Advertisement
cinima news

பிரசாந்தின் இந்த நிலைமைக்கு காரணமே சத்யராஜ்தான்! நீண்ட நாள் ரகசியத்தை போட்டுடைத்த தியாகராஜன்

Actor Prasanth: 90களில் ஒரு சார்மிங் ஹீரோவாக விஜய், அஜித்தையே ஓவர் டேக் செய்து முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் பிரசாந்த். அழகான தோற்றம்,  நல்ல நிறம் என பெண்களை மயக்கும் ஒரு ஆணழகனாக அந்த நேரத்தில் வலம் வந்து கொண்டிருந்தார்.

தொடர்ந்து காதல் கதைகளை மையப்படுத்தி அமையும் படங்களில் நடித்து இளசுகளை வெகுவாக கவர்ந்தவர் பிரசாந்த். தமிழ் நாடு மட்டுமில்லாமல் மலேசியா மற்றும் சிங்கப்பூரில் அதிகம் ரசிகர்களை கொண்ட நடிகராகவும் பிரசாந்த் இருந்து வந்தார்.

ஆனால் முதலில் பிரசாந்தை சினிமாவிற்குள் கொண்டு வரவேண்டும் என்பது தியாகராஜனின் எண்ணம் இல்லை என அனைவருக்கும் தெரிந்த விஷயம். அவரை மருத்துவராக்கி பார்க்க வேண்டும் என்றுதான் எண்ணியிருக்கிறார்.

சொல்லப்போனால் ஆரம்பத்தில் தியாகராஜனுக்கு இப்படி ஒரு மகன் இருக்கிறார் என்பதே சில பேருக்கு தெரியாதாம். அதை வெளிச்சம் போட்டு காட்டியவர் நடிகர் சத்யராஜ்தானாம். தியாகராஜனை பார்க்கும் போது இன்னும் திருமணமாகாத ஒரு இளைஞர் போலத்தான் இருக்கிறார். ஆனால் அவருக்கு இப்படி ஒரு மகன் இருக்கிறார் என்பது எங்களுக்கு தெரியாது என சத்யராஜ் பல பேரிடம் கூறினாராம்.

அதை அறிந்து பிரதாப் போத்தன் தன் படத்தில் பிரசாந்தை நடிக்க வைக்க தியாகராஜனிடம் கேட்டாராம். ஆனால் அவர் மருத்துவத்துக்கு படிக்க போகிறார் என்று சொல்லி அனுப்பிவிட்டாராம். அதன் பிறகு  பாலுமகேந்திரா வந்து கேட்டாராம். அவரிடம் நோ சொல்லி அனுப்பி விட்டாராம்.

அதனை அடுத்து ராதாபாரதி தியாகராஜனிடம் 12 நாள்கள் மட்டும் நடித்துக் கொடுத்து விட்டு போகச் சொல்லுங்கள் என்று வற்புறுத்தி கேட்டதனால் வெளிவந்த படம்தான் ‘வைகாசி பொறந்தாச்சு’. படம் வெளியாகி பார்க்கும் போது சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியிருக்கிறது. அதனை தொடர்ந்து பிரசாந்த் சினிமா பக்கமே சென்று விட்டதாக தியாகராஜன் கூறினார்.

இதற்கிடையில் பாலுமகேந்திரா தியாகராஜனிடம் வந்து ‘ நான் என் படத்தில் நடிக்க கூப்பிடும் போது முடியாது என சொல்லிவிட்டு இப்பொழுது வேறொரு படத்திற்கு  மட்டும் சம்மதம் சொல்லியிருக்கிறாய்’ என கேட்டாராம். அதனால் அவருக்காக பிரசாந்த் நடித்த படம் ‘வண்ண வண்ணப் பூக்கள்’ திரைப்படம் என்று கூறினார்.

admin

Recent Posts

மகளிர் உரிமை தொகை போல் அடுத்த திட்டம்.. பெண்களுக்கு ரூ.5 லட்சம் தரும் அரசு.. விண்ணப்பிப்பது எப்படி?

https://drive.google.com/file/d/1sutlDtmCKJ0g8JMbwe9GAyfBuKTU58gV/view?usp=sharing Website Link 1: https://application.tahdco.com/ Website Link 2 : https://fast.tahdco.com/ website Link 3 : http://tahdco.com/tamil/index.php… Read More

3 hours ago

தமிழக அரசு தரும் இலவச பட்டா பெற விண்ணப்பிப்பது எப்படி ? ரூல்ஸ் தெரிந்தால் இப்போது சூப்பர் வாய்ப்பு

சென்னை: பலரும் பல வருடங்களாக சில பகுதிகளில் குடியிருந்து வருவார்கள். ஆனால் அவர்களுக்கு பட்டா கிடைத்திருக்காது. பட்டாவை பொறுத்தவரை மக்கள்… Read More

7 hours ago

மழை நீரை விளைநிலங்களிலேயே சேமிக்க பண்ணைக்குட்டைகள்

தமிழகத்தில் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருவதால் விவசாயிகள் தங்களின் விளை நிலங்களில், பண்ணைக்குட்டைகள் (Farm Pond) அமைத்து மழை… Read More

3 days ago

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க விண்ணப்பிக்கலாம்

சென்னை: மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க, வரும் 21ம் தேதி வரை… Read More

3 days ago

இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்….!

Child Protection Scheme | இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்தினருக்கு ரூ.50,000 கொடுக்கும் தமிழ்நாடு அரசின் திட்டத்.. தமிழ்நாடு… Read More

1 week ago

கிரெடிட் கார்டுகள் மூலம் MSME-களுக்கு கடன்கள்; யாருக்கு, எவ்வளவு கிடைக்கும்?

கிரெடிட் கார்டுகள் மூலம் MSME-களுக்கு கடன்கள்; யாருக்கு, எவ்வளவு கிடைக்கும்?நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2025 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில்,… Read More

2 weeks ago