Advertisement

தமிழக அரசு ஜூன் 3ம் தேதி இலவசமாக 13 வகையான மளிகைப் பொருட்கள் மற்றும் 5000 நிவாரணம்

தமிழகத்தில் கொரனோ வைரஸ் பரவும் வேகம் அதிகரிப்பதன் காரணமாக கடந்த சில நாட்களாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பதும் இந்த ஊரடங்கு உத்தரவு மே மாதம் 24ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலையின்றி வருமானம் இன்றி இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழக அரசு 13 வகையான மளிகைப் பொருட்களை வழங்க உள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கோதுமை, ரவை உள்ளிட்ட 13 பொருள்கள் அடங்கிய தொகுப்பு 2.11 கோடி குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மூன்றாம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளில் இந்த திட்டம் தொடங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் என்னென்ன பொருட்கள் எவ்வளவு வழங்கப்படும் என்பது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் மீனவர்களுக்கு ரூ.5,000 நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மீன்பிடி தடைக்காலம்
கடல் மீன்வளத்தை பேணிக்காத்திட தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15-ம் நாள் அன்று தொடங்கி ஜூன் 14-ம் நாள் வரையிலும், மேற்கு கடற்கரை பகுதியில் ஜூன் 1-ம் நாளன்று தொடங்கி ஜூலை 31-ம் நாள் வரையிலும் 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

தடைக்கால நிவாரணம்
மீன்பிடி தடைக்காலத்தின்போது மீன்பிடி விசைப்படகுகளில், இழுவைப்படகுகளில் மீன்பிடிப்பு செய்யும் பணியாளர்கள் மற்றும் முழு நேர மீன்பிடிப்பினை சார்ந்த மீனவ குடும்பங்கள் முற்றிலுமாக தொழில் இன்றி வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் மீன்வர்கள் தங்கள் குடும்பத்தினை சிரமமின்றி நடத்தி செல்ல 2008-ம் ஆண்டு முதல் மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கப்படுகிறது.

ரூ.5,000 நிவாரணம்
தமிழக முதல்வர் அவர்களின் உத்தரவுப்படி நடப்பாண்டிற்கு(2021-ம் ஆண்டு) 1.72 இலட்சம் கடல் மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவராணத் தொகை தலா ரூ.5000 வீதம் வழங்கிடும் பொருட்டு ரூபாய் 86.00 கோடி நிதி ஒப்புதல் வழங்கி அரசு ஆணை பிறப்பித்துள்ளது. கிழக்கு கடற்கரை பகுதி மாவட்டங்களான திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம்.,

வங்கி கணக்கில் செலுத்தப்படும்

திருவாருர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி(பகுதி) ஆகியவற்றை சேர்ந்த 25,402 பயனாளிகளும், மேற்கு கடற்கரை மாவட்டமான கன்னியாகுமரியை சேர்ந்த 25,402 பயனாளிகளும் ஆக மொத்தம் 1,72,000 பயனாளிகள் இந்த திட்டத்தின் மூலம் பயனடைவார்கள். மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையானது மீனவர்களின் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக வரவு வைக்கப்படும் என மீன்வளம்-மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதா கிருஷ்ணன் தெரிவித்தார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

admin

Recent Posts

ssc cgl exam apply online 2025 tamil | how to apply ssc cgl 2025 in tamil | sc cgl form fill up 2025

The Staff Selection Commission (SSC) has officially uploaded the SSC Combined Graduate Level Notification 2025… Read More

2 weeks ago

மொத்த காலி பணியிடங்கள்: 227 சென்னையில்… ஏர்போர்ட்டில் வேலைவாய்ப்பு! – எப்படி விண்ணப்பிக்கலாம்?

இந்திய விமான நிலைய ஆணையத்தின் கார்கோ லாஜிஸ்டிக்ஸ் & அலைடு சர்வீசஸ் கம்பெனி லிமிடெட்டில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. (AAICLAS)என்ன… Read More

2 weeks ago

BREAKING | Gold Loan New Rules | RBI | தங்க நகை கடன் – RBIக்கு நிதி அமைச்சகம் பரிந்துரை

தமிழ்நாட்டின் போராட்டம் வெற்றி.. நகை அடகு விதிகளை.. நிறுத்தி வைக்க ஆர்பிஐக்கு மத்திய அரசு பரிந்துரை சென்னை: நகைக் கடனுக்கான… Read More

4 weeks ago

10 வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை.. தமிழக அரசு மாதம் மாதம் தரும் உதவி தொகை.. விண்ணப்பிக்க அழைப்பு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை… Read More

1 month ago

Gold Loan: `உரிமையாளருக்கான ஆதாரம், தரச்சான்றிதழ்’ – தங்க நகைக்கடனுக்கு RBI அறிவித்த 9 புதிய விதிகள்

1. அடமானம் வைக்கும் தங்கம் நகையின் மதிப்பில் 75 சதவிகிதம் மட்டும் தான் கடனாக வழங்கப்படும். அதாவது ரூ.1,000 மதிப்புள்ள… Read More

1 month ago

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு (மூத்த ஆட்கள் இல்லை)

மே 24, 2025 இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய சுழுக்கணி அறிவிப்பு (மூத்த ஆட்கள்) இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள்… Read More

1 month ago