மத்திய அரசின் கீழ் கொண்டுவரப்பட்ட ஜன்தன் யோஜனா அதாவது “அனைவருக்கும் வங்கி கணக்கு’ வைத்திருப்பவர்களுக்கு ரூபே ஏடிஎம் கார்டு கொடுக்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் ரூ பே கார்டு வைத்திருப்பவர்களுக்கு விபத்து ஏற்பட்டாலோ அல்லது விபத்தின் போது கை கால்களில் பலத்த காயமடைந்தாலோ சுமார் 1 லட்சம் முதல் 2 லட்சம் வரை விபத்து காப்பீடு மத்திய அரசால் வழங்கப்படுகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் ரூபே கார்டு பிளாட்டினமாக இருந்தால் 2 லட்சம் ரூபாயும், கிளாசிக் கார்டாக இருந்தால் 1 லட்சம் ரூபாயும் வழங்கப்படும்.
மேலும் பிளாட்டினம் கார்ட் இருந்தால் விபத்து ஏற்படுவதற்கு 45 நாட்களுக்கு முன்னர் ஒரு தடவை பயன்படுத்தியிருக்க வேண்டும்.
அதே போல கிளாசிக் கார்ட் ஆக இருந்தால் விபத்து ஏற்படுவதற்கு 90 நாட்களுக்கு முன் ஒரு தடவை பயன்படுத்தி இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே விபத்து காப்பீடு வழங்கப்படும். இது தவிர ரூபே கார்ட் மற்றும் மற்ற ஏடிஎம் கார்டு வைத்திருப்பவர்கள் ஜன்தன் வங்கி கணக்கில் இல்லாமல் மற்ற கணக்குகள் வைத்திருந்தால் அந்த வங்கியில் சென்று விபத்து காப்பீட்டு திட்டங்களை அறிந்து கொள்ளலாம்.
இதில் 2 காப்பீட்டுத் திட்டங்கள் உள்ளன. பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (தனி நபர் விபத்து காப்பீடு) ,பிரதான் மந்திரி ஜீவன் பீம யோஜனா (தனிநபர் ஆயுள் காப்பீடு திட்டம்). தனிநபர் காப்பீடு திட்டத்தில் வருடத்திற்கு ரூ.12 செலுத்தி வந்தால் ஒரு லட்சம் ரூபாய் கிடைக்கும். அதேபோல ஆயுள் காப்பீடு திட்டத்தில் வருடத்திற்கு ரூ.330 செலுத்தி வந்தால் இரண்டு லட்சம் ரூபாய் காப்பீட்டு தொகையாக பெறலாம்.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State Bank of India) வங்கியில் உங்களுக்கு கணக்கு இருக்கிறதா? குறிப்பாக சேவிங்ஸ் அக்கௌன்ட்… Read More
தெருவோர கடை வைத்திருப்பவர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவும் வகையில், ரூபாய் 30,000 வரை கடன் பெறும் வகையிலான கடன் அட்டை… Read More
UPI Payments | நீங்கள் UPI மூலம் பணம் செலுத்துகிறீர்களா?.. ஆனால், பிப்ரவரி 1ஆம் தேதி முதல் உங்கள் பேமெண்ட்… Read More
சென்னை: ஓய்வு காலத்துக்கு பிறகும், நிதி பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய பென்ஷன் திட்டமான அடல் பென்ஷன் யோஜனா (Atal Pension… Read More
சென்னை: மத்திய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டம் நாடு முழுக்க பிரபலமாக இருக்கும் திட்டங்களில் ஒன்றாகும். இந்த திட்டத்தின் கீழ்… Read More
Reserve Bank of India Latest News: வரும் 2025 புத்தாண்டு (ஜனவரி 1) முதல் மூன்று வகையான வங்கிக்… Read More