தமிழகத்தில் ரேஷன் அட்டைகள் இல்லாத கட்டுமான தொழிலாளர்கள் தினக் கூலிகள் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
அதற்கான விசாரணையானது நேற்றைய முன்தினம் வந்து நடைபெற்றது நோய்களைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது இதன் காரணமாக பொதுமக்கள் வேலையின்றி வீட்டில் இருந்து வருகின்றனர் இதற்காக தமிழகத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000 மற்றும் இந்த மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது அமைப்புசாரா கட்டுமான தொழிலாளர் தினக் கூலிகள் வெளிமாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்து வந்து பணியாற்றும் தொழிலாளர்கள் ஆகியோருக்கும் பாதிக்கப்பட்டுள்ளனர் இவர்களுக்கு தமிழ்நாட்டில் ரேஷன் கார்டுகள் கிடையாது.
இந்த நிலையில் அமைப்புசாரா கட்டுமான தொழிலாளர்கள் தினக் கூலிகள் மற்றும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு அவர்களுடைய ஆதார் அட்டை ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட அடையாள அட்டையின் அடிப்படையில் மூலமாக வந்து பொருட்களை வழங்குவதற்கு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து ஒரு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்குக்கான விசாரணை வந்து நேற்று முன்தினம் நடைபெற்றது அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் குடும்ப அட்டைகள் இல்லாத அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அரிசி பருப்பு எண்ணெய் உள்ளிட்ட வழங்கியுள்ளதாக விளக்கம் அளித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார் மனுதாரர் தரப்பில் இருந்து அரசு அறிக்கையில் உள்ளவாறு யாருக்கும் ரேஷன் பொருட்கள் வழங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்த தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அனைத்து ரேஷன் பொருட்களும் வழங்கிய பின்னர் ஒரு வாரத்திற்குள் இது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதாக தெரிவித்தார் இதனையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை ஒரு வார காலத்திற்கு ஒத்தி வைத்துள்ளனர் இதன் காரணமாக தமிழகத்தில் ரேஷன் அட்டைகள் இல்லாத கட்டுமான தொழிலாளர்கள் தினக் கூலிகள் மற்றும் புலம்பெயர்ந்து வந்த தொழிலாளர்களுக்கு வந்து ரேஷன் பொருட்கள் விரைவில் கிடைக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
The Staff Selection Commission (SSC) has officially uploaded the SSC Combined Graduate Level Notification 2025… Read More
இந்திய விமான நிலைய ஆணையத்தின் கார்கோ லாஜிஸ்டிக்ஸ் & அலைடு சர்வீசஸ் கம்பெனி லிமிடெட்டில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. (AAICLAS)என்ன… Read More
தமிழ்நாட்டின் போராட்டம் வெற்றி.. நகை அடகு விதிகளை.. நிறுத்தி வைக்க ஆர்பிஐக்கு மத்திய அரசு பரிந்துரை சென்னை: நகைக் கடனுக்கான… Read More
சென்னை: தமிழ்நாடு முழுவதும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை… Read More
1. அடமானம் வைக்கும் தங்கம் நகையின் மதிப்பில் 75 சதவிகிதம் மட்டும் தான் கடனாக வழங்கப்படும். அதாவது ரூ.1,000 மதிப்புள்ள… Read More
மே 24, 2025 இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய சுழுக்கணி அறிவிப்பு (மூத்த ஆட்கள்) இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள்… Read More