படித்து முடித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்கும் வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் அரசின் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று வேலைவாய்ப்பு உதவி இயக்குனர் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் சு. ஜான்பிலிப்போஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், படித்துவிட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்து ஆண்டுகள் காத்திருக்கும் மனுதாரர்கள் வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுவதற்கு தகுதி உடையவர்கள் ஆவர். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற உள்ள ஆதிதிராவிடர் – பழங்குடியினர் 45 வயது பூர்த்தி அடைந்திருக்கக் கூடாது. இதர வகுப்பினர் 40 வயது பூர்த்தி அடைந்திருக்கக்கூடாது.
தகுதி உடைய மனுதாரர்கள் நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு உடனடியாக நேரில் வந்து வேலை வாய்ப்பற்றோர் உதவித் தொகை விண்ணப்ப படிவத்தை இலவசமாக பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பிற இடங்களில் பெறப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் பூர்த்தி செய்யப்பட்டு வருவாய் ஆய்வாளர் கையொப்பம் மற்றும் முத்திரையுடன் பெறப்பட்ட விண்ணப்பத்துடன் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் தொடங்கப்பட்ட வங்கி கணக்குப் புத்தகம் வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் அனைத்து சான்றுகளுடன் வருகிற மாவட்டம் வாரியாக தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Important Links:
Notification Link: Click Here
Application Link: Click Here
https://drive.google.com/file/d/1sutlDtmCKJ0g8JMbwe9GAyfBuKTU58gV/view?usp=sharing Website Link 1: https://application.tahdco.com/ Website Link 2 : https://fast.tahdco.com/ website Link 3 : http://tahdco.com/tamil/index.php… Read More
சென்னை: பலரும் பல வருடங்களாக சில பகுதிகளில் குடியிருந்து வருவார்கள். ஆனால் அவர்களுக்கு பட்டா கிடைத்திருக்காது. பட்டாவை பொறுத்தவரை மக்கள்… Read More
தமிழகத்தில் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருவதால் விவசாயிகள் தங்களின் விளை நிலங்களில், பண்ணைக்குட்டைகள் (Farm Pond) அமைத்து மழை… Read More
சென்னை: மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க, வரும் 21ம் தேதி வரை… Read More
Child Protection Scheme | இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்தினருக்கு ரூ.50,000 கொடுக்கும் தமிழ்நாடு அரசின் திட்டத்.. தமிழ்நாடு… Read More
கிரெடிட் கார்டுகள் மூலம் MSME-களுக்கு கடன்கள்; யாருக்கு, எவ்வளவு கிடைக்கும்?நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2025 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில்,… Read More