Advertisement
Categories: Uncategorized

உத்யோகினி திட்டம்

பெண்களுக்கு 3 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கும் அரசின் அசத்தலான திட்டம்

உத்யோகினி திட்டம் முழுக்க முழுக்க பெண்களுக்கும் உதவும் வகையில் உள்ள சிறந்த திட்டமாக இருக்கின்றது. உத்யோகினி திட்டம் என்பது கிராமப்புற மற்றும் முன்னேற்றம் அடையாத பகுதிகளில் உள்ள பெண்கள் தொழில் செய்வதற்கு மானிய கடனை வழங்கும் திட்டமாகும். பெண்கள் சுயமாக தொழில் செய்ய நம்பிக்கை கொடுக்கும் வகையில் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

பெண்களுக்காக கடன் வழங்கும் திட்டம்:

பெண்கள் சுயமாக சம்பாதிக்க பெண்கள் மேம்பாட்டு கழகத்தின் கீழ் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் தான் உத்யோகினி திட்டம். இந்த திட்டமானது தொழில் முனைவோர் தொழில் தொடங்க தேவையான நிதி உதவியை பெற ஊக்குவிக்கிறது. பெண்கள் தொழில் செய்வதற்கு இந்த கடனை பயன்படுத்தி பல்வேறு துறைகளில் தங்கள் தொழிலை தொடங்க பயன் உள்ளதாக இருக்கும்.

அரசு வங்கிகள் உள்பட நிதி நிறுவனங்களுக்கு சமூகத்தின் பல்வேறு  பெண்களுக்கு வட்டியில்லா கடன் வழங்க முடிவெடுத்துள்ளது.

கடன் தொகை:

இந்த திட்டத்தில் அதிகபட்சமாக 3 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.

வட்டி விகிதம் சிறப்பு பிரிவினருக்கு அதிக மானியம் அல்லது வட்டியில்லா கடனை வழங்க வேண்டும் என்பது இந்த திட்டத்தின் நோக்கமாக இருக்கிறது.

தகுதி:

18 வயது முதல் 55 வயது வரை உள்ள பெண்கள் இந்த திட்டத்தில் பயன் அடையலாம்.  குடும்ப வருமானம் 2 லட்சம் அல்லது அதற்கு குறைவாக இருக்க வேண்டும். குடும்ப வருமானம் விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கிடையாது.

பொதுவாக ஒரு கடனை வாங்குவதற்கு செயலாக்க கட்டணம்( processing fees) இந்த திட்டத்திற்கு கிடையாது.

ஏழை பெண்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் பெண்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் வட்டியில்லா கடனை பெற முடியும். இத்திட்டத்தின் மூலமாக 88 சிறுதொழில்கள் மற்றும் விவசாய துறையில் பெண்கள் தொழில் செய்பவர்களுக்கு வட்டியில்லா கடனை வழங்குகிறது.

மானியம் எவ்வளவு.?

கடன் தொகையில் 30% வரை மானியம் கிடைக்கிறது. இதன் மூலம் கடனை திருப்பி செலுத்துவதில் உள்ள கஷ்டத்தை குறைகிறது.

தேவையான ஆவணங்கள்:

  1. ஆதார் அட்டை
  2. பிறப்பு சான்றிதழ்
  3. பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் -2
  4. சாதி சான்றிதழ்
  5. வருமான சான்றிதழ்
  6. வங்கி புத்தகத்தின் நகல்

எப்படி விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த திட்டத்திற்கான விண்ணப்பங்கள் அந்தந்த மாவட்டத்தின் மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தில் பெற்று பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

admin

Recent Posts

மகிழ்ச்சி செய்தி! பொங்கல் பரிசு ரூ.2000 – முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

மகிழ்ச்சி செய்தி! பொங்கல் பரிசு ரூ.2000 - முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்த அதிரடி உத்தரவு! தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு… Read More

7 hours ago

12வது படித்திருந்தால் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை! சம்பளம்: Rs.21,000 | தேர்வு கிடையாது

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி… Read More

1 month ago

மாவட்ட நீதிமன்றத்தில் எழுத்தர், பியூன், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது | தகுதி: 10th, Any Degree

வேலை வாய்ப்பு இணையதளம் விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.… Read More

1 month ago

Arulmigu Subramanyaswamy Temple Recruitment 2025

The Arulmigu Subramanyaswamy Temple Recruitment Thiruttani invites applications for Driver posts on Contract basis. Eligible… Read More

1 month ago

தேர்வு கிடையாது..! இந்து சமய அறநிலையத் துறையில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு Tamil Nadu Hindu horticulture recruitment 2025

நிறுவனம்அருள்மிகு பட்டினத்தார் திருக்கோயில்வகைதமிழ்நாடு அரசு வேலைகாலியிடங்கள்04பணியிடம்சென்னை, தமிழ்நாடுஆரம்ப தேதி25.09.2025கடைசி தேதி25.10.2025 தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை, அருள்மிகு… Read More

1 month ago

தமிழ்நாடு ஊராட்சித் துறையில் கிராம ஊராட்சி செயலாளர் வேலை; 1,450 காலிப்பணியிடங்கள், 10-ம் வகுப்பு தகுதி போதும்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்ப இன்று… Read More

1 month ago