Advertisement

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம்

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தில் ஏழை கர்ப்பிணி தாய்மார்களுக்கு கர்ப்பக் காலத்தில் பேறுகால நிதி உதவித் தொகையாக ரூ.12000 ரூபாயிலிருந்து ரூ.18000 ரூபாய் வழங்க மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை ஆணை வழங்கியுள்ளது.

இத்திட்டம் குழந்தை இறப்பு விகிதம் மற்றும் தாய்மார்கள் இறப்பு விகிதம் போன்றவற்றை குறைக்க காரணமாக இருந்துள்ளது.

இத்திட்டத்தின் மூலம் கர்ப்பிணி தாய்மார்களுக்கு 5 தவணை முறைகளில் ரூபாய் 18000 வழங்கப்படுகிறது. மேலும் ரூ.4000 மதிப்பிலான ஊட்டச்சத்து பரிசு பெட்டகம் வழங்கப்படுகிறது.

I தவணைகர்ப்பமுற்று 12 வாரத்திற்குள் கிராம நகர சுகாதார செவிலியரிடம் பதிவு செய்து பிக்மி எண் பெற்றவுடன்2000/-
பயன்ஊட்டச்சத்து பரிசு பெட்டகம் மூன்றாம் மாத நிலையில்2000/-
II தவணைநான்காம் மாதம் நிறைவடைவதற்குள் கர்ப்பகால மற்றும் இரத்த பரிசோதனைகள் அரசு மருத்துவமனைகளில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் செய்திருந்தால்.2000/-
பயன்இரண்டாம் ஊட்டச்சத்து பரிசு பெட்டகம்2000/-
III தவணைஅரசு மருத்துவமனைகளில் பிரசவம் நிகழ்ந்தவுடன்4000/-
IV தவணைகுழந்தைகளுக்கு 3-ஆம் தவணை OPV/ROTA/PENTA VALENT தடுப்பூசிகள் போட்ட பிறகு4000/-
V தவணைகுழந்தைகளுக்கு 9 மாதம் (270 நாட்கள் முடிந்து) தடுப்பூசி போட்ட பிறகு2000/-
மொத்தம்18000/-
கர்ப்பிணி தாய்க்கான ஊட்டச்சத்து மாவு1 கி.கி.
இரும்புச் சத்து திரவம் 200 மி.லி.3
உலர் பேரிச்சம்1 கி.கி.
புரதசத்து பிஸ்கட்500 கிராம்
ஆவின் நெய்500 கிராம்
அல்பெண்டசோல் பூச்சி மாத்திரை3
துண்டு1

திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள்

  • கர்ப்பிணித்தாய்மார்கள் 19 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
  • மேற்கண்ட 5 தவணை உதவித்தொகையினை இரண்டு பிரசவத்திற்கு மட்டுமே பெற முடியும்.
  • உயர் பிறப்பு வரிசை (இரண்டு குழந்தைகளுக்கு மேல்) தாய்மார்கள் முதல் மற்றும் ஜந்தாம் தவணை பெறலாம். (நிபந்தனைக்கு உட்பட்டது.)

திட்டத்தின் பயனை பெறுவதற்குகான நடைமுறைகள்

கர்ப்பிணித் தாய்மார்கள் கர்ப்பம் தெரிந்தவுடன் 12 வாரத்திற்குள் கிராம மற்றும் நகர சுகாதார செவிலியரிடம் பதிவு செய்து RCH எண் பெற்று இருக்க வேண்டும். அல்லது 12 வாரத்திற்குள் முன் பதிவு செய்திருக்க வேண்டும்.

தொடர்பு கொள்ள வேண்டிய நபர்கள்

அனைத்து ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவ அலுவலர்கள் மற்றும் அனைத்து கிராம நகர சுகாதார செவிலியர்கள்

பயனாளி:

ஏழை கர்ப்பிணி தாய்மார்கள்

பயன்கள்:

ஏழை கர்ப்பிணி தாய்மார்களுக்கு கர்ப்பக் காலத்தில் பேறுகால நிதி உதவி

admin

Recent Posts

PM SVANidhi : தெருவோர வியாபாரிகளுக்கு குட்நியூஸ்! பிஎம் ஸ்வாநிதி 2030 வரை நீட்டிப்பு

PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More

4 weeks ago

தங்கம் 7,500 முதல் 13,400 வரை: 2025-ல் தங்கம் எவ்வாறு கிட்டத்தட்ட 80 சதவீத வருமானத்தை வழங்கியது

சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More

4 weeks ago

சென்னையில் ரூ.6.73 லட்சத்துக்கு 1 BHK வீடு… தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு – யாரெல்லாம் பயன்பெறலாம்? Amazing announcement by the Tamil Nadu government – who can benefit?

சென்னையில் குறைந்த விலையில் வீடுகளை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்குப் பரிசாக தமிழக அரசு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில்… Read More

1 month ago