Advertisement

சூடான இருசக்கர வாகனத்தின் மீது சானிடைசர் தெளித்ததும், பைக் தீப்பிடித்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது

சூடான இருசக்கர வாகனத்தின் மீது சானிடைசர் தெளித்ததும், பைக் தீப்பிடித்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் திறந்த வெளியில் கிருமிநாசினி தெளிப்பதால் எந்த பயனும் இல்லை ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க கைகளை சுத்தமாக வைத்து கொள்வது அவசியம். அதற்காக சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்வது முக்கியமானது. சானிடைசரில் ஆல்கஹால் அளவு 60 சதவீதம் இருப்பதால் அதனை பாதுகாப்புடன் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சானிடைசர் கொண்டு கைகளை கழுவிய உடன் சூடான பகுதிளில் பயன்படுத்தக்கூடாது. பெண்கள் கிச்சனில் சானிடைசர் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இந்நிலையில் சூடான பைக் மீது சானிடைசர் தெளிக்கும் போது ஏற்படும் தீவிபத்து வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிசிடிவி கேமராவில் பதிவான அந்த காட்சியில், கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பைக் மீது சானிடைசர் தெளிக்கின்றனர். அப்போது சூடான இருசக்கர வாகனத்தின் மீது சேனிடைசர் தெளித்ததும், பைக் தீப்பிடித்து எரிகிறது.

தீவிபத்து ஏற்பட்டதும் இருசக்கர வாகனத்தில் இருப்பவர் உடனடியாக இறங்கி தப்பினார். அருகில் இருந்த காவலாளிகள் தீயணைப்பு கருவிகளை கொண்டு தீயை அணைத்தனர். இந்த சம்பவம் எந்த மாநிலத்தில் நடந்தது என்ற தகவல் உடனடியாக வெளியாகவில்லை. எனினும் சேனிடைசர் தெளிக்கும்போது கவனம் தேவை என பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

admin

Recent Posts

Tn Rural Development job And Panchayat Raj Recruitment 2025 Online Application At Tnrd Tn Govt jobs In 8 10th Pass Can Apply

தமிழ்நாடு ஊராட்சித் துறையில் அலுவலக உதவியாளர், எழுத்தர், ஓட்டுநர் வேலை; ரூ.71,900 வரை சம்பளம் - முழு விவரம்தமிழில் படிக்க… Read More

2 weeks ago

விவசாய கூலிகளாக இருப்பவர்கள் சொந்த நிலம் வாங்க தாட்கோ நிறுவனத்தில் விண்ணப்பிக்கலாம் || LAND PURCHASE SCHEME

ஏழை, எளிய விவசாய கூலிகளாகவே இருப்பவர்களை ’நன்னிலம் திட்டம்’ மூலம் அவர்களை நில உடைமைதாரர்களாக மாற்றும் மாபெரும் சமூக நீதி… Read More

4 weeks ago

TNUSRB Police Constable Recruitment 2025 Notification Out, 3644 Vacancies

Tamil Nadu Uniformed Service Recruitment Board (TNUSRB) has announced a total of 3644 vacancies for… Read More

1 month ago

Litigation Department Application Invites For 16 Office Assistant Posts

அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை; 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்அரசு வழக்கு துறையின் தமிழ்நாடு அரசு தலைமை… Read More

1 month ago