டிசம்பர் பரிசு. முழு விவரம் தமிழ்நாடு அரசு முன்னாள்… Read More

15 minutes ago

Post Office RD 2025: Invest ₹10,000 Monthly and Get ₹7.13 Lakh Maturity in Just 3 Years

Post Office RD 2025: The Post Office Recurring Deposit scheme continues to be one of… Read More

21 hours ago

தேர்தலில் நகை கடன் தள்ளுபடி அறிவிப்பு? கூட்டுறவு வங்கி Indian bank | IOB bank | Gold loan tamil

Gold Loan: கூட்டுறவு துறை சார்பில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் உள்பட பல்வேறு கடனுதவிகள் தங்க நகை அடகின் பேரில் வழங்கப்பட்டு… Read More

21 hours ago

‘சென்யார்’ புயல் கரையைக் கடக்கிறது: கனமழை காரணமாக தமிழக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை? சமீபத்திய புதுப்பிப்பைப் பாருங்கள் (cyclone ‘senyar’ landfall tamil nadu news)

'சென்யார்' புயல் கரையைக் கடக்கிறது: கனமழை காரணமாக தமிழக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை? ஐஎம்டியின் சமீபத்திய புதுப்பிப்பைப் பாருங்கள் Read More

2 weeks ago

Vijay Holds 1st Public Outreach Event In Tamil Nadu After Karur Tragedy

When a superstar walks into politics, people usually expect big rallies and fiery speeches. Here,… Read More

2 weeks ago

மகிழ்ச்சி செய்தி! பொங்கல் பரிசு ரூ.2000 – முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

மகிழ்ச்சி செய்தி! பொங்கல் பரிசு ரூ.2000 - முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்த அதிரடி உத்தரவு! தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு… Read More

2 weeks ago