Advertisement
GOVT JOBS

தமிழகத்தில் 7 இடத்தில் 8000 பேருக்கு காலிப்பணியிடங்கள்

சென்னை: தொழில்துறை சார்பில் ரூ.1,298.20 கோடி முதலீட்டில் 7,879 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 7 தொழில் நிறுவனங்களின் வணிக உற்பத்தியை துவக்கி வைத்து, ரூ.10,062 கோடி முதலீட்டில் 8,666 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் 9 புதிய தொழிற்திட்டங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டியுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் ரூ.5,512 கோடி முதலீட்டில் 4,738 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Vikram Solar நிறுவனத்தின் Solar Module/Cell உற்பத்தி திட்டங்களுக்கு இன்று (23.10.2020) காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினேன்.

இதேபோல் தொழில்துறை சார்பில் திருவள்ளூர் – தேர்வாய்கண்டிகை சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.600 கோடி முதலீட்டில் Wheels India நிறுவனத்தின் வாகன சக்கரங்கள் மற்றும் சுரங்க உபகரணங்கள் உற்பத்தி திட்டத்தை துவக்கி வைத்தேன்.

இதன்மூலம் 1,800 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு உருவாகும்.

1100 பேருக்கு வேலை

திருவள்ளூர் மாவட்டம், வல்லூர் கிராமத்தில் இன்று (23.10.2020) ரூ.1000 கோடி முதலீட்டில் இன்டக்ரேட்டு சென்னை பிசினஸ் பார்க் ( Integrated Chennai Business Park (DP World) ) நிறுவனத்தின் லாஜிஸ்டிக் பார்க் (Logistics Park) திட்டத்திற்கு காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினேன். இதன்மூலம் சுமார் 1,100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும்.

சல்காம்ப் நிறுவனம்

மேலும் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா தொலைத்தொடர்பு சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ரூ.500 கோடி முதலீட்டில் 5,600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ஃபின்லாந்து நாட்டைச் சேர்ந்த Salcomp நிறுவனத்தின் கைப்பேசி மின்னேற்றிகள் உற்பத்தி திட்டத்தை துவக்கி வைத்தேன்.

அதானி தொழில் நிறுவனம்

இதேபோல் தொழில்துறை சார்பில் திருப்பூர், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ரூ.2,000 கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் Adani Gas நிறுவனத்தின் City Gas Distribution திட்டத்திற்கு இன்று (23.10.2020) அடிக்கல் நாட்டினேன்.

தூத்துக்குடி தொழிற்சாலை

காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டையில் ரூ.150 கோடி முதலீட்டில் Hyundai Motors நிறுவனத்தின் பயிற்சி மையம் அமைப்பதற்கான புதிய திட்டத்திற்கு இன்று அடிக்கல் நாட்டினேன். தூத்துக்குடி மாவட்டம், மேலக்கரந்தையில் ரூ.250 கோடி முதலீட்டில் 228 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஸ்ரீவாரி எனர்ஜி சிஸ்டம் (Shreevari Energy Systems) நிறுவனத்தின் காற்றாலை மற்றும் அனல் மின் உற்பத்தி துறைகளுக்கான தளவாடங்கள் உற்பத்தி திட்டத்திற்கு காணொலிக் காட்சி மூலம் இன்று அடிக்கல் நாட்டினேன்.

தேர்வாய்கண்டிகை
கோயம்புத்தூர் மாவட்டம் கள்ளப்பாளையத்தில் ரூ.200 கோடி முதலீட்டில் சுமார் 400 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் Aquasub Engineering நிறுவனத்தின் பம்புகள் உற்பத்தி திட்டத்திற்கு இன்று அடிக்கல் நாட்டினேன். திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய்கண்டிகை சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.600 கோடி முதலீட்டில் Philips Carbon Black நிறுவனத்தின் கார்பன் உற்பத்தி திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினேன்.இதன் மூலம் சுமார் 300 நபர்கள் வேலைவாய்ப்பு பெறுவர்” இவ்வாறு கூறியுள்ளார்.

admin

Share
Published by
admin

Recent Posts

மகளிர் உரிமை தொகை போல் அடுத்த திட்டம்.. பெண்களுக்கு ரூ.5 லட்சம் தரும் அரசு.. விண்ணப்பிப்பது எப்படி?

https://drive.google.com/file/d/1sutlDtmCKJ0g8JMbwe9GAyfBuKTU58gV/view?usp=sharing Website Link 1: https://application.tahdco.com/ Website Link 2 : https://fast.tahdco.com/ website Link 3 : http://tahdco.com/tamil/index.php… Read More

5 hours ago

தமிழக அரசு தரும் இலவச பட்டா பெற விண்ணப்பிப்பது எப்படி ? ரூல்ஸ் தெரிந்தால் இப்போது சூப்பர் வாய்ப்பு

சென்னை: பலரும் பல வருடங்களாக சில பகுதிகளில் குடியிருந்து வருவார்கள். ஆனால் அவர்களுக்கு பட்டா கிடைத்திருக்காது. பட்டாவை பொறுத்தவரை மக்கள்… Read More

8 hours ago

மழை நீரை விளைநிலங்களிலேயே சேமிக்க பண்ணைக்குட்டைகள்

தமிழகத்தில் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருவதால் விவசாயிகள் தங்களின் விளை நிலங்களில், பண்ணைக்குட்டைகள் (Farm Pond) அமைத்து மழை… Read More

3 days ago

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க விண்ணப்பிக்கலாம்

சென்னை: மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க, வரும் 21ம் தேதி வரை… Read More

3 days ago

இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்….!

Child Protection Scheme | இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்தினருக்கு ரூ.50,000 கொடுக்கும் தமிழ்நாடு அரசின் திட்டத்.. தமிழ்நாடு… Read More

1 week ago

கிரெடிட் கார்டுகள் மூலம் MSME-களுக்கு கடன்கள்; யாருக்கு, எவ்வளவு கிடைக்கும்?

கிரெடிட் கார்டுகள் மூலம் MSME-களுக்கு கடன்கள்; யாருக்கு, எவ்வளவு கிடைக்கும்?நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2025 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில்,… Read More

2 weeks ago