கரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்தியா முழுவதும் முதல் கட்டமாக ஏப்ரல் 14ஆம் தேதி வரையில் தொடர்ந்து 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது என பொதுமக்கள் அனைவரும் வேலை மற்றும் வருமானங்கள் இன்றி வீட்டில் முடங்கி விடுகிறார்கள் இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல சலுகைகளை மட்டும் திட்டங்களை அறிவித்துள்ளது இதுகுறித்த அறிவிப்பு மார்ச் 26ம் தேதியன்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் அறிவித்திருந்தார் அதில் முக்கியமாக ரேஷன் கடைகளின் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏப்ரல் மே மற்றும் ஜூன் மாதங்களில் கூடுதலாக 5 கிலோ தானியம் அரிசி அல்லது கோதுமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தமிழகத்தில் அரசு குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ஏப்ரல் மாதம் நிவாரணமாக ஆயிரம் ரூபாய் நிதி உதவி மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் அனைத்தும் விலை என்று வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்தார் அதன் பின்னர் நாடு முழுவதும் இரண்டாம் கட்டமாக மே 3ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு செய்யப்பட்டிருந்த நிலையில் தமிழகத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் அனைத்தும் விலையில்லா வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்துள்ளார்.
அடுத்த மாதம் 2 மற்றும் 3ம் தேதி வந்து தொடங்கும் என்றும் 4ஆம் தேதியில் இருந்து உணவு பொருட்களை ரேஷன் கடையில் மூலமாக இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது இந்த நிலை என தமிழகத்தில் குடும்ப அட்டைகளில் பெயர் உள்ள ஒவ்வொரு நபருக்கும் தலா 5 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் இலவச அரிசி உடன் ஏப்ரல் மே மற்றும் ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்கு அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் தலா 5 கிலோ அரிசி கூடுதலாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது அதேபோல ஏப்ரல் மாதத்திற்கான கூடுதல் அரிசியினை மே மற்றும் ஜூன் மாதங்களில் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
Indian Post Office invites Online applications for the recruitment of 28740 Gramin Dak Sevaks (GDS)… Read More
PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More
சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More
விவசாய மின் இணைப்பு Read More