Advertisement
Categories: Uncategorized

தமிழகத்தில் ஜூலை 7 வரை மேலும் ஒரு வாரம் ஊரடங்கு

சென்னை: தமிழகத்தில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டித்து தமிழக அரசு இன்று (28 ம் தேதி) உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் கோவிட் 19 தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. தொற்று கட்டுக்குள் வரவில்லை. மேலும் ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுப்படும் என செய்திகள் வெளியாயின.

தமிழகத்தில் கோவிட் 19 தொற்று நோய் பரவலை தடுப்பதற்காக மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி கடந்த மே.22-ம் தேதியன்று நடந்த சட்டசபை கட்சித்தலைவர்கள் கருத்துக்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்களின் கருத்துக்களின் அடிப்படையில் கோவிட் 19 தொற்று பரவலை கட்டுப்படுத்த கடந்த மே.24 அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு வரும் மே., 31ம்- தேதி காலை 6 மணிக்கு நிறைவடைய உள்ள நிலையில் மேலும் ஒரு வார காலத்திற்கு ஜூன் 7 -ம் காலை 6 மணி வரை முழு ஊரடங்கை நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள செய்தி,

* முழு ஊரடங்கு காலத்தில் நடைமுறையில் இருந்து வரும் காய்கறி /பழங்கள் நடமாடும் வாகனங்கள் மற்றும் தள்ளுவண்டி மூலம் விற்பனை தொடரும். இதில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வீடுகளுக்கே சென்று வழங்க அனுமதிக்கப்படும்.

* 13 வகை மளிகை பொருட்கள் அடங்கிய ரேஷன் தொகுப்புகள் கடைகளில் ஜூன் மாதம் முதல் இலவசமாக வழங்கப்படும்.

* மளிகை பொருட்களை அந்தந்த பகுதிகளில் வாகனங்கள், தள்ளுவண்டிகளில் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

* கோவிட் 19 தொற்று நோயை கட்டுப்படுத்த பொதுமக்களின் நலன் கருதி முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும்.

முழுஊரடங்கையொட்டி பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும், கைகளை அடிக்கடி கிருமி நாசினி மூலம் சுத்தப்படுத்த வேண்டும். பொது இடங்களில் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கெள்கிறேன். இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

admin

Recent Posts

இலவசமாகவே ஓட்டுநர் உரிமம்.! ஒரு ரூபாய் செலவு இல்லை – தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு

தமிழக அரசு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இலவச கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி அளிக்கிறது. 16 மையங்களில் ஆண்,… Read More

22 hours ago

மகளிர் உரிமை தொகை போல் அடுத்த திட்டம்.. பெண்களுக்கு ரூ.5 லட்சம் தரும் அரசு.. விண்ணப்பிப்பது எப்படி?

https://drive.google.com/file/d/1sutlDtmCKJ0g8JMbwe9GAyfBuKTU58gV/view?usp=sharing Website Link 1: https://application.tahdco.com/ Website Link 2 : https://fast.tahdco.com/ website Link 3 : http://tahdco.com/tamil/index.php… Read More

2 days ago

தமிழக அரசு தரும் இலவச பட்டா பெற விண்ணப்பிப்பது எப்படி ? ரூல்ஸ் தெரிந்தால் இப்போது சூப்பர் வாய்ப்பு

சென்னை: பலரும் பல வருடங்களாக சில பகுதிகளில் குடியிருந்து வருவார்கள். ஆனால் அவர்களுக்கு பட்டா கிடைத்திருக்காது. பட்டாவை பொறுத்தவரை மக்கள்… Read More

3 days ago

மழை நீரை விளைநிலங்களிலேயே சேமிக்க பண்ணைக்குட்டைகள்

தமிழகத்தில் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருவதால் விவசாயிகள் தங்களின் விளை நிலங்களில், பண்ணைக்குட்டைகள் (Farm Pond) அமைத்து மழை… Read More

5 days ago

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க விண்ணப்பிக்கலாம்

சென்னை: மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க, வரும் 21ம் தேதி வரை… Read More

5 days ago

இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்….!

Child Protection Scheme | இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்தினருக்கு ரூ.50,000 கொடுக்கும் தமிழ்நாடு அரசின் திட்டத்.. தமிழ்நாடு… Read More

2 weeks ago