Advertisement

தமிழக அரசு மற்றும் மத்திய அரசு பள்ளி கல்லூரிகள் எப்போது திறக்கப்படும்?

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக இந்தியா முழுவதும் வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது இதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டிருக்கிறது அதேபோல நடைபெறவிருந்த தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன இந்த நிலையில் 15ஆம் தேதிக்கு பிறகு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வந்து வழக்கம்போல் திறக்கப்படுமா? அல்லது ஒத்தி வைக்கப்படடுயிருக்கு தேர்வு நடத்தப்படுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது இந்த நிலையில் இதுகுறித்து மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் உடைய அறிவிப்புகள் என்ன என்பது குறித்து பார்க்கலாம் .



1. தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவருடைய அறிவிப்பு

ஈரோடு மாவட்டம் நம்பியூரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் கூறியதாவது கொரோனா வைரஸ் தடுப்பதற்காக மக்களுக்காகவே தமிழக அரசில் பல பணிகளை நாள்தோறும் செய்து வருவதாகவும் ஒவ்வொரு இடங்களிலும் நேரடியாக ஆய்வு பணிகளை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார் எந்த ஒரு உயிரினமும் தமிழ்நாட்டில் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக தமிழக அரசு செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார் தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் அனைத்து ஆசிரியர்கள் அலுவலர்கள் உடைய ஒரு நாள் சம்பளம் 70 கோடி ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்படும் என தெரிவித்திருக்கிறார் .
அதேபோல இந்த தொகையானது முதலமைச்சர் உடைய நிவாரண நிதிக்கு வந்து சென்று விடும் எனவும் தெரிவித்துள்ளார்.


பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை பொறுத்த அளவில் இதுவரை துறை சார்ந்த எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்திருக்கிறார்.

தமிழகத்தில் 144 தடை உத்தரவு வரும் 14-ஆம் தேதி வரை இருக்கிறது அதன் பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவருடன் கலந்து ஆலோசித்த ஆலோசனை செய்த பிறகு என்ன என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை மேற்கொள்ளும் என தெரிவித்திருக்கிறார் மாணவர்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக தமிழக முதலமைச்சர் விடுமுறை அறிவித்தது மட்டுமில்லாமல் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.

மாணவர்களுடைய எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வீட்டிலிருந்து அவர்களுடைய பணியை செய்து வருவதாகவும் பத்தாம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவர்களுக்கு செயல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளன

அவர்களுடைய சிலபஸ் அனைத்தும் YOUTUBE மூலமாக அவர்களுடைய வீடுகள் மற்றும் ஆங்காங்கே இருக்கும் தொலைக்காட்சி மற்றும் செல்போன் மூலமாக கற்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என கேட்கப்பட்ட கேள்விக்கு தமிழகத்தில் 144 தடை உத்தரவு வரும் 14ம் தேதி வரை இருக்கிறது தமிழக முதலமைச்சர் அவர்கள் 15ஆம் தேதிக்கு பிறகு என்ன முடிவு எடுக்கிறார் அதன்படி பள்ளிக்கல்வித் துறை செயல்படும் எனவும் தெரிவித்திருக்கிறார்.

2. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிஅவருடைய அறிவிப்பு
தடுப்பு நடவடிக்கை தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அனைத்து மாவட்ட ஆட்சியர் ஆலோசனை நடத்தினார் அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார் மேலும் 21 நாட்களுக்கு பிறகு ஏப்ரல் 14ஆம் தேதிக்கு பிறகு அந்த வைரஸ் நோய் விரியத்தைப் பொறுத்து பள்ளிகள் தேர்வு குறித்து ஆலோசிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

3. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் உடைய அறிவிப்பு

இந்தியாவில் வரும் 14ம் தேதியுடன் ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வருவதால் மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் திறக்கப் படுமா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் கோக்ரியால் அவர்கள் தற்போதைய சூழலில் இது குறித்து முடிவெடுப்பதில் கடினமான விஷயம் என தெரிவித்திருக்கிறார் மேலும் 14ஆம் தேதி என்னுடைய நிலைமையை மீண்டும் ஆய்வு செய்து அப்போதைய சூழலைப் பொறுத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்க அல்லது விடுமுறையை நீடிக்கலாம் என்று முடிவு செய்யப்படும் என தெரிவித்திருக்கிறார் தற்போது மாணவர்களின் பாதுகாப்பு முக்கியம் என்றும் மீண்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டாலும் மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் பின்பற்றிவரும் செயல் திட்டத்தை மத்திய அரசு தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறார் ஊரடங்கு விளக்கப்பட்ட ஒத்தி வைக்கப்பட்டுள்ள தேர்வுகளை நடத்துவது மற்றும் நடந்து முடிந்த தேவைகளுக்கான வினாத்தாள் திருத்தல் பணிகள் ஆகியவை பணிகளுக்கு திட்டம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார்.

admin

Recent Posts

தமிழ்நாடு ஊராட்சித் துறையில் கிராம ஊராட்சி செயலாளர் வேலை; 1,450 காலிப்பணியிடங்கள், 10-ம் வகுப்பு தகுதி போதும்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்ப இன்று… Read More

1 day ago

Tn Rural Development job And Panchayat Raj Recruitment 2025 Online Application At Tnrd Tn Govt jobs In 8 10th Pass Can Apply

தமிழ்நாடு ஊராட்சித் துறையில் அலுவலக உதவியாளர், எழுத்தர், ஓட்டுநர் வேலை; ரூ.71,900 வரை சம்பளம் - முழு விவரம்தமிழில் படிக்க… Read More

1 month ago

விவசாய கூலிகளாக இருப்பவர்கள் சொந்த நிலம் வாங்க தாட்கோ நிறுவனத்தில் விண்ணப்பிக்கலாம் || LAND PURCHASE SCHEME

ஏழை, எளிய விவசாய கூலிகளாகவே இருப்பவர்களை ’நன்னிலம் திட்டம்’ மூலம் அவர்களை நில உடைமைதாரர்களாக மாற்றும் மாபெரும் சமூக நீதி… Read More

2 months ago

TNUSRB Police Constable Recruitment 2025 Notification Out, 3644 Vacancies

Tamil Nadu Uniformed Service Recruitment Board (TNUSRB) has announced a total of 3644 vacancies for… Read More

2 months ago