பான்கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கா விட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என வருமானவரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பான்கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று ஏற்கனவே பலமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து கால அவகாசமும் வழங்கப்பட்டு இருக்கிறது. இறுதி வாய்ப்பாக இந்த மாதம் 31-ந் தேதிக்குள் பான்கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டு இருந்தது. இது குறித்து வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது: பான்கார்டு வைத்து இருப்பவர்கள் அனைவரும் இந்த மாதம் (மார்ச்) 31-ந் தேதிக்குள் ஆதார் எண்ணை அதில் இணைக்க வேண்டும்.இல்லையென்றால் அவர்களுடைய பான்கார்டு செயல்படாமல் முடங்கி விடும்.
ஆதார் கார்டு எண்ணை பான்கார்டுடன் குறிப்பிட்ட தேதிக்குள் இணைக்காவிட்டால் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் செலுத்த வேண்டியது இருக்கும். ஏப்ரல் 1-ந் தேதி முதல் வேறு பல சிக்கல்களையும் எதிர்கொள்ள வேண்டியது இருக்கும். பான்கார்டை அடையாள அட்டையாக பயன்படுத்தலாம். ஆனால், 50 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக பணபரிமாற்றத்துக்கு பான் கார்டை பயன்படுத்தும் போது அதற்கு அபராதம் செலுத்த வேண்டும். இந்த மாதம் 31-ந் தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்காத பான்கார்டு முடக்கப்படும். என்றாலும் ஆதார் எண்ணை இணைத்தால் மீண்டும் செயல்பட தொடங்கிவிடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம், கடந்த ஆண்டு செப்டம்பரில், ஆதார் திட்டம் அரசியலமைப்பு ரீதியாக செல்லுபடியாகும் என்று அறிவித்ததோடு, வருமான வரி தாக்கல் செய்வதற்கும், பான் ஒதுக்கீடு செய்வதற்கும் இது அவசியம் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Important Link
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State Bank of India) வங்கியில் உங்களுக்கு கணக்கு இருக்கிறதா? குறிப்பாக சேவிங்ஸ் அக்கௌன்ட்… Read More
தெருவோர கடை வைத்திருப்பவர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவும் வகையில், ரூபாய் 30,000 வரை கடன் பெறும் வகையிலான கடன் அட்டை… Read More
UPI Payments | நீங்கள் UPI மூலம் பணம் செலுத்துகிறீர்களா?.. ஆனால், பிப்ரவரி 1ஆம் தேதி முதல் உங்கள் பேமெண்ட்… Read More
சென்னை: ஓய்வு காலத்துக்கு பிறகும், நிதி பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய பென்ஷன் திட்டமான அடல் பென்ஷன் யோஜனா (Atal Pension… Read More
சென்னை: மத்திய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டம் நாடு முழுக்க பிரபலமாக இருக்கும் திட்டங்களில் ஒன்றாகும். இந்த திட்டத்தின் கீழ்… Read More
Reserve Bank of India Latest News: வரும் 2025 புத்தாண்டு (ஜனவரி 1) முதல் மூன்று வகையான வங்கிக்… Read More