கொரானா வைரஸ் காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு புதுச்சேரி கல்வி பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை வைத்துள்ளது.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள மனுவில் தமிழக அரசு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்கள் மேல்நிலை கல்வியில் சேர்வதற்கும் பாலிடெக்னிக் ஐடிஐ போன்ற தொழில் சார்ந்த கல்வியில் சேர்வதற்கு அவசியம் நடத்தப்படும் என்ற நிலைக்கு வந்து இருப்பதாக செய்திகள் வந்துள்ளன ஆனால் இந்த அசாதாரண சூழலில் தேர்தல் நடத்துவதால் மாணவர்கள் பெற்றோர் ஆசிரியர்கள் இவர்களுக்கு தோற்று உருவாக வாய்ப்புகள் உண்டு குறிப்பாக பத்தாம் வகுப்பு தேர்வை அவசரமாக நடத்துவதால் நோய்த்தொற்று சூழல் ஏற்படலாம்.
அரசு தொலைக்காட்சி ஊடகம் இணையம் மூலமும் நடத்தும் 10 ஆம் வகுப்பு பாடங்கள் பெரும்பாலான மாணவ மாணவிகளை சென்று சேர்வதில் பல இடர்பாடுகள் உள்ளன.
அசாதாரண சூழல் மாணவர்களிடத்தில் கற்பதற்கு சாதகமற்ற எதிர்மறையான உளவியல் அழுத்தங்களை உருவாக்கியுள்ளது பள்ளிச் சூழலில் சில வாரங்களாவது படித்த பின்பு தேர்வு வேண்டும் என்றும் அரசு பள்ளி தரப்பில் கோரிக்கை எழுகிறது அப்படி ஒரு மாதம் சென்றாலும் அடுத்த கல்வியாண்டு எப்போது தொடங்கும் என்று உறுதியாக கூற இயலாது குறைந்தபட்சம் ஒரு மாதம் பத்தாம் வகுப்பு ஒதுக்கிவிட்டால் புதிய பத்தாம் வகுப்பு மற்றும் தேர்வு மையம் பள்ளிகளில் மற்ற வகுப்பு குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என்ற பத்தாம் வகுப்பு மாணவர்களும் 11ஆம் வகுப்பு காலத்தில் ஒரு மாதத்தை இழக்க நேரிடும் பெரும்பாலான மாணவர்களும் ஆசிரியர்களும் தேர்வு மையங்களுக்கு செல்வதற்கு பொதுப் போக்குவரத்தை தான் நம்பியுள்ளனர்.
கொரோனா வைரஸ் சமூகம் பரவலாக உருவாக வாய்ப்பளிக்கும் தேர்வு நடத்துவதும் விடைத்தாள் திருத்தும் பொழுது கவனம் முன்னெச்சரிக்கை சமூக இடைவெளியை கையை கழுவுதல் பின்பற்றுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல் ஆகியவை பல இடர்பாடுகள் ஏற்படுத்தும் அதனால் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு இல்லை என்று அறிவிக்கலாம்.
ஆண்டுதோறும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி அதிகரித்து வருகிறது நடப்பாண்டில் 97% தேர்ச்சி அடைந்து இருக்கும் அதற்கு பதிலாக அனைவரும் தேர்ச்சி என்றால் பள்ளி மாணவர்களில் ஏறத்தாழ மூன்று சதவீதத்தினரும் தனித்தேர்வர்கள் குறைந்த அளவிலும் தேர்ச்சி பெறுவர் குறைந்தபட்ச தேர்ச்சி பெற்றவர்கள் அவர்களால் கணிக்க முடிந்த பாடப்பிரிவுகளில் தொழில் பிரிவில் சேர்வார்கள் மேலும் கல்வி துறையானது திருப்புதல் தேர்வுகளில் மதிப்பெண்கள் அடிப்படையிலும் மாணவர்களின் சராசரி அனைத்தையும் அதன் வளர்ச்சியையும் அறிவதற்கு முடியும் அந்த மதிப்பெண்கள் EMIS தளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன அதனடிப்படையில் ஏ பி சி என்ற மூன்று நிலைகளில் தரமுடியும் தனித்தேர்வர்களுக்கு சீக்கிரம் வரலாம் தானே பேரிடர் கால சிறப்பு சான்றிதழ் பெயர் வயது போன்ற வழக்கமான சான்றிதழ் போல இடம்பெற செய்யலாம் தேர்வு இல்லாவிட்டாலும் அனைத்து சிக்கல்களுக்கும் இந்தச் சான்று தீர்வாக இருக்கும் மேல் அணிவகுப்புகள் தொழில் பிரிவுகளில் சேர்ந்து தனது எதிர்காலத்தை அறிவிக்க அடுத்த தலைமுறைக்கு பேருதவியாக இருக்கும்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு என்பது கட்டாயம் நடைபெறும் என்றும் கோரோனா வைரஸ் ஊரடங்கு முடிந்த பிறகு பொதுத்தேர்வு அட்டவணை இருந்து வெளியாகும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் ஏற்கனவே வந்து தெரிவித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State Bank of India) வங்கியில் உங்களுக்கு கணக்கு இருக்கிறதா? குறிப்பாக சேவிங்ஸ் அக்கௌன்ட்… Read More
தெருவோர கடை வைத்திருப்பவர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவும் வகையில், ரூபாய் 30,000 வரை கடன் பெறும் வகையிலான கடன் அட்டை… Read More
UPI Payments | நீங்கள் UPI மூலம் பணம் செலுத்துகிறீர்களா?.. ஆனால், பிப்ரவரி 1ஆம் தேதி முதல் உங்கள் பேமெண்ட்… Read More
சென்னை: ஓய்வு காலத்துக்கு பிறகும், நிதி பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய பென்ஷன் திட்டமான அடல் பென்ஷன் யோஜனா (Atal Pension… Read More
சென்னை: மத்திய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டம் நாடு முழுக்க பிரபலமாக இருக்கும் திட்டங்களில் ஒன்றாகும். இந்த திட்டத்தின் கீழ்… Read More
Reserve Bank of India Latest News: வரும் 2025 புத்தாண்டு (ஜனவரி 1) முதல் மூன்று வகையான வங்கிக்… Read More