தமிழ் சினிமாவின் பிரபல நடிகை ரோஜா உடல்நலக்குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
செம்பருத்தி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ரோஜா தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தார். அதன்பிறகு இயக்குநர் ஆர்.கே.செல்வமணியை திருமணம் செய்து கொண்டு அரசியல் பக்கம் சென்றுவிட்டார்.
அரசியலில் தனக்கென்று முத்திரை பதித்த அவர், ஆந்திராவின் நகரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பில் உள்ளார். இந்நிலையில் உடல்நலக்குறைபாடு காரணமாக ரோஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இரண்டு அறுவை சிகிச்சை நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் ரோஜா விரைவில் குணமடைய வேண்டும் என அவரது ரசிகர்களும், தொகுதி மக்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ரோஜாவின் உடல் நலம் குறித்து ஆர்.கே.செல்வமணி ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ரோஜாவின் உடல் நலம் தற்போது நன்றாக உள்ளதாக கூறியுள்ளார். அவருக்கு ஏற்கனவே செய்ய வேண்டிய இரண்டு அறுவை சிகிச்சைகள் தற்போது செய்யப்பட்டுள்ளதாகவும், அதனால் பயப்படும் அளவுக்கு எதுவும் இல்லை என்று கூறியுள்ளார்.
ரோஜா தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் வீடு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் தொடர்ந்து பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
தமிழ்நாடு ஊராட்சித் துறையில் அலுவலக உதவியாளர், எழுத்தர், ஓட்டுநர் வேலை; ரூ.71,900 வரை சம்பளம் - முழு விவரம்தமிழில் படிக்க… Read More
ஏழை, எளிய விவசாய கூலிகளாகவே இருப்பவர்களை ’நன்னிலம் திட்டம்’ மூலம் அவர்களை நில உடைமைதாரர்களாக மாற்றும் மாபெரும் சமூக நீதி… Read More
Tamil Nadu Uniformed Service Recruitment Board (TNUSRB) has announced a total of 3644 vacancies for… Read More
Gold Rate Today in Tamil Nadu (14 August 2025) – 22K & 24K Price Updates… Read More
Gold Appraisal Read More
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை; 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்அரசு வழக்கு துறையின் தமிழ்நாடு அரசு தலைமை… Read More