Advertisement

தமிழக அரசு புதிய அறிவிப்பு

கொரோனா பாதிப்பு நிவாரணமாக தமிழக அரசு அறிவித்த ஆயிரம் ரூபாய் வரும் ஏழாம் தேதி முதல் பயனாளிகளின் வீட்டுக்கே கொண்டு சேர்க்க அரசு உத்தரவிட்டுள்ளது.


கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட நிலையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் இலவச பொருட்கள் வழங்குவதாக முதல்வர் அறிவித்தார்.


நேற்று முதல் ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் பொருட்கள் வழங்கப்பட்ட நிலையில், பல்வேறு இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. டோக்கன் விநியோகித்து மக்களை கட்டுப்படுத்தினாலும், பணத்தைப் பெறும் ஆர்வத்தில் சிலர் தங்களது நேரத்திற்கு முன்பே வந்து காத்திருந்தனர்.


இந்த நிலையில், வரும் 7-ம் தேதி முதல் ஆயிரம் ரூபாய் பணத்தை பயனாளிகளின் வீட்டுக்கே கொண்டுபோய் சேர்க்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பணத்துடன் இலவச பொருட்களைப் பெறுவதற்கான டோக்கனை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.


நாளை ஏற்கனவே டோக்கன் வழங்கப்பட்டவர்களுக்கு ரேஷன் கடையிலேயே பணம் மற்றும் பொருட்கள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாளை மறுநாள் விடுமுறை மற்றும் 6-ம் தேதியும் ஏற்கனவே டோக்கன் வழங்கப்பட்டவர்களுக்கு ரேஷன் கடையில் பணம் மற்றும் பொருட்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.


7-ம் தேதி முதல் எக்காரணத்தைக் கொண்டும் ரேஷன் கடையில் பணம் விநியோகிக்கக் கூடாது என்றும், இலவச பொருட்களை மட்டுமே ரேஷன் கடையில் விநியோகிக்க வேண்டும் என்றும்  உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ANSWER

185+185+185=555



admin

Recent Posts

“வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை” – முழுமையான தகவல் (தமிழ்நாடு)

இந்த உதவித் தொகை மத்திய அரசு திட்டம் அல்ல; இது தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையினால் நடத்தப்படும்… Read More

3 weeks ago

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி இனி சாத்தியமில்லை? ₹25,000 கோடி புள்ளிவிவரம் சொல்லும் உண்மை

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் என்றாலே மக்களின் முதல் எதிர்பார்ப்பு என்ன?👉 “5 சவரனுக்குக் கீழ் நகைக்கடன் தள்ளுபடி வருமா?” நகைக்கடன்… Read More

3 weeks ago

Indian Post Office Recruitment 2025

Indian Post Office invites Online applications for the recruitment of 28740 Gramin Dak Sevaks (GDS)… Read More

1 month ago

PM SVANidhi : தெருவோர வியாபாரிகளுக்கு குட்நியூஸ்! பிஎம் ஸ்வாநிதி 2030 வரை நீட்டிப்பு

PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More

3 months ago