கொரோனா உளவியல்…..
நம் நாட்டின் கொரொனா எண்ணிக்கை 100 இருந்த போது மக்களிடமிருந்த பயம், இன்று 1,00,000 ஐ தாண்டிய போது இல்லை…… 😎
ஏன்…??!
உளவியல் ரீதியாக பார்த்தால் இதற்கு விடை கிடைக்கும்.
“குப்ளர் ரோஸ் மாடல்” என்று ஒரு தத்துவம் உள்ளது. அதாவது, மனிதனுக்கு ஏதேனும் துக்க நிகழ்வு, இயற்கை பேரிடர், விபத்து போன்றவை நடக்கும் போது, அவன் 5 கட்டங்களை கடந்து செல்கிறான்.
அவை….
1.Denial
2.Anger
3.Bargain
4.Depression
5.Acceptance
1.Denial –
அப்படி ஒரு நிகழ்ச்சி நடந்தது என்பதை நம்ப மறுப்பது. உதாரணத்திற்கு நமக்கெல்லாம் கொரொனா வராது என்று மறுத்தது. அப்படியே வந்தாலும், நமது ஊர் வெயிலில் அது பரவாது என்று மீண்டும் மறுத்தது… 🤫
2.Anger –
கோபம் கொள்வது. உதாரணத்திற்கு , ஊரடங்கு போட்டு விட்டார்களே, வருமானம் பாதிக்குமே, இயல்பு வாழ்க்கை கெட்டு விட்டதே என்று கோபம் கொண்டது. 😠
3. Bargain –
கொரோனா வராமல் இருந்திருக்கலாமே , ஊரடங்கு உத்தரவு போடாமல் விட்டிருக்கலாமே என்று உள்ளுக்குள் புலம்புவது. 😷
4. Depression –
இப்படி ஆகிவிட்டதே என்று மன அழுத்தம், மனச்சோர்வு அடைவது. 😢
5. Acceptance –
கடைசி கட்டம். வேறு வழியில்லாமல் , அதை ஏற்றுக்கொள்வது. அதாவது….. கொரோனாவுடன் வாழப் பழகிக்கொண்டது 😂😂
இந்த 5 நிலைகள், கொரோனாவிற்கு மட்டுமல்ல. மனித வாழ்வில் உண்டாகும் அனைத்து பிரச்சினைகளக்கும் பொருந்தும்.
புத்திசாலி என்ன செய்வான் ?….
“இதுவும் கடந்து போகும்” என்று உணர்ந்து , முதல் நிலையிலிருந்து நேராக ஐந்தாம் நிலைக்கு சென்று விட்டு, தக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு, மன அழுத்தம் இல்லாமல், வாழ்வில் முன்னேற்றம் அடைவான். 💪
ஐந்தாம் நிலைக்கு செல்லமுடியாமல் சிக்கிக்கொள்பவன், மன அழுத்தம் ஏற்பட்டு, மனநோயாளியாகிறான் ! 😴
ஆக,
உணர்வோம்… தெளிவோம்….
தக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு, வெல்வோம்….
இதுவும் கடந்து போகும் !
The Staff Selection Commission (SSC) has officially uploaded the SSC Combined Graduate Level Notification 2025… Read More
இந்திய விமான நிலைய ஆணையத்தின் கார்கோ லாஜிஸ்டிக்ஸ் & அலைடு சர்வீசஸ் கம்பெனி லிமிடெட்டில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. (AAICLAS)என்ன… Read More
தமிழ்நாட்டின் போராட்டம் வெற்றி.. நகை அடகு விதிகளை.. நிறுத்தி வைக்க ஆர்பிஐக்கு மத்திய அரசு பரிந்துரை சென்னை: நகைக் கடனுக்கான… Read More
சென்னை: தமிழ்நாடு முழுவதும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை… Read More
1. அடமானம் வைக்கும் தங்கம் நகையின் மதிப்பில் 75 சதவிகிதம் மட்டும் தான் கடனாக வழங்கப்படும். அதாவது ரூ.1,000 மதிப்புள்ள… Read More
மே 24, 2025 இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய சுழுக்கணி அறிவிப்பு (மூத்த ஆட்கள்) இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள்… Read More