கல்வித் தொலைக்காட்சி வழியாக நடத்தப்படும் பாடங்களில் இருந்து அதிக கேள்விகள் கேட்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.கடந்த மார்ச் மாதம் கொரோனா பாதிப்பால் மூடப்பட்ட பள்ளிகள், இன்னும் திறக்கப்படவில்லை. இதனால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, கல்வித் தொலைக்காட்சி வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பொதுத்தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகளை நடத்த அரசு திட்டமிட்டு, அக்.1 முதல் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என அரசாணை வெளியிட்டது.ஆனால், அதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்ததால் அந்த அரசாணை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலை இவ்வாறு நீடித்துக் கொண்டே சென்றால் 10,11,12ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வுகளை எப்படி எதிர்கொள்வார்கள் என்ற கேள்வி வெகுவாக எழுந்திருக்கிறது.
இந்த நிலையில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சியில் நடத்தப்படும் பாடங்களில் இருந்து அதிகளவில் கேள்விகள் கேட்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
மாணவர்கள் கல்வித் தொலைக்காட்சியிலேயே அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அதில் நடத்தப்படும் முக்கிய தலைப்புகளை மட்டும் ஆழமாக படிக்கலாம் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
டெல்லி: தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்க்கட்சிகள், அதிலும் குறிப்பாகத் தென்மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை… Read More
நாகர்கோவில்: தொகுதி மறுவரையறை விஷயத்தில் மொத்த எதிர்க்கட்சிகளும், பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்கு எதிராக திரும்பியிருக்கின்றன. இந்நிலையில் தேர்தல்… Read More
சென்னை: குமரியில் இன்று ரோடு ஷோ சென்ற பிரதமர் மோடிக்கு பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் பூக்கள் தூவி உற்சாக வரவேற்பு… Read More
கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பொது கூட்டத்திற்காக இன்று பா.ஜ.க சார்பில் பூமிபூஜை நடைபெற்றுள்ளது. பா.ஜ.க சார்பில் பூமிபூஜை தமிழ்நாட்டில் சட்டமன்றத்… Read More
தாமதமாக இறப்பைப் பதிவு செய்வதற்கான நடைமுறை விளக்கம் தாமதமாக இறப்பைப் பதிவு செய்வது – விரிவான வழிகாட்டி இறப்பு பதிவு… Read More
சென்னை: நடிகரும், தவெக தலைவருமான விஜயின் முன்னாள் மேனேஜர் பி.டி.செல்வகுமார் திமுகவில் இருந்து திடீரென்று விலகி உள்ளார். விஜய் கட்சி… Read More