2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி வேலை செய்யக்கூடியலர்கள் ஐந்து கோடியே ஐம்பது லட்சம் பேர் இருந்தாகத் தெரியவந்துள்ளது. ஆனால் 2020 ஆம் ஆண்டில் உலகம் முழுவதிலும் ஐந்து கோடியே 70 லட்சம் தொழிலாளர்களுக்கும் பற்றாக்குறை நிலவும் என்றும் கணிக்கிடப்பட்டுள்ளது. எனவே மக்கள்தொகை உபரியை, மக்கள்தொகை ஆதாயமாக மாற்றிக்கொள்ளும் அரிய வாய்ப்பு நமக்குக் கிடைத்துள்ளது. கிராமப்புறத்து ஏழைக்குடும்பங்களின் இளைஞர்களின் உதிறனை மேம்படுத்தி அதனால் அவர்களின் உற்பத்தித்தினைகப் பெருக்கி, அனைவரையும் உள்ளக்கடக்கிய வளர்ச்சித்திட்டங்களில் அவர்களையும் சேர்த்துக்கொள்ளும் தேசிய இலக்கினை எட்டும் நோக்கத்தில் மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் தீனதயாள் உபாத்ய கிராமப்புறத் திறன் வளர்ச்சித் திட்டத்தைச் செயல்படுத்துகிறது.
முறையான படிப்பறிவு இல்லாமை, சந்தைப்படுத்தக் கூடிய திறன் இன்மை போன்ற காரணங்களால் கிராமப்புறத்து ஏழைமக்கள் நவீனயுகத்தில் போட்டியிடுவதால் மிகவும் சிரமப்படுகிறார்கள். இந்த இடைவெளியை நிரப்புவதற்காக, சர்வதேச தரத்திலான பயிற்சிகளை கிராமப்புற மக்களுக்கு வழங்கும் திட்டங்களுக்கு தீனதயாள் உபாத்யாய கிராமப்புறத் திறன் வளர்ச்சித் திட்டம் நிதி உதவி அளிக்கிறது. பயிற்சிக்குப் பின்னர் வேலைவாய்ப்பு, வேலையில் உயர்வு, வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு போன்றவற்றுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
தொழில்துறையினர் வேண்டுகிற திறன்களைப் பயிற்சி மூலம் வழங்கி, அவ்வாறு பயிற்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருகிற முகமைகளுக்குப் பயிற்சி திட்டத்தின் கால அளவு மற்றும் உண்முறை வசதிகளைப் பொறுத்து ஒரு பயிறசியாளருக்குக் குறைந்தபட்சமாக ரூ. 25,690 முதல் அதிகபட்சமாக ரூ. 1லட்சம் வரை நிதி உதவி அளிக்கப்படும். பயிற்சிக்காலம் குறைந்த 576 மணிநேரம் (மூன்று மாதங்கள்) முதல் 2304 மணிநேரம் (12 மாதங்கள்) வரை இருக்கலாம்.
பயிற்சி அளிப்பதற்கான செலவு, உணவு மற்றும் தங்குமிடச் செலவு (உண்முறைத்திட்டங்களில் மட்டும்) போக்குவரத்துச் செலவு, வேலைக்கு அமர்த்திய பிறகு தரப்படும் ஆதரவிற்கான செலவு, வேலையில் உயர்நிலைக்குப் போவதற்கான செலவு, போன்றவை நிதி உதவியில் அடங்கும்.
தீதையாள் உபாத்யாய கிராம்பபுற திறன் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 250க்கும் மேற்பட்ட பிரிவுகளில் திறன்பயிற்சி அளிக்க நிதி உதவி அளிக்கப்படும். கட்டுமானம், ஆடோமொபைல், தோல்பொருள்கள், மின்சாதனங்கள், குழாய் பொருத்துநர், நவரத்தின கற்கள், ஆபரணங்கள், உணவகம், தங்கும் விடுதி, சில்லறை வாணிகம் போன்ற பல்வேறு தொழில்களில் வேலை செய்லதற்கான திறன்களைத் தருவதாகப் பயிற்சிகள் இருக்க வேண்டும். அவ்வாறு பயிற்சி பெறும் கிராமப்புற அளைஞர்களில் குறைந்து 75% பேருக்கு வேலைநியமனம் உறுதி செய்யப்பட வேண்டும்.
தேசிய தொழிற்பயிற்சி கவுன்சில் (NCVT) மற்றும் துறைகள் திறன் கவுன்சில் போன்ற தேசிய அளவிலான அமைப்புகள் நிர்ணயித்துள்ளவாறு பாடத்திட்டங்கள் பின்பற்ற வேண்டும்.
ஓரு குறிப்பிட்ட துறைக்கான திறன்பயிற்சி அளிப்பதோடு, வேலை கிடைப்பதாகவும், அப்பயிற்சி இருக்க வேண்டும். மேலும் மென்திறன், செயல்முறை ஆங்கில அறிவு, செயல்முறை கணனி அறிவு போன்றவையும் வழங்கப்படவேண்டும்.
இந்த திட்டம் நாடு முழுமைக்கும் ஆனது. தற்சமயம் 13 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள 460 மாவட்டங்களில், 82 பயிற்சி முகமைகள் மூலம் 18 விதமான தொழில் திறன் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
ஆதாரம் : http://ddugky.gov.in/
தமிழ்நாட்டின் போராட்டம் வெற்றி.. நகை அடகு விதிகளை.. நிறுத்தி வைக்க ஆர்பிஐக்கு மத்திய அரசு பரிந்துரை சென்னை: நகைக் கடனுக்கான… Read More
சென்னை: தமிழ்நாடு முழுவதும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை… Read More
1. அடமானம் வைக்கும் தங்கம் நகையின் மதிப்பில் 75 சதவிகிதம் மட்டும் தான் கடனாக வழங்கப்படும். அதாவது ரூ.1,000 மதிப்புள்ள… Read More
மே 24, 2025 இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய சுழுக்கணி அறிவிப்பு (மூத்த ஆட்கள்) இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள்… Read More
ஆண்களுக்கு மாதம் 5000 ரூபாய் உதவித்தொகை - எப்படி பெறுவது? அரசு, பொருளாதார ரீதியாக பின்தங்கிய மற்றும் ஆதரவற்ற நபர்களுக்கு… Read More
பிளஸ் டூ படித்த மாணவர்களுக்குப் பயன்படும் சான்றிதழ்கள் குறித்து மேலும் சில விவரங்கள்: தமிழ்நாட்டைச் சேர்ந்த முதல் தலைமுறை பட்டதாரி… Read More