மும்பை : சச்சின் டெண்டுல்கரின் 50 ஒருநாள் போட்டி சதங்கள் அடித்த சாதனையை சமீபத்தில் விராட் கோலி முறியடித்தார். ஆனால், அவரது 100 சர்வதேச சதம் அடித்த சாதனையை விராட் கோலியால் முறியடிக்க முடியுமா? என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.
சமீபத்தில் இது குறித்து வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் ஜாம்பவான் பிரையன் லாராவிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறிய பதில் கோலி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
விராட் கோலி தற்போது 80 சர்வதேச சதம் அடித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 50, டெஸ்ட் போட்டிகளில் 29 மற்றும் சர்வதேச டி20யில் ஒரு சதம் அடித்துள்ளார். இதில் சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் அடித்த 49 சதம் என்ற சாதனையை கோலி முறியடித்து இருக்கிறார்.
டெஸ்ட் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் 51 சதம் அடித்துள்ளார். அதைத் தொடர் விராட் கோலிக்கு இன்னும் 22 சதங்கள் வேண்டும். டெஸ்ட் போட்டி என்று இல்லாமல் ஒட்டு மொத்தமாக சர்வதேச அளவில் 100 சதம் அடிக்க வேண்டும் என்றால் விராட் கோலிக்கு இன்னும் 20 சதங்கள் வேண்டும். அந்த 20 சதங்களை கோலி அடிப்பது மிகவும் கடினம் என கூறி இருக்கிறார் லாரா.
இது பற்றி பிரையன் லாரா பேசியது – “கோலிக்கு இப்போது என்ன வயது? 35 இல்லையா? அவர் 80 சதம் அடித்துள்ளார். இன்னும் 20 அடிக்க வேண்டும். அவர் ஒவ்வொரு ஆண்டும் ஐந்து சதம் அடித்தால் கூட சச்சின் சாதனையை தொட அவருக்கு இன்னும் நான்கு ஆண்டுகள் வேண்டும். அப்போது கோலிக்கு 39 வயது ஆகி விடும். இது கடினமான வேலை. மிகவும் கடினமான வேலை” என்றார்.
மேலும், “ஆனால், இதை யாராலும் உறுதியாக கூற முடியாது. கோலி, சச்சினின் 100 சதம் அடித்த சாதனையை முறியடித்து விடுவார் என கூறுபவர்கள் கிரிக்கெட்டின் லாஜிக்கை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. 20 சதம் என்பது மிக அதிக தூரத்தில் உள்ளது. பல கிரிக்கெட் வீரர்கள் தங்களின் மொத்த கிரிக்கெட் வாழ்விலும் 20 சதம் அடிக்க மாட்டார்கள். அதனால், நான் கோலி அதை செய்வார் என கூற மாட்டேன்” என்றார் லாரா.
Charity trust near me: Kanchipuram, tamilnadu, Ph :9087808501 CSR, NGO DERPAN, Form 80G Tax Free… Read More
Madras High Court has released the recruitment notification No: 72 / 2025 & 73 /… Read More
கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை மத்திய அரசு கடந்த 2005-ம் ஆண்டு… Read More
தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 1,300 ஊராட்சி செயலா் பணியிடங்கள் 2 மாதங்களில் நிரப்பப்படும் என்று ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை… Read More
சென்னை: பதிவுத்துறையில் சொத்து சம்பந்தமான அசல் ஆவணங்கள் இன்றி பதிவு செய்ய முடியாமல் பாதிக்கப்பட்ட பொது மக்களால் தொடுக்கப்பட்ட வழக்கில்… Read More
Bank Account பல போலி பரிவர்த்தனைகள் நடந்தால் அபராதம் விதிக்கப்படும், ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்திருக்க முடியாது. ரூ.10,000 அபராதம்… Read More