கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது நிலையில் தமிழக அரசு சார்பில் நிவாரணமாக மே மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் அதாவது ஒரு கிலோ சர்க்கரை ஒரு கிலோ துவரம் பருப்பு ஒரு கிலோ சமையல் எண்ணெய் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு அவர்களுக்கு வழங்கப்படும் அரிசி ஆகியவை ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார் அதன் தொடர்ச்சியாக மேற்படி அத்தியாவசிய பொருட்கள் பாதுகாப்பாக அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் 24 4 2020 மற்றும் 25 4 2020 ஆகிய நாட்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அவரவர் வீடுகளிலேயே டோக்கன் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்து இருந்தது.
இந்த நிலையில் டோக்கன் வழங்கப்படும் தேதியை மாற்றம் செய்தும் இலவச ரேஷன் பொருட்கள் கொடுக்கப்படும் தேதி குறித்து தமிழக அரசு புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மீண்டும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறது முன்பே 13 4 2020 அன்று தமிழ்நாட்டில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் அது ஒரு கிலோ சர்க்கரை ஒரு கிலோ துவரம் பருப்பு ஒரு கிலோ சமையல் எண்ணெய் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு எப்பொழுதும் வழங்கப்படும் அரிசி ஆகியவை நியாயவிலைக் கடைகளில் விலையில்லா வழங்கப்படும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார்கள்.
நோய்த்தொற்று ஏற்படாத வண்ணம் மேற்படி அத்தியாவசிய பொருட்கள் பாதுகாப்பாக அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் 24 -05-2020 மற்றும் 25 4 2020 ஆகிய நாட்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அவரவர் வீடுகளிலேயே டோக்கன் வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது இந்த நிலையில் மே மாதத்திற்கான இலவச ரேஷன் பொருட்கள் பெறுவதற்கான டோக்கன் வழங்க கூடிய தேதி மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
தற்போது அதற்கு மாற்றாக வரும் 02 -05 -2020 மற்றும் 03-05-2020 ஆகிய நாட்களில் டோக்கன்கள் வழங்கப்படும் சந்தர்ப்பங்களில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும் சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் மே மாதத்துக்கு குறிப்பிடப்பட்டுள்ள அந்த நாள் மற்றும் நேரத்தில் தமது நியாயவிலை கடைகளுக்கு சென்று அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மே மாதம் நான்காம் தேதி முதல் அத்தியாவசிய பொருட்கள் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து தங்களுக்கு உரிய அத்தியாவசியப் பொருட்களை விலையில்லாமல் பெற்று கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி… Read More
வேலை வாய்ப்பு இணையதளம் விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.… Read More
The Arulmigu Subramanyaswamy Temple Recruitment Thiruttani invites applications for Driver posts on Contract basis. Eligible… Read More
நிறுவனம்அருள்மிகு பட்டினத்தார் திருக்கோயில்வகைதமிழ்நாடு அரசு வேலைகாலியிடங்கள்04பணியிடம்சென்னை, தமிழ்நாடுஆரம்ப தேதி25.09.2025கடைசி தேதி25.10.2025 தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை, அருள்மிகு… Read More
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்ப இன்று… Read More
தமிழ்நாடு ஊராட்சித் துறையில் அலுவலக உதவியாளர், எழுத்தர், ஓட்டுநர் வேலை; ரூ.71,900 வரை சம்பளம் - முழு விவரம்தமிழில் படிக்க… Read More