Advertisement

ஊரடங்கு நீட்டிப்பு? ரூபாய் 2000 மேலும் தர தமிழக அரசு முடிவு

பாரதப் பிரதமர் தலைமையில் அனைத்து மாநில முதல்வருடன் ஆலோசனை கூட்டம் வந்து வீடியோ கான்பரன்சிங் மூலமாக நேற்று நடைபெற்றது இதில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வைரஸ் பரவலை தடுக்க தமிழக அரசுக்கு மத்திய அரசு கொடுத்து வரும் ஆதரவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் மத்திய அரசிடம் தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்துள்ளார்.

தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் 12 குழுக்கள் மூலம் வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்திருக்கிறார்.



தமிழகத்தில் ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்படும் வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

2.10 லட்சம் சர்வதேச பயணிகள் 93,146 பேர் வீடுகளில் 28 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்து இருக்கிறார்.

அதேபோல் குறிப்பாக ஊரடங்கு உத்தரவு வந்து நீட்டிக்கப்பட்ட ஆளும் ரயில் மற்றும் விமான சேவைகள் வந்து கண்டிப்பாக மீண்டும் தொடரக்கூடாது என்று தெரிவித்திருக்கிறார். மேலும் மாநிலங்களுக்கு இடையிலான எலஅது பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து

தமிழகத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் பருப்பு தானியங்கள் பிற மாநிலங்களில் இருந்து சரக்கு ரயில்கள் மூலம் கொண்டு வருவதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டு இருக்கிறது.


அதே போல பிற மாநிலங்களுக்கு இடையிலான லாரி போக்குவரத்து அனுமதிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.

அதே போல நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் உணவு தட்டுப்பாடு ஏற்பட அனுமதிக்க கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வேளாண்மை துறைக்கு சிறப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேபோல தமிழகத்தில் அம்மா உணவகம் மூலமாக தினமும் சுமார் 6 லட்சம் நம்பர் உணவு வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

உள்ளாட்சி அமைப்புகளுக்கான கூடிய 2020 21 ஆம் ஆண்டிற்கான நிதியில் இருந்து 50 சதவீத நிதியை வந்து தற்போது மத்திய அரசு விடுவிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப் பட்டிருக்கிறது.

அதேபோல மருத்துவ உபகரணங்கள் மாஸ்க்குகள் மற்றும் வென்டிலேட்டர் வாங்குவதற்காக ரூ.3 ஆயிரம் கோடி உடனடியாக தமிழக அரசு ஒதுக்கீடு செய்ய கோரிக்கை வைக்கப்பட்டு இருக்கிறது.

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் குடும்பத்திற்கு 2000 ரூபாய் வழங்க வேண்டும் என்றும் இதற்காக கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப் பட்டிருக்கிறது.

பொதுமக்கள் அதிகமாக கூடும் கூடிய பொது இடங்களில் உள்ளாட்சி அமைப்புகளால் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்திருக்கிறார்.

தேசிய பேரிடர் மீட்பு நிதியிலிருந்து ரூபாய் 1000 கோடியை தமிழகத்திற்கு உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறார்.

தமிழகத்தில் தற்பொழுது அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் இந்த மாதத்திற்கான இலவச ரேஷன் பொருட்களை விருது வழங்கப்பட்டுள்ளதை தமிழக முதலமைச்சர் கூட்டத்தில் தெரிவித்திருக்கிறார்.

admin

Recent Posts

PM SVANidhi : தெருவோர வியாபாரிகளுக்கு குட்நியூஸ்! பிஎம் ஸ்வாநிதி 2030 வரை நீட்டிப்பு

PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More

4 weeks ago

தங்கம் 7,500 முதல் 13,400 வரை: 2025-ல் தங்கம் எவ்வாறு கிட்டத்தட்ட 80 சதவீத வருமானத்தை வழங்கியது

சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More

4 weeks ago

சென்னையில் ரூ.6.73 லட்சத்துக்கு 1 BHK வீடு… தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு – யாரெல்லாம் பயன்பெறலாம்? Amazing announcement by the Tamil Nadu government – who can benefit?

சென்னையில் குறைந்த விலையில் வீடுகளை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்குப் பரிசாக தமிழக அரசு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில்… Read More

1 month ago