Advertisement

தங்கப் பத்திரம் வாங்கத் தயாரா? விற்பனை தொடக்கம்!

தங்க முதலீட்டுப் பத்திரங்களை வாங்குவதற்கான அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. கிராமுக்கு ரூ.5,334 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Sovereign gold bond scheme எனப்படும் மத்திய அரசின் தங்கப் பத்திரத் திட்டத்தின் கீழ் தங்கப் பத்திரங்கள் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படுகின்றன. இத்திட்டத்தில், தங்கத்திற்கான விலை முன்னதாகவே நிர்ணயிக்கப்பட்டிருக்கும். கூடுதலாக செய்கூலி, சேதாரம் என எதுவும் கிடையாது. எனவே இப்பத்திரங்களில் நம்பிக்கையுடன் முதலீடு செய்யலாம். தங்கப் பத்திரத் திட்டத்தில் முதலீடு செய்தால் ஆண்டுக்கு 2.5 சதவீத வட்டி கிடைக்கும். நாம் முதலீடு செய்திருக்கும் தங்கத்திற்கு வட்டி வாயிலாக வருமானம் ஈட்டிக்கொள்ளலாம்.

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போவதால் விலை ஏற ஏற வட்டி வாயிலாக அதிக லாபமும் கிடைக்கும். தங்கப் பத்திரங்களை வாங்கி எட்டு ஆண்டுகள் வைத்திருக்கலாம். எட்டு ஆண்டுகள் முடிந்த பின்னர் கிடைக்கும் வருமானத்திற்கு வரி செலுத்தத் தேவையில்லை. எட்டு ஆண்டுகள் வரை காத்திருக்க முடியாது என்றாலும், அவசரத் தேவை ஏற்பட்டாலும் ஐந்து ஆண்டுகளுக்குப் பின் பத்திரத்தை விற்று பணத்தை பெற்றுக்கொள்ளலாம். ஆனால் அச்சமயத்தில் வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டும். தங்கப் பத்திரம் என்பது கிட்டத்தட்ட தங்கத்தை போன்றதுதான். இந்தப் பத்திரத்தை வங்கியில் அடகு வைத்தும் கடன் பெறலாம்.

Gold Rate in Chennai: ஒரு வழியா விலை குறைஞ்சிருச்சு!

இந்நிலையில், முதலீட்டுப் பத்திரங்களை இன்று முதல் வாங்கலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஆன்லைன் மூலமாகவும் பத்திரங்களை வாங்கலாம். ஆன்லைன் மூலமாக வாங்கினால் கிராமுக்கு 50 ரூபாய் சலுகை வழங்கப்படும் எனவும், ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் பத்திரங்கள் வாடிக்கையாளர்களிடம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தங்கப் பத்திரத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 5,334 ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது 2020-21 நிதியாண்டில் அறிவிக்கப்படும் ஐந்தாவது பத்திர வெளியீடாகும். ஆகஸ்ட் 7ஆம் தேதி வரையில் பத்திரங்கள் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

admin

Recent Posts

“வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை” – முழுமையான தகவல் (தமிழ்நாடு)

இந்த உதவித் தொகை மத்திய அரசு திட்டம் அல்ல; இது தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையினால் நடத்தப்படும்… Read More

7 days ago

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி இனி சாத்தியமில்லை? ₹25,000 கோடி புள்ளிவிவரம் சொல்லும் உண்மை

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் என்றாலே மக்களின் முதல் எதிர்பார்ப்பு என்ன?👉 “5 சவரனுக்குக் கீழ் நகைக்கடன் தள்ளுபடி வருமா?” நகைக்கடன்… Read More

1 week ago

Indian Post Office Recruitment 2025

Indian Post Office invites Online applications for the recruitment of 28740 Gramin Dak Sevaks (GDS)… Read More

4 weeks ago

PM SVANidhi : தெருவோர வியாபாரிகளுக்கு குட்நியூஸ்! பிஎம் ஸ்வாநிதி 2030 வரை நீட்டிப்பு

PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More

2 months ago