தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்கும் பொருட்டு, புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் ஜனவரி மாதம் 3 ஆம் தேதி நடைபெறும் குரூப்-1 தேர்வில் இருந்து அமலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வு கட்டுப்பட்டு அதிகாரி சுதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” விடுதல்களில் விடைகளை குறிக்க கருப்பு நிறத்திலான பால் பாயிண்ட் பேனா பயன்படுத்தப்பட வேண்டும்.
கையெழுத்திட வேண்டிய இடங்களில் கையெழுத்திட்டு, இடதுகை பெருவிரல் ரேகையினை பதிக்க வேண்டும்.
விடைகள் தெரியாத பட்சத்தில், விடைத்தாளில் ஐந்தாவது குறிப்பை கருமை நிறத்தால் குறிக்க வேண்டும். ஒவ்வொரு விடைக்கும் எத்தனை வட்டங்கள் கருமையாக்கப்பட்டுள்ளன என்பது குறித்த மொத்த எண்ணிக்கை உரிய கட்டங்களில் நிரப்ப வேண்டும்.
மேற்கூறியுள்ள எண்ணிக்கைகளை சரிவர குறிக்க தவறும் பட்சத்தில் ஐந்து மதிப்பெண்கள் குறைக்கப்படும். இதனை செய்ய நேரம் ஆகும் என்பதால், தேர்வு முடிந்ததும் 15 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்படும். ஜனவரி 3 ஆம் தேதி நடைபெறும் குரூப்-1 தேர்வு முதல் இந்த நடைமுறை அறிமுகமாகும் ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்க்கட்சிகள், அதிலும் குறிப்பாகத் தென்மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை… Read More
நாகர்கோவில்: தொகுதி மறுவரையறை விஷயத்தில் மொத்த எதிர்க்கட்சிகளும், பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்கு எதிராக திரும்பியிருக்கின்றன. இந்நிலையில் தேர்தல்… Read More
சென்னை: குமரியில் இன்று ரோடு ஷோ சென்ற பிரதமர் மோடிக்கு பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் பூக்கள் தூவி உற்சாக வரவேற்பு… Read More
கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பொது கூட்டத்திற்காக இன்று பா.ஜ.க சார்பில் பூமிபூஜை நடைபெற்றுள்ளது. பா.ஜ.க சார்பில் பூமிபூஜை தமிழ்நாட்டில் சட்டமன்றத்… Read More
தாமதமாக இறப்பைப் பதிவு செய்வதற்கான நடைமுறை விளக்கம் தாமதமாக இறப்பைப் பதிவு செய்வது – விரிவான வழிகாட்டி இறப்பு பதிவு… Read More
சென்னை: நடிகரும், தவெக தலைவருமான விஜயின் முன்னாள் மேனேஜர் பி.டி.செல்வகுமார் திமுகவில் இருந்து திடீரென்று விலகி உள்ளார். விஜய் கட்சி… Read More