தமிழ் சினிமாவின் பிரபல நடிகை ரோஜா உடல்நலக்குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
செம்பருத்தி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ரோஜா தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தார். அதன்பிறகு இயக்குநர் ஆர்.கே.செல்வமணியை திருமணம் செய்து கொண்டு அரசியல் பக்கம் சென்றுவிட்டார்.
அரசியலில் தனக்கென்று முத்திரை பதித்த அவர், ஆந்திராவின் நகரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பில் உள்ளார். இந்நிலையில் உடல்நலக்குறைபாடு காரணமாக ரோஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இரண்டு அறுவை சிகிச்சை நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் ரோஜா விரைவில் குணமடைய வேண்டும் என அவரது ரசிகர்களும், தொகுதி மக்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ரோஜாவின் உடல் நலம் குறித்து ஆர்.கே.செல்வமணி ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ரோஜாவின் உடல் நலம் தற்போது நன்றாக உள்ளதாக கூறியுள்ளார். அவருக்கு ஏற்கனவே செய்ய வேண்டிய இரண்டு அறுவை சிகிச்சைகள் தற்போது செய்யப்பட்டுள்ளதாகவும், அதனால் பயப்படும் அளவுக்கு எதுவும் இல்லை என்று கூறியுள்ளார்.
ரோஜா தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் வீடு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் தொடர்ந்து பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
The Staff Selection Commission (SSC) has officially uploaded the SSC Combined Graduate Level Notification 2025… Read More
இந்திய விமான நிலைய ஆணையத்தின் கார்கோ லாஜிஸ்டிக்ஸ் & அலைடு சர்வீசஸ் கம்பெனி லிமிடெட்டில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. (AAICLAS)என்ன… Read More
தமிழ்நாட்டின் போராட்டம் வெற்றி.. நகை அடகு விதிகளை.. நிறுத்தி வைக்க ஆர்பிஐக்கு மத்திய அரசு பரிந்துரை சென்னை: நகைக் கடனுக்கான… Read More
சென்னை: தமிழ்நாடு முழுவதும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை… Read More
1. அடமானம் வைக்கும் தங்கம் நகையின் மதிப்பில் 75 சதவிகிதம் மட்டும் தான் கடனாக வழங்கப்படும். அதாவது ரூ.1,000 மதிப்புள்ள… Read More
மே 24, 2025 இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய சுழுக்கணி அறிவிப்பு (மூத்த ஆட்கள்) இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள்… Read More