காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம், காஞ்சிபுரம் காமாட்சியம்மன் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் மற்றும் காஞ்சிபுரம் திருவள்ளூவர் பட்டு கைத்தறி நெசவாளர் சங்கங்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: தமிழ்நாடு கைத்தறி மற்றும் ஜவுளித் துறை
மொத்த காலியிடங்கள்: 34
பணியிடம்: தமிழ்நாடு
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Computer Operator – 02
சம்பளம்: மாதம் ரூ.4,500 – 27,530 + தர ஊதியம் ரூ.1,100
பணி: Designer – 02
சம்பளம்: மாதம் ரூ.5,800 – 32,970 + தர ஊதியம் ரூ.1,500
பணி: Typist – 02
பணி: Loom Supervisor – 02
சம்பளம்: மாதம் ரூ.4,900- 27,800 + தர ஊதியம் ரூ.1,200
பணி: Office Assistant – 02
பணி: Adai Maker – 03
பணி: Junior Clerk – 08
பணி: Salesman/Saleswoman Grade II – 13
சம்பளம்: மாதம் ரூ.4,000 – 19,360 + தர ஊதியம் ரூ.900
வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி பொது பிரிவினர் 30 வயதிற்குள்ளும், பிசி, எம்பிசி, டிஎன்சி பிரிவினர் 32 வயதிற்குள்ளும், எஸ்சி, எஸ்டி மற்றும் அனைத்து பிரிவைச் சேர்ந்த விதவைகள் பிரிவைச் சேர்ந்தவர்கள் 35 வயதிற்குள்ள இருக்க வேண்டும்.
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அறிவிப்பை பார்த்து முழுமையாக தெரிந்துகொள்ளவும். 8, 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் தட்டச்சு தகுதி மற்றும் கூட்டுறவு பயிற்சி பெற்றிருப்பவர்கள், டிசைனர் பிரிவில் டிப்ளமோ மற்றும் கணினி அறிவியல் துறையில் பி.எஸ்சி பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: கைத்தறி மற்றும் துணிநூல் துறை, துணை இயக்குநர் அலுவலகம், 824, கே.எஸ்.பார்த்தசாரதி தெரு, காமாட்சியம்மன் காலனி, ஒரிக்கை காஞ்சிபுரம் – 631501
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.12.2019
டெல்லி: தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்க்கட்சிகள், அதிலும் குறிப்பாகத் தென்மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை… Read More
நாகர்கோவில்: தொகுதி மறுவரையறை விஷயத்தில் மொத்த எதிர்க்கட்சிகளும், பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்கு எதிராக திரும்பியிருக்கின்றன. இந்நிலையில் தேர்தல்… Read More
சென்னை: குமரியில் இன்று ரோடு ஷோ சென்ற பிரதமர் மோடிக்கு பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் பூக்கள் தூவி உற்சாக வரவேற்பு… Read More
கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பொது கூட்டத்திற்காக இன்று பா.ஜ.க சார்பில் பூமிபூஜை நடைபெற்றுள்ளது. பா.ஜ.க சார்பில் பூமிபூஜை தமிழ்நாட்டில் சட்டமன்றத்… Read More
தாமதமாக இறப்பைப் பதிவு செய்வதற்கான நடைமுறை விளக்கம் தாமதமாக இறப்பைப் பதிவு செய்வது – விரிவான வழிகாட்டி இறப்பு பதிவு… Read More
சென்னை: நடிகரும், தவெக தலைவருமான விஜயின் முன்னாள் மேனேஜர் பி.டி.செல்வகுமார் திமுகவில் இருந்து திடீரென்று விலகி உள்ளார். விஜய் கட்சி… Read More