பல்வேறு மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு வெளியே செல்பவர்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் வாயிலாக ஒவ்வொரு ஊராட்சியில் உள்ள பொதுமக்களுக்கு அனுமதி சீட்டு வழங்க மூன்று வண்ண கலர்களில் அனுமதிச்சீட்டு ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு தங்களுக்கு வழங்கப்படும் அனுமதி சீட்டில் குறிப்பிட்டுள்ள திறமைகள் மற்றும் குறிப்பிட்ட நேரத்திற்குள் தங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கி வருவதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்த அனுமதி சீட்டு வந்து மூன்று வண்ணங்களில் உள்ளது.
1. பச்சை வண்ணத்தில் உள்ள அனுமதிச்சீட்டு உள்ளவர்கள் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில்,
2. நீல வண்ணத்தில் உள்ள அனுமதி சீட்டு உள்ளார்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் .
3. இளஞ்சிவப்பு ரோஸ் வண்ணத்தில் உள்ள அனுமதிச்சீட்டு இருப்பவர்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும், காலை 6 மணி முதல் மதியம் 1 மணிவரை மட்டுமே வெளியே செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
மேற்குறிப்பிட்ட நேரம் மற்றும் நாட்கள் அவசரத்திற்கு விதிவிலக்கு அளிக்கப்படும் இந்த அனுமதி சீட்டை வைத்திருப்பவர் ஒருவர் மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர அனுமதிக்கப்படும் 15 வயதிற்கு மேல் 60 வயதில் வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மட்டுமே இந்த அட்டையைப் பயன்படுத்தி வெளியே வர அனுமதிக்கப்படுவர்.
இந்த அனுமதி சீட்டுடன் வெளியில் வருபவர்கள் கண்டிப்பாக தங்களுக்குரிய ஏதேனும் அடையாள அட்டையுடன் எடுத்து வரவேண்டும்.
இந்த நிலையில் 2020 ஏப்ரல் 6 ஆம் தேதி அன்று அரசு அளித்துள்ள அமைப்புசாரா தொழிலாளர்கள் நிவாரணத் தொகையாக ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் தெரிவித்திருக்கிறார்கள்.
அமைப்பு சாரா தொழிலாளர் நல வரியம் என்ன பார்த்தால்
சலவைத் தொழிலாளர் நலவாரியம்
முடி திருத்துவோர் தொழிலாளர் நல வாரியம்
பனைமரத் தொழிலாளர் நல வாரியம்
கைவினைத் தொழிலாளர் நல வாரியம்
கைத்தறி பட்டு நெய்யும் தொழிலாளர் நல வாரியம்
தோல் பதனிடும் தொழிலாளர் நல வாரியம்
மண்பாண்ட தொழிலாளர் நல வாரியம்
வீட்டுப் பணியாளர் தொழிலாளர் நல வாரியம்
நெசவாளர் தொழிலாளர் நலவாரியம்
சமையல் தொழிலாளர் நல வாரியம்
கிராமிய கலைஞர் நலவாரியம்
இந்த தொழிலாளர் நல வாரிய களுக்கு ரூபாய் ஆயிரம் நிவாரண தொகையாக வழங்கப்படும் என தமிழக முதல்வர் நேற்று அறிவித்தார்.
தனிநபர் சுகாதாரத்துறை கடைப்பிடிக்க வேண்டும் இந்த நிபந்தனைகளை மீறி வெளியே வருபவர்கள் மீது கண்டிப்பாக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி… Read More
வேலை வாய்ப்பு இணையதளம் விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.… Read More
The Arulmigu Subramanyaswamy Temple Recruitment Thiruttani invites applications for Driver posts on Contract basis. Eligible… Read More
நிறுவனம்அருள்மிகு பட்டினத்தார் திருக்கோயில்வகைதமிழ்நாடு அரசு வேலைகாலியிடங்கள்04பணியிடம்சென்னை, தமிழ்நாடுஆரம்ப தேதி25.09.2025கடைசி தேதி25.10.2025 தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை, அருள்மிகு… Read More
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்ப இன்று… Read More
தமிழ்நாடு ஊராட்சித் துறையில் அலுவலக உதவியாளர், எழுத்தர், ஓட்டுநர் வேலை; ரூ.71,900 வரை சம்பளம் - முழு விவரம்தமிழில் படிக்க… Read More